முதன்முதலாக விமானம்

முதன்முதலாக விமானம் மூலம் வானத்தில் பறந்தவர்கள் யாரென்று கேட்டால் பெரும்பாலோர் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள் எனப் பதில் சொல்லுவார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல.உலகில் முதன்முதலாக விமானம் ஒன்றைத் தயாரித்து அதன் மூலம் வானத்தில் பறந்துகாட்டியவர் ஷிவாகர் தல்பாதே என்கிற இந்தியர்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

1895-ஆம் வருடம் மும்பையைச் சேர்ந்த ஷிவாகர் தல்பாதே காற்றைவிடவும் எடைகூடியதொரு விமானத்தைத் தயாரித்து அதற்கு “மருட்சகா (Marutsakhā) என்று பெயரும் வைத்தார். பின்னர் அந்த விமானம் மும்பையின் செளபாத்தி கடற்கரையில் வெற்றிகரமாகப் பறக்கவிடப்பட்டது.ஆனால் ஒரு சிலைவணங்கி ஹி!ந்து ஒருவன் வெற்றிகரமாக விமானம் ஒன்றினை உருவாக்கி அதனை விண்ணில் பறக்க வைத்ததனை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் விரும்பவில்லை. ஷிவாகருக்கு எல்லா விதங்களிலும் அவர்கள் தொல்லைகள் கொடுத்தார்கள். விமானம் தயாரிப்பதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதனைத் தடுக்க முனைந்தார்கள். இருந்தாலும் ஷிவாகர் தல்பதே மிகுந்த சிரமத்துடன் அந்தப் பணத்தைத் திரட்டினார்.

தடைகளையெல்லாம் வென்று அவரது விமானம் செளபாத்தி கடற்கரையில் வெற்றிகரமாகப் பறக்க வைத்தார். பழமையான “வ்யாமானிக சாஸ்த்ரா”வின் அடிப்படையில் கட்டப்பட்ட அந்த விமானத்தில் பாதரசம் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. அதனைக் காரணம் காட்டி, ஷிவாகர் தல்பதே பாதரசத்திலிருந்து வெடிகுண்டுகள் தயாரித்ததாகப் பொய்யான குற்றம் சுமத்தி அவரைச் சிறையில் அடைத்தார்கள் பிரிட்டிஷ்காரர்கள். ஷிவாகர் பல ஆண்டுகள் சிறையில் கழித்தார். அவர் சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் தனது விமானத்தைப் பறக்க வைப்பதற்கு முன்னால் ரைட் சகோதரர்கள் அவர்களின் விமானத்தை விண்ணில் பறக்கவைத்திருந்தார்கள்.

தன்னுடைய கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்காத மனவருத்தத்துடன் தல்பாதே 1916-ஆம் வருடம் மரணமடைந்தார்.அன்றைய காலகட்டத்தில் பாதரசத்தை விமான எரிபொருளாக உபயோகிக்க முடியாது என பல விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்தது. இருப்பினும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா இன்றைக்கு அதன் விண்கலங்களைப் பறக்கவைக்க பாதரசத்தை உபயோகித்து வருகிறது என்பதனை வெளியில் எவரும் அதிகம் பேசுவதில்லை. அந்த உண்மை வெளிவந்தால் ஷிவாகர் தல்பதேக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டிய நிலை வரலாம்.வெள்ளைக்காரனை விட ஒரு கறுப்புத்தோல் இந்!தியன் அறிவாளியாக முடியுமா என்ன?குறைந்தபட்சம் நாமாவது ஷிவாகர் தல்பதேயின் சாதனையைக் கொண்டாடுவதுதானே சரியாக இருக்கும்? 

