ஜெகந்நாத ரதயாத்திரை

பிள்ளை பருவத்தில் ஸ்ரீல பிரபுபாதர் கொண்டாடிய ஸ்ரீ ஜெகந்நாத ரதயாத்திரை’ஸ்ரீல பிரபுபாதா’ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்கள் இஸ்கான் இயக்கத்தை நிறுவியவர் ஆவார். 1896-ல் நம் பாரத தேசத்தின் கல்கத்தாவில் பிறந்தவர். இவரது தாய் தந்தையர் இவருக்கு இட்ட பெயர் ‘அபய்சரண்தே ‘. அதாவது கிருஷ்ணரை சரணடைந்தவர் என்று பொருள். பெயருக்கேற்றார் போல் சிறுவயது முதலே, இவரது தந்தை கௌர்மோகன் கிருஷ்ண பக்தியுடன் இவரை வளர்த்தார். பல பல கிருஷ்ண பக்தியை ஊக்கவிக்கும் கதைகளை கேட்டு வளர்ந்த அபயின் மனதை  கவர்ந்த விஷயம் வருடா வருடம் கல்கத்தாவில் நடைபெறும் ஸ்ரீஜகந்நாதரின் ரதயாத்திரை உத்ஸவம்.

ராதா கோவிந்தா கோவிலில் நடைபெறும் ரதயாத்திரைதான் கல்கத்தாவிலேயே பெரிய ரத யாத்திரையாகத் திகழ்ந்தது. இந்த ரதயாத்திரையில் கிருஷ்ணர் பலராமர் சுபத்ரா ஆகியோர் மூன்று தனித்தனி ரதங்களில் பவனி வந்தனர். ரதங்கள் ஹாரிசன் ரோடிலிருந்து கிளம்பி சிறிது தூரம் பயணம் செய்து விட்டு திரும்பி வந்து விடும். ரத யாத்திரையன்று ராதா கோவிந்தா கோயில் நிர்வாகிகள் ஏராளமாக பிரசாதம் செய்து ஜனங்களுக்கு விநியோகம் செய்வார்கள்.

ரதயாத்திரை என்பது ஆண்டுதோறும் இந்தியாவெங்கிலும் நடக்கும் நிகழ்ச்சி. ஆனால் ரதயாத்திரைகளுள் முதன்மையானதும் பெரியதும் ஆன ரதயாத்திரை பூரியில் நடக்கும் ரதயாத்திரை. இதில் லட்சக்கணக்கில் மக்கள் கடலாகத் திரண்டு பங்கு கொள்கிறார்கள். கிருஷ்ணர் மதுராவிலிருந்து பிருந்தாவனத்துக்கு சென்றதன் ஞாபகார்த்தமாக இது கொண்டா டப்படுகிறது. ஆயிரக்கணக்கான வருடங்களாக சுமார் 45 அடி உயர ரதங்களை மரத்தில் மட்டுமே உருவாக்கி அவற்றில் ஜெகன்நாதர் பலதேவர் மற்றும் சுபத்ரா தேவி ஆகியோரை அமர்த்தி மக்கள் வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்து வருகிறார்கள். சைதன்ய மஹாப்பிரபு நானூறு ஆண்டுகளுக்கு முன் பூரி ரதயாத்திரையில் ஹரே கிருஷ்ணா மஹாமந்திரத்தைப் பாடி பரவசமுடன் தன் சகாக்களுடன் ஆடினார் என்பதை அபய் கேட்டறிந்தார். சில சமயங்களில் பூரியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ரயில்வே கால அட்டவணையை வாங்கிப் பார்ப்பார். பூரிக்கு கல்கத்தாவிலிருந்து டிக்கட் எவ்வளவு என்று விசாரிப்பார். எப்படி பணம் சேர்த்து பூரி சென்று ஜெகந்நாத்தைப் பார்ப்பது என்று யோசனை செய்வார்.

