முதன்முதலாக விமானம் மூலம் வானத்தில் பறந்தவர்கள் யாரென்று கேட்டால் பெரும்பாலோர் அமெரிக்காவைச் சேர்ந்த ரைட் சகோதரர்கள் எனப் பதில் சொல்லுவார்கள்.
ஆனால் உண்மை அதுவல்ல.உலகில் முதன்முதலாக விமானம் ஒன்றைத் தயாரித்து அதன் மூலம் வானத்தில் பறந்துகாட்டியவர் ஷிவாகர் தல்பாதே என்கிற இந்தியர்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
1895-ஆம் வருடம் மும்பையைச் சேர்ந்த ஷிவாகர் தல்பாதே காற்றைவிடவும் எடைகூடியதொரு விமானத்தைத் தயாரித்து அதற்கு “மருட்சகா (Marutsakhā) என்று பெயரும் வைத்தார். பின்னர் அந்த விமானம் மும்பையின் செளபாத்தி கடற்கரையில் வெற்றிகரமாகப் பறக்கவிடப்பட்டது.ஆனால் ஒரு சிலைவணங்கி ஹி!ந்து ஒருவன் வெற்றிகரமாக விமானம் ஒன்றினை உருவாக்கி அதனை விண்ணில் பறக்க வைத்ததனை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் விரும்பவில்லை. ஷிவாகருக்கு எல்லா விதங்களிலும் அவர்கள் தொல்லைகள் கொடுத்தார்கள். விமானம் தயாரிப்பதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதனைத் தடுக்க முனைந்தார்கள். இருந்தாலும் ஷிவாகர் தல்பதே மிகுந்த சிரமத்துடன் அந்தப் பணத்தைத் திரட்டினார்.
தடைகளையெல்லாம் வென்று அவரது விமானம் செளபாத்தி கடற்கரையில் வெற்றிகரமாகப் பறக்க வைத்தார். பழமையான “வ்யாமானிக சாஸ்த்ரா”வின் அடிப்படையில் கட்டப்பட்ட அந்த விமானத்தில் பாதரசம் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. அதனைக் காரணம் காட்டி, ஷிவாகர் தல்பதே பாதரசத்திலிருந்து வெடிகுண்டுகள் தயாரித்ததாகப் பொய்யான குற்றம் சுமத்தி அவரைச் சிறையில் அடைத்தார்கள் பிரிட்டிஷ்காரர்கள். ஷிவாகர் பல ஆண்டுகள் சிறையில் கழித்தார். அவர் சிறையிலிருந்து வெளியே வந்து மீண்டும் தனது விமானத்தைப் பறக்க வைப்பதற்கு முன்னால் ரைட் சகோதரர்கள் அவர்களின் விமானத்தை விண்ணில் பறக்கவைத்திருந்தார்கள்.
தன்னுடைய கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்காத மனவருத்தத்துடன் தல்பாதே 1916-ஆம் வருடம் மரணமடைந்தார்.அன்றைய காலகட்டத்தில் பாதரசத்தை விமான எரிபொருளாக உபயோகிக்க முடியாது என பல விஞ்ஞானிகளின் கருத்தாக இருந்தது. இருப்பினும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா இன்றைக்கு அதன் விண்கலங்களைப் பறக்கவைக்க பாதரசத்தை உபயோகித்து வருகிறது என்பதனை வெளியில் எவரும் அதிகம் பேசுவதில்லை. அந்த உண்மை வெளிவந்தால் ஷிவாகர் தல்பதேக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டிய நிலை வரலாம்.வெள்ளைக்காரனை விட ஒரு கறுப்புத்தோல் இந்!தியன் அறிவாளியாக முடியுமா என்ன?குறைந்தபட்சம் நாமாவது ஷிவாகர் தல்பதேயின் சாதனையைக் கொண்டாடுவதுதானே சரியாக இருக்கும்?