சமாதானம் என்னும் ஆயுதம்

முதல் அணுகுண்டை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார்  டாக்டர் ராபர்ட் ஒப்பன் ஹீமர்.  இவர் ஒரு நாள் அணுகுண்டு சம்பந்தமாக அமெரிக்க செனட் சபையில் விளக்கிக் கொண்டிருந்தார்.  அப்போது ஒருவர் மனித இனத்துக்கே அழிவைத்தரும் பயங்கரமான ஆயுதத்தை கண்டுபிடிக்கிறீர்களே…… இதிலிருந்து தப்ப ஏதாவது ஆயுதம் உண்டா……….. எனக் கேட்டார்.

ஓ இருக்கிறதே  என்றார்   என்ன ஆயுதம் அது  என்று ஆர்வமாக கேட்டார் மற்றொருவர்.. ஹீமர் சிரித்தபடியே  சமாதானம் என்று சொன்னார்   இன்று நாடுகளுக்கு இடையே யுத்தங்கள்  நடக்கின்றன   அது மட்டுமா?   நாடுகளுக்குள்ளே பல்வேறு முரண்பாடுகளால் பல பிரச்னைகள் எழுகின்றன.  இவற்றை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சவாலான காரியமாக உள்ளது.  இதற்கு சரியான தீர்வு சமாதானம் ஒன்றே.

விமர்சனத்தை வரவேற்போம்

இங்கிலாந்தை சேர்ந்த இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின் குரங்கின் வழியாக மனிதன் தோன்றினான் என்ற பரிணாமத் தத்துவத்தை சொன்னார்.  அவரை கேலிசெய்ய விரும்பிய ஒருவர்  உங்களது தோற்றத்தை வைத்துத்தானே இந்த தத்துவத்தை சொன்னீர்கள் என டார்வினிடம் கேட்டார்

சரியாக சொன்னீர்கள்  எனது தத்துவத்துக்கு நானே எடுத்துக்காட்டாக இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது  என்றார் டார்வின்.  இதைக் கேட்டவர் அவமானம் தாங்காமல் தலை குனிந்தார்.  பார்த்தீர்களா……….தன் மேல் விழுந்த விமர்சனத்தை எப்படி நிறைவாக மாற்றினார் என்பதை   இதுபோல் நீங்களும் விமர்சனத்தை வரவேற்க கற்றுக் கொள்ளுங்கள்.

ஒளிர்கிறேன்

 பேட்டரி தேவை இல்லை. மின்சாரத்தில் சார்ஜ் செய்ய வேண்டாம்.  வெறுமனே கையில் எடுத்தால்  போதும்……………… அபாரமாக ஒளிர்கிறது.  ஒரு டார்ச் விளக்கு.  பிடித்திருப்பவரின் உடல் வெப்பம் தேவையான மின்சாரத்தை வழங்கும்.  ஆச்சரியமாக இருக்கிறதா? உடல் இயக்கத்தில் மின்சாரம் உற்பத்தி ஆவதை 15 வயதில் நிரூபித்தான் ஆன் மகோசின்ஸ்கி என்ற பெண்.

வட அமெரிக்கா நாடான கனடாவில் மைக்கேல் பல்கலைக்கழக உயர் நிலைப்பள்ளியில் படித்தபோது 2014ல் கண்டுபிடித்தார்.  மனித உடல் இயக்கத்தில் மின்சார பல்பு ஒளிரும் என்பதை நிரூபித்தார். உடல் சக்தியால் 100 வாட்ஸ் திறனுள்ள மின் விளக்கை ஒளிர செய்தார்.  இவரது கண்டுபிடிப்பை அங்கீகரித்து  பணப்பரிசு வழங்கியது கூகுள் நிறுவனம்.  அத்துடன் தென் அமெரிக்க நாடான ஈக்வெடார் கலப்பாகஸ் தீவுக்கு சுற்றுலா அழைத்துச் சென்று பாராட்டியது.

 தகவல் நன்றி    சிறுவர் மலர். 