மேலும் அபய் தானே ஒரு சிறிய ரதம் ஒன்றை செய்து அதில் சிறிய ஜெகந்நாதர் பலதேவர் மற்றும் சுபத்ரா தேவியை வைத்து ரதயாத்திரையை நடத்த ஆசைப்பட்டார். இதற்கு தன் தந்தை கௌர்மோகன் அவர்களின் உதவியை நாடினார். அவர் ஒரு சிறிய மூன்றடி உயர பொம்மை ரதத்தை ஒரு நாள் வாங்கி வந்து கொடுத்தார். தந்தையும் மகனுமாக இந்த ரதத்தை அலங்கரித்து ஏறத்தாழ பூரி ரதம் போன்றே இருக்கும்படி செய்தனர். தன்னுடைய இந்த ரதயாத்திரையில் உதவுவதற்கு அபய் தன் நண்பர்களையும், சகோதரி பவதாரிணியையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். அக்கம்பக்கத்து வீடுகளுக்கு சென்று அங்குள்ள தாய்மார்களை எப்படியோ பேசி விதவிதமாக பிரசாதமும் தயார் செய்யும்படி செய்து விட்டார் அபய். பூரி ரத யாத்திரையைப் போலவே அபயின் ரதயாத்திரை தொடர்ந்து எட்டு நாட்கள் நடந்தது. அபயின் குடும்பத்தவர் அனைவரும் ரதயாத்திரையைக் காண கூடினர். அபயும் மற்ற குழந்தைகளும் ரதத்தை ஊர்வலமாக கர்த்தாளம், மிருதங்கம் ஆகியவை முழங்க பஜனை செய்தவாறு இழுத்துச் சென்று கோலாகலமாக கொண்டாடினர். அடுத்த சில தினங்கள் தாங்கள் கொண்டாடிய இந்த ரதயாத்திரை உற்சவம் பற்றி ஒருவருக்கு ஒருவர் பேசி தங்களது ஆனந்தத்தை வெளிப்படுத்தினார்கள். பின்னர் ஜெய் ஜெகந்நாத் ஜெய் பலதேவ் ஜெய் சுபத்ரா என்று கோஷம் எழுப்பினர்.

அபய் பிற்காலத்தில் இஸ்கான் இயக்கத்தை நிறுவி அகில உலகம் எங்கும் கிருஷ்ண பக்தி இயக்கத்தை உருவாக்கி பல கோயில்களை  ஸ்தாபித்து .பல திருவிழா மற்றும் பண்டிகைகளை வெகு விமரிசையாக கொண்டாடினார். ஒவ்வொரு திருவிழா சாஸ்திர நியமங்களுடன் எப்படி கொண்டாட வேண்டும் என்ற தகவல்களை கற்று தந்து அவர்களை ஊக்கம் அளித்தார். தமது சீடர்கள்  அனைவரும் அமெரிக்காவில் பெரிய பெரிய ரதயாத்திரைகளை நடத்திய போதும், பல நாடுகளில் இஸ்கான் கோயில்களை நிறுவி அவைகளில் ராதாகிருஷ்ண விக்ரகங்களை பிரதிஷ்டை செய்தபோதும் இவைகளையெல்லாம் தன்னுடைய தந்தையிடமிருந்து தெரிந்து கொண்டதாகச் மிகவும் பணிவாக சொன்னார்.

ஹரே கிருஷ்ணா 

 நாரதர் எடுத்த மானிடப்பிறப்பு.

கந்தர்வ உலகத்தில் இருந்த உபவருக்கன் பிரமசிரேட்டர் சாபத்தினால் பூவுலகில் ஓர் ஏழ்மைக்குடியில் பிறந்தார். இவர் பிறந்த சிறிது காலத்திற்குள் இவருடைய தந்தை காலமானார். எனவே இவரைக் காப்பாற்றவேண்டிய முழுப்பொறுப்பும் கைம்பெண் ஆன இவர் தாயார் மீதே விழுந்தது. தாயாரோ ஒர் அந்தணர் வீட்டில் வேலைக்காரியாக இருந்து வந்தாள். அந்த அந்தணர் ஸ்ரீமன் நாராயணனிடத்திலும் அவர் அடியார்களிடத்திலும் மிகவும் அன்பும், பக்தியும் உடையவர்.  நாரதர் சிறுகுழந்தையாக இருந்த காரணத்தினால் அவரையும் தான் வேலை பார்க்கும் இடத்தில் கூட்டிக் கொண்டு போய் தாயார் வைத்துக்கொண்டாள்.