உழைப்பு உயர்வு தரும்

ஜார்ஜ் ஸ்டீபன்சன் என்றதும் நினைவுக்கு வருவது அவர் கண்டுபிடித்த புகைவண்டி தான்.  அதற்கு பின்னால் துன்ப அனுபவங்கள் பல உண்டு.  வறுமையில் வாடியதான் ஸ்டீபன்சன் ஆடு மாடுகளை மேய்க்கச் சென்றுவிட்டார்.  அதில் வரும் பணத்தைக் கொண்டு இரவு நேரப் பள்ளியில் படித்தார்.  அறிவியல் பாடத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்.

செருப்பு தைக்க கற்ற அவர் அதில் கிடைத்த வருமானத்தில் சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செய்து கொண்டார். பின்னர் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் பணிக்கு சேர்ந்து யாருமே செய்ய முடியாத பழுதான இயந்திரத்தை சரிசெய்தார்.  அதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.  அவருக்கு பெருந்தொகை ஒன்றை நிர்வாகம் கொடுத்தது.  அதைக் கொண்டு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.  லட்சியத்துடன் பாடுபட்ட ஸ்டீபன்சன் புகைவண்டி என்ஜினைக் கண்டுபிடித்தார்.  உண்மை நேர்மை உழைப்பு கொண்ட மனிதர்களை ஆண்டவர் ஒரு போதும் கைவிடுவதில்லை.

வைனுபாப்பு ஆய்வு மையம்

ஜவ்வாது மலைத் தொடரில் அமைந்துள்ளது காவலூர் விண்வெளி ஆய்வு மையம். வேலூர் மாவட்டம்   ஆலுங்காயம் அருகே கடல் மட்டத்திலிருந்து 2700 அடி உயரத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.  தமிழகத்தில் முதன் முதலாக விண்வெளி ஆய்வு மையம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானிலில் தான் அமைக்கப்பட்டது.  ஆங்கிலேயர் வசிப்பதற்கேற்ற தட்பவெப்ப  நிலை இருந்ததால் அவ்வாறு அமைந்தது.  அது ஆய்வுக்கு பொருத்தமில்லாத இடம் என்றார் விண்வெளி ஆய்வு அறிஞர் எம் கே வைனுபாப்பு.  ஆய்வுக்கு பொருத்தமான ஜவ்வாது மலையில் காவலூர் கிராமத்தை தேர்ந்தெடுத்தார். ஆண்டில் 220 இரவுகள் வரை விண்மீன்கள் மற்றும் கோள்கள் தொடர்பான ஆய்விற்கு உகந்த இடமாக இது உள்ளது.

இங்கு ஆய்வுபணிகள் மாலை 6 மணிக்கு பின் துவங்கும். விண்வெளியில் துலங்கும் பலவித விண்மீன்கள் குறித்து ஆய்வுகள் நடக்கின்றன. பூமியிலிருந்து அவற்றின் தொலைவு வயது வெப்ப அளவு காற்றின் தன்மை போன்ற விவரங்களை அறியும் வகையில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.  ஆய்வுக்கு உட்படுத்தப்படும் குறிப்பிட்ட விண்மீனுக்கு தனிப்பெயர் எண் வழங்கப்படுகிறது.  ஆராய்ச்சியின் முடிவில் தயாரிக்கப்படும் அறிக்கை அமெரிக்காவில் உள்ள சர்வதேச அறிவியல் ஆய்வு மைய ஒப்புதல் பெற்ற பின்னரே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

இந்த ஆய்வு மையம் பல சாதனைகள் புரிந்துள்ளது. உலக அளவில் யுரேனஸ் கிரகத்துக்கு ஒளி வளையம் இல்லை என கனிக்கப்பட்ட ஆய்வு முடிவு தவறானது. யுரேனஸ் கிரகத்து ஒளி வளையம் உண்டு என இந்த மையம் உறுதி செய்துள்ளது.  சனி கிரகத்துக்கு ஐந்தாவது ஒளி வளையம் இருப்பதையும் உறுதி செய்துள்ளது.  ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய தொலை நோக்குக் கருவி இங்குதான் அமைந்துள்ளது. இது 93 அங்குல விட்டம் உடையது.  இந்த மையத்தை 20 ஆண்டு கால உழைப்பால் உருவாக்கினார் அறிஞர் வைனுபாப்பு   அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவரது பெயரே இந்த மையத்திற்கு 1986ல் சூட்டப்பட்டது.

தகவல் நன்றி    அ யாழினி பர்வதம்    சிறுவர் மலர்.

மத நல்லிணக்க மகான்

 மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் சிறுவனாக இருந்த போது நடந்த சம்பவம்.  அப்துல் கலாமும் ராம நாதனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் வகுப்பறையில்  ஒன்றாக அமர்வது வழக்கம்.  ராம நாதன் உச்சிக்குடுமி வைத்திருந்தார். குல்லா அணிந்திருந்தார் கலாம்.

இதைக் கண்ட புதிய ஆசிரியர் உச்சிக்குடுமியும் குல்லாவும் ஒன்றாக அமர்வதா எனக் கொதித்தார். கலாமை கடைசி பெஞ்சுக்கு மாற்றினார். இதை அறிந்தார் ராம நாதன் தந்தை லட்சுமண சாஸ்திரி. அந்த புதிய ஆசிரியரை வரவழைத்து பிஞ்சு மனதில் துவேஷத்தையும் விஷத்தையும் விதைக்கலாமா இது தவறு என கடுமையாக கண்டித்தார். தவறை உணர்ந்த ஆசிரியர் ஒன்றாக அமர வைத்து நட்பு தொடர வழி வகுத்தார்.

கலாம் மீது அளவற்ற அன்பு உள்ளவர் அறிவியல் ஆசிரியர் சிவசுப்ரமணிய ஐயர்.  அவரது அறிவியல் திறமையை ஊக்குவித்தவர்.  ஒரு நாள் கலாமை வீட்டிற்கு சாப்பிட அழைத்து சென்றார் சிவசுப்ரமணிய ஐயர். ஆனால் அவரது மனைவி உணவு பரிமாற மறுத்துவிட்டார். அதனால் ஆசிரியரே பரிமாறினார்.  அடுத்த வாரம் மீண்டும் அழைத்துச் சென்றார்  என்ன ஆச்சர்யம்………..இந்த முறை ஆசிரியரின் மனைவியே கலாமுக்கு உணவு பரிமாறினார்.

படிக்கும் காலத்திலேயே மத நல்லினக்கத்திற்கு இலக்கணமாக திகழ்ந்தார் கலாம்.  வாழும் காலம் வரை அதை கடைப்பிடித்தார்.  இந்திய குடியரசு தலைவராக உயர்ந்தார்.  ராமேஸ்வரத்தில் அக்டோபர் 15    1931ல் பிறந்தார் கலாம். இந்திய வரைபடத்தில் உச்சியில் இருக்கும் மேகாலயா மானிலம் சில்லாங் நகரில் ஜூலை 27   2015ல் காலமானார்..

மைக்கேல் பாரடே

மின்னாற்றலை உற்பத்தி செய்யும் டைனமோ என்ற கருவியைக் கண்டுபிடித்தார் மைக்கேல் பாரடே  ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில் 1791 ல் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார்.  புத்தகம் பைண்ட் செய்யும் நிறுவனத்தில் உதவியாளராகப் பணியை துவங்கினார். அங்கு அறிவியல் தொடர்பான நூல்களை படித்து அறிவை வளர்த்தார்.  இங்கிலாந்து வேதியியல் அறிஞர் ஹம்ரி டேவியை மானசீக குருவாக ஏற்றார்,அவரது சொற்பொழிவு எங்கு நிகழ்ந்தாலும் தவறாமல் கேட்பார்.  அவரிடம் உதவியாளராக்ச் சேர தீர்மானித்தார்.  அதற்கு ஒரு திட்டம் தீட்டினார்.