நல்ல மழை காலத்தில் ஒருநாள் பற்பல அடியார்கள், நாராயணன் மீது மிகவும் பக்தி கொண்ட பெரியோர்கள் அந்த அந்தணர் வீட்டுக்கு வந்தார்கள். மழை காலமானதால் பற்பல ஸ்தலங்கள் சென்று பார்க்க இயலாததால், அந்த அடியார் திருக்கூட்டத்தை தன் வீட்டில் தங்கிப் பின் தலயாத்திரைக்குச் செல்லலாம் என்று வேண்டினார் அந்தணர். அடியார்களும் அதற்குச் சம்மதம் தந்தார்கள்.

அவர்கள் அங்கே தங்கியிருந்தபோது சதா நாராயணனை பூஜித்து வந்தார்கள். அவ்வமயம் சிறுபிள்ளையாக இருந்த நாரதரோ தன் விளையாட்டு எண்ணத்தை விட்டு விட்டு தானும் அவர்களோடு நாராயணனைப் பாடி பரவுவாராயினார். மேலும் ஒருநாள் அவர்கள் சாப்பிட்ட மீத உணவை மிகவும் ஆவலோடு எடுத்து உண்டார். இதைக்கண்ட அடியவர்கள் நாரதரைப் பெரிதும் பாராட்டி அவருக்கு திருமாலை வழிபடும் மந்திரோபதேசம் செய்து வைத்தார்கள். பின் கார்காலம் நீங்கியதும் கார்வண்ணன் அடியவர்கள் கூட்டம் அவ்விடத்தைவிட்டு நீங்கினார்கள்.

நாராயண மந்திரத்தை அருளக் கேட்ட சிறுவனாகிய நாரதர் அதையே உறுதியாகப் பற்றி வேறு ஒன்றிலும் சிந்தையின்றி இடையறாது ஜபித்துக்கொண்டிருந்தார். இப்படியிருந்த காலத்தில் அவருடைய தாயார் பாம்பு கடித்து இறந்து போனாள்.

தாயார் காலமானதும் தான் அந்த இடத்தில் இருக்க மனமின்றி ஒரு காட்டிற்குச் சென்று தங்கினார். அங்கே ஒரு தடாகக்கரையில் அமர்ந்து கொண்டு சதா நாராயணனையே தியானம் செய்து வந்தார். நாராயணனைத் தன் கண்களால் தத்ரூபமாகப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலால் கடுந்தவம் புரிந்தார். அச்சிறுவனின் வழிபாட்டுக்கு மகிழ்ந்து திருமால் ஒருநாள் வானிலே தோன்றி, ‘குழந்தாய்! உன் ஆழ்ந்த பக்தி கண்டு இன்புற்றோம். இப்படியே நீ இன்னம் சிறிது காலம் தவம் செய்து வந்தால் பிறகு ஊழிக்காலம் நேரும். அப்பொழுது இப்பிறவியிலிருந்து நீங்கி நான்முகனாகிய பிரம்மாவின் மகனாய்த் தோன்றும் மேலான நிலையை நீ அடைவாய்!’ என்று அருள் புரிந்தார்.

பின்னர் ஊழிக்காலம் நேர்ந்தது. உலகமும் உலகத்திலுள்ள எல்லாப் பொருள்களும் அழிந்தன. அவ்வூழிக்குப் பின் பிரம்மா உலகத்தை சிருஷ்டிக்கும்பொழுது அவரிடத்திலிருந்து மரீசி முதலிய ரிஷிகளோடு இச்சிறுவனும் மகதி என்னும் வீணையோடு பிறந்தார். அதனால் நான்முகனின் மகன் (பிரும்ம புத்திரன்) என்ற உரிமையையும் பெற்றார். பிரம்மாவே இவருக்கு நாரதர் என்று பெயரிட்டார். அன்றுமுதல் நாரதர் இடையில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராக அளவற்ற தவத்தை செய்த காரணத்தினால் எல்லா உலகங்களுக்கும் செல்லத்தக்க ஆற்றாலும் பெற்று விளங்கினார்.