டேவியின் சொற்பொழிவுகளை கவனமாக குறிப்பு எடுத்தார். பின் நோட்டுப் புத்தகத்தில் அழகிய கையெழுத்தில் பதிவு செய்தார். அதை எழிலாக பைண்ட் செய்து ஹம்ரி டேவிக்கு அனுப்பி வைத்தார்.  இதைக் கண்டு வியப்படைந்தார் ஹம்ரி டேவி. நெகிழ்ச்சியுடன் ஒரு கடிதம் எழுதி மைகேல் பாரடேவை வரவழைத்தார்.  அவரது விஞ்ஞான ஆர்வத்தைக் கண்டு உதவியாளராக சேர்த்துக்கொண்டார்.  முயன்ரு கற்றுத்தெளிந்தார் பாரடே…………….. கடும் முயற்சியால் மின்னாற்றல் உற்பத்திக்கான டைனமோ கருவியைக் கண்டுபிடித்தார்.  தலைசிறந்த விஞ்ஞானியானார்.மனித சமுதாயத்துக்கு உதவி புகழ் பெற்றார் பாரடே……………….

தகவல் நன்றி   சிறுவர் மலர்.

விஞ்ஞானி சந்திரசேகர்

சந்திராவுக்கு அக்கா தம்பி தங்கை என பத்து பேர் அந்த வீடே குட்டி பால்வாடி மாதிரி இருக்கும்.  எப்போதும் யாராவது எவரையாவது அடித்து சண்டை போட்டுக் கொண்டே இருப்பர்.  ஒரு நாள் சந்திராவுக்கும் அவன் அக்காவுக்கும் பொம்மைகள் வாங்கி தந்தார் அப்பால் அதை அக்கு வேறு ஆணிவேறாக உடைத்து சுக்கு நூறாக்கிவிட்டான் சந்திரா.  பின் நைசாக அக்காவின் பொம்மையை எடுத்தான். அதனால் அவளுடன் சண்டை மூண்டது. கடைசியில் உடைந்த பொம்மை சந்திராவுக்கும் கிடைத்தது.

ஒரு நாள் அம்மா காபி கொடுக்க மறந்து விட்டார் இதற்காக சந்திரா ஒரு நாடகம் நடத்தினான்.  சீச்சீ…………….. இந்த பழம் புளிக்கும்………………. என்ற கதையை நாடகமாக மாற்றினான்.  நாடகத்தின் இறுதியில் வீட்டிலிருந்த  10 வாண்டுகளும் காட்டை விட்டு நரி ஓடுவது போல வீட்டு அறைகலுக்குள் ஓடி கலகலப்பை ஏற்படுத்தினர்.  புளிக்கும்…………..காபி காபி என்ரு கத்தி கலகம் செய்தனர்.  அந்த காலத்தில் ஆறு வயதில் தான் பள்ளி போகவேண்டும். அதுவரை பெற்றோரிடம் தான் படிக்க வேண்டும். அம்மா தமிழும் ஆங்கிலமும் சொல்லிக் கொடுத்தார்.  அப்பா கணக்கு சொல்லிக் கொடுத்தார்.  அந்த வீட்டில் 10 பேருமே படிப்பில் கில்லாடிகள். சந்திராவுக்கு கணக்கு என்றால் ரொம்ப பிடிக்கும். அப்பா 20 கணக்கு போட சொன்னால் இவன் 40 போட்டு வைப்பான். எதுவும் தப்பாக இருக்காது.  சந்திராவை பள்ளியில் 1 ம் வகுப்பு சேர்க்க சென்றபோது  நுழைவுத்தேர்வு வைத்தனர்.  அவன் எழுதியதைத் திருத்திய ஆசிரியர் பிரமித்தார். அவனை 3ம்  வகுப்பில் சேர தகுதி பெற்றுள்ளதாக பரிந்துரைத்தார். ஒரு வழியாக இரண்டாம் வகுப்பில் சேர்த்தனர். படிப்ப்பில் கெட்டிக்காரன்  தமிழ் ஆங்கிலம் கணக்கு அத்துப்படியாக இருக்கும்  ஆனால் வரலாறு புவியியல் பாடங்களைத் தொட்டுக்கூட பார்த்தது இல்லை. அவற்றை படிக்க இயலாமல் திணறினான். 