பேசும்பெருமாள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் அடுத்துள்ள கூழாமந்தல் கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தாயார் கூதேவி பூதேவி உடன் பேசும் பெருமாள் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரை வாய் பேச முடியாத வந்து வணங்கினால் பேச்சுத் திறன் கிடைக்கும் என்பது இத்தலத்தின் ஐதீகம்.

கூழாமந்தல் பெருமாளுடன் பேசிய மன்னன்சொல்லுக்கு எள் என்றும், பந்தல் என்றால் ஓடும் சாலை, விதானம் என்றும் பொருள்கள் உண்டு.

பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரத்தில் இருந்து பிற்கால சோழர்களின் தலைநகரமாக இருந்த கும்பகோணத்துக்கு அருகிலுள்ள பழையாறை மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் போன்ற நகரங்களுக்கு இவ்வூர் வழியாக நெடுஞ்சாலை இருந்ததாலும், இங்கு எள் பயிர் அதிகளவில் விளைந்ததாலும் இவ்வூர் ‘கூழம் பந்தல்’ எனும் பெயர் பெற்றது.ஒரு ஊரின் ஒருபுறத்தில் சிவாலயமும், மற்றொரு புறத்தில் விஷ்ணு ஆலயமும் இருப்பது அந்த ஊரின் இரு கண்கள்போல் என்பார்கள்.அதற்கேற்றார்போல் சோழர்களின் ராஜகுருவான ஈசான சர்வ சிவ பண்டிதர் ஆணையால் ‘கங்கை கொண்ட சோழீச்சுரம்’ என்னும் முழுவதும் கருங்கற்களாலான அற்புத கற்றளி ஒன்று எழுப்பப்பட்டது.

இந்த கற்றளி தெப்பக்குளத்தில் மிதப்பது போன்ற அமைப்புடன் இருப்பது வியப்புக்குரியது. மேற்கில் ஒரு பெருமாள் கோயில் உள்ளது.சில வருடங்களுக்கு முன்பு பூமியிலிருந்து 12 அடி உயர மகா விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இவர்தான் பேசும் பெருமாளாக தற்போது அருள்பாலித்து வருகிறார்.

கங்கைகொண்ட சோழீச்சுரம் சிவன் கோயில் கட்டப்பட்ட காலத்திலேயே இப்பேசும் பெருமாள் கோயிலும் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.ஆந்திர மாநிலத்தின் நெல்லூரையும், தமிழகத்தில் காஞ்சிபுரத்தையும் தலைநகராக கொண்டு ஆட்சிபுரிந்தவர்கள் தெலுங்குச் சோழர்கள்.அதில் விஜயகண்ட கோபாலன் என்பவர் இக்கோயிலுக்கு வந்து இப்பெருமாளைக் கண்டு மிகவும் வியப்புற்று பேச, இப்பெருமாளும் பதிலுக்கு அரசனுடன் சாதாரணமாக உரையாடியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

இப்போதும்கூட பெருமாள் முன்பு நின்று அவரை சற்றே ஆர்வத்துடன் நோக்கினால், அவர் கருணையுடன் நம்மை நோக்கி புன்னகைக்கிறார்.காதுகளிலும் துளை இருப்பதாகவும் நாம் தெரிவிக்கும் கோரிக்கைகள் எல்லாம் அவருக்கு கேட்கிறது என்பதும் அதன்மூலம் அருளாசி வழங்குகிறார்.வேதனைகளை எல்லாம் தீர்த்து வைக்கிறார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.பேசும் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் மிக கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். பின் இரு கைகளிலும் சங்கு சக்கரத்துடன், வலக்கை அருள்பாலிக்கும் வரதஹஸ்தமாக, இடக்கை தொடையில் பதிந்துள்ளதாக சேவை சாதிக்கிறார்.

தோற்றம் கம்பீரமாக இருந்தாலும் பெருமாள் சாந்த மூர்த்தியாகவே திகழ்கிறார். பெருமாளின் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள்.அவ்விருவரும் அணிந்துள்ள அழகிய அணிகலன்களும், தலைக் கிரீடங்களும் நம்மை மெய் மறக்கச் செய்கின்றன.இக்கோயிலின் தனிப்பெருஞ்சிறப்பு, தாயார் இருவருமே தங்கள் வலக்கையில் தாமரை மலர்களை பற்றியிருப்பதுதான். பிற கோயில்களில் ஒரு தேவி வலக்கையிலும், இன்னொரு தேவி இடக்கையிலும் தாமரை மலரை வைத்திருப்பார்கள்.

வருடந்தோறும் எல்லா முக்கிய திருவிழாக்களும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. முதலில் பேசும் பெருமாளை தரிசித்துவிட்டு, பிறகு கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம் என மக்களால் பேசப்படுகிறது.

#பெருமாள்பேசினார்

தன்னுடன் பெருமாள் பேசியதற்கு ஆதாரமாக இரண்டு வாயிற்படி நிலைகளிலும் உள்ள கல்வெட்டில் ‘‘ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீவிஜயகண்டகோபாலற்குயாண்டு இருபது காலியூற் கோட்டத்து கூவழன் பந்தலான விக்கிரம சோழபுரத்து பேசும் பெருமாள் கோயில் காணியுடைய உறுபலியாந்தான் நூற்றிவுடையான் சொற்பார்பணிபந்தல்’’ என பொறிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ண கமலம்..

கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த மலர் கிருஷ்ண கமலம்..
நாகலிங்க மலரில் எப்படி சிவபெருமான் வாசம் செய்கிறாரோ அதே போல கிருஷ்ணர் வாசம் செய்யக் கூடிய மலர் கிருஷ்ண கமலம்..
இந்த பூவின் அமைப்பு நடுவில் திரெளபதி,மும்மூர்த்திகள்,பஞ்ச பாண்டவர்கள்,100கெளரவர்கள் என அனைவரும் 

கிருஷ்ணரோடு சேர்ந்து வாசம் செய்யக் கூடிய மலர்..
கிருஷ்ணர் கையில் உள்ள சுதர்சன சக்கரத்துக்கு நிகராக இந்த மலரை குறிப்பிடுகிறார்கள்..
இந்த பூவின் பெயர் கிருஷ்ண கமலம்,இதனை மஹாபாரத பூ,பஞ்ச பாண்டவர் பூ என்றும் அழைப்பார்கள்..
இதன் ஆங்கில பெயர் KRISHNA KAMAL,PASSION FLOWER..
கிருஷ்ணரை இஷ்ட தெய்வமாக கொண்டவர்கள், கிருஷ்ணரை நடு நாயகனாக வைத்து வழிபடுவர்கள் இந்த செடியை கண்டிப்பாக வீட்டில் வளர்க்கவும்..
வீட்டிற்குள் அதிகப்படியான நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் (Positive Vibrations) நறுமணமான மலர்…
இது ஒரு கொடி வகையை சேர்ந்தது..சிறிய தொட்டியில் வைத்தும் வளர்க்கலாம்…
அதிக இடவசதி, அதிகமாக வெயில் தேவையில்லை.
இந்த பூவை கிருஷ்ணருக்கு மாலையாக கட்டி அணிவிக்கலாம், அலங்கரிக்கலாம்.
பெங்களூர் இஸ்கான் கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணர் கையில் இந்த மலரை வைத்து இருக்கிறார்..
இந்த செடியின் அருகில் துளசி செடி, துளசி மாடம் நட்டு வளர்ப்பது கூடுதல் பலனையும், அதிர்ஷ்டத்தையும் வீட்டிற்கு கொடுக்கும்…
பர்பிள் நிறம் நம் உடலில் உள்ள சஹஸ்ர சக்கரத்தோடு தொடர்புடையது (Crown Chakra)…
வீட்டில் நட்டு வளர்த்து கிருஷ்ணனின் அருளை பெறவும்..