பொதுவாக முழு ஆண்டு தேர்வு விடுமுறையில் சிறுவர்கள் காலையில் தாமதமாக தான் எழுவர். உடனே விளையாட போவர். பசிக்கும்போது தான் வீடு திரும்புவர்.  அல்லது அம்மா அழைத்து சாப்பிட வைத்தால் தான் உண்டு.  ஆனால் சந்திரா வித்தியாசமாக திட்டமிடுவான்  கோடை விடுமுறையில் அடுத்த ஆண்டு புத்தகங்களை படித்து முடித்து விடுவான். கணக்கு புதிர்களை விடுவிப்பதில் தீராத ஆர்வம் உள்ளவன்.  ஆசிரியர்கள் அவன் அபரிமித அறிவைக் கண்டு வியந்தனர்.  ஒரு ஆசிரியர் கேட்டார்  சந்திரா………….உனக்கு எந்த காய் பிடிக்கும்………… வெண்டைக்காய் ஐயா…………உடனே வகுப்பறையில் அதை அறிமுகப்படுத்தும் வகையில் பசங்களா………..கணக்கில் நீங்களும் நூறு மதிப்பெண் வாங்களும்னா  தினமும் வெண்டைக்காய் சாப்பிடுங்க……….என்றார்.   சந்திராவின் தாத்தா கணக்கு பிரியர்  கணக்குப் புத்தகங்களை வாங்கி குவித்து வைத்திருந்தார். பெரும்பாலான நேரம் அந்த புத்தக புதையலோடுதான் இருப்பான்.  அவற்றை படித்து அறிவை விசாலமாக்கினான். 

வகுப்புகளில் முதல் மாணவனாகவந்தான்  அவன் ஐந்தாம் வகுப்பு படித்தபோது கடற்கரை ஓரமாக சென்றான்.  கடலும் வானமும் ஈர்த்தன.  ஆனால் மூளைக்குள் கணக்கு பற்றிய சிந்தனையே ஓடியது. திடீரென்று வருங்காலத்தில் ஐன்ஸ்டீன் போலவே ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். அப்போது அவனுக்கு ஒன்பது வயது தான் ஆகியிருந்தது. இந்த வயதில் விஞ்ஞானிகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பது அரிதிலும் அரிது. அந்த வயதில் மற்ற சிறுவர்கள் போல் சந்திரா விளையாடுவது கிடையாது. புத்தகங்களுடன் தான் இருப்பான்.  கணக்கைப் போலவே அவனுக்கு ஆங்கிலமும் பிடிக்கும். ஆங்கில இலக்கியத்தை உரக்கப் படிப்பான். புத்தகமும் பையுமாக அலைந்ததை பார்த்த நண்பர்கள் ஏண்டா……..மாங்கு மாங்குன்னு படிக்கிற ……… பரிட்சை கூட இல்லையே ………என்று கேட்பர்.  அதற்கு நம்முடைய வேலை முழு ஊக்கத்தோடும் உழைப்போடும் அறிவைத் தேடி அலைவது. அப்படி செய்வதால் மரியாதை புகழ் போன்றவை தேடி வரும் …………….. என்பான்.

இவர்தான் இயற்பியலில் அரிய கண்டுபிடிப்பு நிகழ்த்தியதற்காக 1983 ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சந்திரசேகர் தான் அந்த வெண்டைக்காய் விரும்பி.