 

நவ குஞ்சரம்

நவகுஞ்சரம் என்பது இந்தியாவின் காவியமான மகாபாரதம் கதையில் இடம்பெற்ற ஒன்பது வெவ்வேறு விலங்குகளின் உடலுறுப்புகள் கொண்ட உயிரினம் ஆகும். ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது.சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் கூடிய விலங்கு நவகுஞ்சரம்.

நவ என்றால் ஒன்பதைக் குறிக்கிறது.ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர்.ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் எழுதிய மகாபாரதக் கதையில் நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.அர்ஜுனன் மலை மீது தவம் செய்துகொண்டிருந்தான்.அப்போது நவகுஞ்சர உருவெடுத்து கிருஷ்ணர் அர்ஜுனன் முன் தோன்றியது.தவத்திலிருந்து கண் விழித்த அர்ஜூனன் நவகுஞ்சரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து திகைத்தார்.பின்னர் அதன் கையில் தாமரைப் பூவைப் பார்த்தார்.அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.

மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை.உலகமோ எல்லையற்றது என்பதை உணர்ந்தார் அர்ஜுனன்.வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் சேர்ந்த
அதன் உடலமைப்பைப் பார்த்து இதுவரை பார்த்திராத ஓர் உயிர் இந்த உலகில் இருக்கலாம் என்றும் நினைத்தார். தன்னைச் சோதிப்பதற்காக இந்த உருவத்தில் வந்திருப்பது கிருஷ்ணன்தான் என்று தெரிந்துகொண்டு எடுத்த வில்லை கீழே போட்டுவிட்டு வணங்கினார்.ஒடிஷாவில் விளையாடப்படும் கஞ்சிபா சீட்டுக்கட்டு விளையாட்டில் நவகுஞ்சரம் ராஜாவாகவும் அர்ஜுனன் மந்திரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய ஒவிய பாணியான படா சித்ரா ஓவியத்தில் நவகுஞ்சரம் பல வகைகளில் வரையப்படுகிறது.நவகுஞ்சரத்தின் உருவம் பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது.அதன் கையில் இருக்கும் நீலச் சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது. 

பகவான் யாரையும் பாரபட்சமாக நடத்த மாட்டான்.

*நாம் அறியாத தகவல்…**கண்டிப்பாக படிங்க நண்பர்களே….*தோழி  வீட்டில் காலை திருவாராதனம் கண்டு வந்த போது தோழியின்  9 வயது மகன்..●மாமி நவகிரஹம் ஒன்பது உள்ளது. ஆனால் வாரம் என்பது ஏழு நாட்களே உள்ளத*ண்டு கிரஹங்களுக்கும் கிழமை கிடையாதா? இது பாரபட்சம் இல்லையா? என கேட்டான். □அவனை ஆசீர்வதித்து மகனே நல்ல கேள்வி. பகவான் உனக்கு எல்லா நலனும் வழங்கட்டும் என கூறியவாரே,எங்கே ஒன்பது கிரஹம் பெயர்களை கூறு என்றேன்.●சூரியன், சந்திரன், அங்காரகன், புதன் குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது. 

□வாரத்தின் நாட்கள் கூறு என்றேன்.●ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, என்றான்.□இப்போ உன் கேள்வி ராகு, கேதுவுக்கு ஏன் வாரத்தில் பங்கு இல்லை என்பதும், அது பாரபட்சம் என்பதும் தானே என்றேன்.●ஆமாம்  மாமி என்றான். 

□மகனே பகவான் எந்த காரணத்தை கொண்டும் யாருக்கும் பாரபட்சம் செய்யமாட்டான். அதாவது அவன் பகவானை விரும்பினாலும்,  வெறுத்தாலும் பாரபட்சம் காட்டவே மாட்டான்.ஹிரண்யனுக்கு பல சந்தர்ப்பங்களை கொடுத்தான். பிரஹலாதனுக்கு அவன் செய்த பல கொடுமைகளில் இருந்து காப்பாற்றி உணர்த்தினான். ஆனாலும் புரியாமல், தூணை காட்டி கேட்டு இங்கு இல்லையேல் உன் உயிரை எடுப்பேன் என கூறியதால் பகவான் தன் பக்தன் பிரஹலாதன் உயிரை காக்க தூணிலிருந்து தோன்றி அரக்கன் ஹிரண்யன் உயிரை எடுத்தான்.

இராமாயணத்தில் இராவணனுக்கு அவன் எல்லா நண்பர்களும், ஆயுதங்களும் இழந்து தனியாக நின்றபோதும், அவனுக்கு ஒரு நாள் சந்தர்ப்பம் கொடுத்தார். அதாவது இன்றுபோய் நாளை வா என, எதற்காக சண்டை போடுவதற்க்கா இல்லை. சீதையை கொண்டுவந்து ஒப்படைக்க அதன் மூலம் அவனுக்கு இரக்கம் காட்ட ஆனால் அதை இராவணன் செய்யாத்தால் பகவானால் கொல்லப்பட்டான்.அது போல் தான் பகவான் தேவர்களுக்கும்*, கிரஹங்களுக்கும் பாற்கடலை கடைந்து வந்த அமுதத்தை பகிர்ந்து அளிக்கும் போது இடையில் புகுந்த அரக்கன் அதை பெற   சந்திரன் அதை காட்டி கொடுக்க பகவான் அசுரன் தலையை துண்டித்து விட அமுதம் பெற்ற அவனுக்கு அழிவு இல்லாததால், அவர்களை இரண்டு கிரஹமாக ஆக்கி இராகு, கேது எனப்பெயர் வைத்து அவர்களுக்கு உரியதாக ராகுகாலம், குளிகைகாலம் என இரண்டு காலத்தை கொடுத்துள்ளார்.

மனிதர்கள் இந்த இராகு காலத்தில் எந்த வேலையைச்செய்தாலும், அது சிரமத்தின் பேரில் தான் நடைபெறும். நற்காரியங்கள் கூடுமானவரை செய்யக்கூடாது. அதேபோல் குளிகனில் கெட்ட காரியங்கள்,  அபர காரியங்கள் செய்யக்கூடாது எனக்கூறி அருளினார்.●மாமி  அது தெரியும், ஆனால் ஏன் மாமி வாரநாட்களில் அவர்களை சேர்க்கவில்லை என்றான்.□அவனிடம் உன்னிடம் ஒரு பாக்கெட் பிஸ்கட் தான் உள்ளது, அந்த பாக்கெட் பிஸ்கட்டை நீயும் உன் தங்கையும் பிரித்து சாப்பிட எண்ணும் போது, இடையில் உங்கள் நண்பர் இருவர் வந்தால் என்ன செய்வாய் என்றேன்.●அந்த பிஸ்கட் பாக்கெட்டில் உள்ளதை கூட வந்தவர்களுக்கும் பிரித்து கொடுத்து சாப்பிடுவோம் என்றான். 

□ஏன் அவங்களுக்கு தனியாக ஒன்றை கொடுக்கலாமே என்றதும், ●எங்கிட்ட ஒரு பாக்கெட் தானே இருக்கு அப்போ அதிலிருந்து தானே கொடுப்பேன் என்றான். □சரியாக சொன்னாய், அதே போல்தான் வாரத்துக்கு நாள் ஏழு என ஏழு கிரகஹங்களுக்கும் ஒன்றாக பகவான் உண்டாக்கி, ஒவ்வொரு நாளுக்கும் இருபத்தினான்கு மணி நேரம் என ஏற்படுத்தி நடத்திவரும் போது இடையில் இரு கிரஹங்கள் வருவதால் என்ன செய்ய என யோசித்த பகவான்,அனைத்து கிரஹங்களுக்கும் வேலை நேரம் சமமாக இருக்கவேண்டும் அதே நேரம் வார நாட்களையும் கூடுதலாக வருமாறு செய்ய கூடாது என்ற எண்ணத்தில்…ஏழு கிரஹங்களையும் அழைத்து அவர்கள் ஒவ்வொருவர் நேரத்திலும் மூன்று மணிநேரத்தை எடுத்துக்கொண்டான்.இப்போ சொல்லு ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம்.●இருபத்திநான்கு மணி நேரம் மாமி.□அதில் மூணு மணி நேரத்தை பகவானுக்கு கொடுத்தது போக மீதி எவ்வளவு உள்ளது.●இருபத்து ஒரு மணி நேரம் மாமி.□இப்போ ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் மாதிரி ஏழு நாட்களுக்கும் எடுத்தால் எவ்வளவு.●இருப்பதொரு மணி நேரம் மாமி.