தகவல் நன்றி சிறுவர் மலர்.

செயற்கையாய் சுவாசித்து வானில் பறக்கலாம்.

மலை ஏற்ற வீர்ர்கள் விமான ஓட்டிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படும்  இதை சரி செய்ய தற்காலிக மருந்துகள் உள்ளன. ஆனால் செயற்கை சுவாசமளிக்கும் கருவி பக்க விளைவை ஏற்படுத்தாமல் மென்மையாக காப்பாற்றும்.  நுரையீரலில் பணியை அந்த கருவி தற்காலிகமாக செய்யும்.  உயிர் காக்கும் அந்த கருவியை கண்டுபிடித்த விஞ்ஞானி பாரஸ்ட் பேர்ட்  அமெரிக்காவில் ஜூன் 9 1921ல் பிறந்தார்.  சிறுவயதிலேயே பறவைகளை கூர்ந்து கவனிப்பார். அவை பறக்கும் விதம் கண்டு வியந்து சிந்திப்பார்.

அவரது தந்தை போர் விமானி அவருடன் விமான தளங்களுக்கு சென்றார். விமானத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. வித விதமான விமான பொம்மைகளை வாங்கி கொடுத்தார் தந்தை.  விமானத்தை கண்டுபிடித்தவர்களின் ஒருவரான ஆர்வில் ரைட்டை ஒரு முறை சந்தித்தார். விமான பயன்களை கேட்டறிந்தார்.   தனியாக விமானம் ஓட்டும் பயிற்சியை 14 வயதில் பெற்றார்.  தந்தை தந்த ஊக்கத்தால் 16 வயதிற்குள் எல்லாவகை விமானங்களையும் ஓட்டும் தகுதியை பெற்றார்.  விமான வடிவமைப்பிலும் ஈடுபட்டார்.

அமெரிக்க விமானப்படை பயிற்சி பள்ளியில் ஆசிரியராக 20 வயதில் சேர்ந்தார்.  குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் பறக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்படுவதை கண்டார்.  விமானத்தை இயல்பாக ஓட்ட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. ஆபத்துக்களுக்கும் வாய்ப்பு இருந்தது. இதை தடுக்கும் உத்வேகத்தில் களம் இறங்கினார்.  மூச்சுத்திணறலை தடுக்கும் கருவியை உருவாக்க திட்டம் உருவானது.   இதற்கு மனித உடலில் செயல்பாடுகளை அறிய வேண்டியிருந்தது. எனவே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மனித உடல் பற்றி கற்றார்.  மூச்சுத்திணறலை தடுக்கும் கருவியை 1947ல் வடிவமைத்தார்.  அப்போது அவருக்கு 26 வயது.  கழுத்தில் அணிந்து கொள்ளும் வகையில் அமைத்திருந்தார்.

அந்த கருவியை அணிந்து குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் பறந்த போதும் மூச்சுத்திணறல் ஏற்படவில்லை. சுவாசம் சீராகவே இருந்தது. விமானிகளுக்கு மட்டுமின்றி இதய நோயால் அவதிப்படுவோருக்கும் அந்த கருவி உதவும் என உணர்ந்தார்.  அவரது கண்டுபிடிப்பை மருத்துவ உலகம் ஏற்றுக்கொண்டது. கருவிக்கு மார்க் 7 என்று பெயர் சூட்டினார்.

பலவீனமான நுரையீரல் சுமுகமாக இயங்க1980 ல் வெண்டிலேட்டர் என்ற செயற்கை சுவாசக் கருவியை உருவாக்கினார்.  பிறந்த குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டால் காப்பாற்ற 1992ல் ஒரு கருவியையும் கண்டுபிடித்தார்.  மனித உயிர்களை காக்கும் கருவிகளை கண்டுபித்துள்ள அறிஞர் பேர்டை போற்றுவோம்.

நன்றி சிறுவர் மலர்.