□இப்போ பெருமாள் கையில் எவ்வளவு மணி நேரம் உள்ளது. ●ஏழு பெருக்கல் மூணு இருப்பத்தியோரு மணி நேரம்.□இதைத்தான் தன்னால் தலை துண்டிக்கப்பட்டு உடலால் ஒரு கிரஹமாகவும், தலையால் ஒரு கிரஹமாகவும் ஆன ராகு கேதுவுக்கு பிரித்துக்கொடுத்தார்.

●அதுவும் எப்படி?..□ஒவ்வொரு கிழமையிலும் ராகு காலமாக ஒன்றரை மணி நேரமும் குளிகை காலமாக ஒன்றரை மணி நேரமுமாக..இப்போ சொல்லு உன்னிடம் இருந்த ஒரு பாக்கெட் பிஸ்கட்டை இடையில் வந்தவருக்கு பகிர்ந்தளித்த மாதிரி,ஏற்கனவே இருந்த ஏழு நாட்களையும் இருபத்தி நான்கு மணி நேரத்தையும் சமமாக பகிர்ந்தார்.

ராகுவும், கேதுவும் ஒரே உடலின் இரண்டு அங்கம் ஆனதால், அந்த இருபத்தொரு மணி நேரத்தை இரண்டாக பிரித்து ஆளுக்கு பத்தரை மணிநேரம் அதாவது ஒவ்வொரு நாளிலும். ஒன்றரை மணி நேரம் ஏழு நாட்களில் ஏழு பெருக்கல் ஒன்றரை அதாவது பத்தரை மணிநேரமாக கொடுத்துள்ளார்.இப்போ சொல்லு பகவான் பாரபட்சம் காட்டியுள்ளானா!!!!..

●இல்லை மாமி ஏழு நாட்களை கொண்ட வாரத்தில் ஒவ்வொருவரிடமும் இருந்து மூணு மணி நேரத்தை குறைத்து வேலை நேரத்தை 21 மணி நேரமாக குறைத்து, அதையே இரண்டு பங்கான அசுரனுக்கு பாதி பாதியாக அதாவது பத்தரை மணியாக, அந்த இருபத்தொரு மணி நேரத்தை பிரித்து கொடுத்துள்ளான் அப்படி தானே என்றான்.  □அப்படிதான் மகனே, பகவான் யாரையும் எந்த காரணத்திற்காகவும் வஞ்சிக்கவோ, பாரபட்சம் காட்டவா மாட்டான். நல்லவர்களை அரவனைப்பதும், துஷ்டனுக்கு சந்தர்பம் கொடுத்து திருத்தவும், சில சோதனைகளை செய்வான். அப்போதும் செய்பவன் அவனே என அவனிடம் நாம் சரணடைந்து விட்டால் போதும் அவன் நம்மை ஆட்கொண்டுவிடுவான்.

பகவான் யாரையும் நம்மைபோல் பாரபட்சமாக நடத்த மாட்டான்.

மாமரத்து சுயம்பு விநாயகர்

விருட்சத்தில் தெய்வம் குடிகொண்டிருக்கும் தலங்கள் சாந்நித்தியம் மிகுந்தவை; வல்லமை மிக்க வரங்களை அருள்பவை’ என்பார்கள் பெரியோர்கள். அந்த வகையில், சென்னை – கூடுவாஞ்சேரியில் மாமரத்தில் சுயம்புவாய்த் தோன்றி கோயில் கொண்டிருக்கிறார் மாமரத்து விநாயகர்!

சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில், தாம்பரத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது கூடுவாஞ்சேரி. இங்கே ரயில்நிலையம் அருகிலேயே அமைந்திருக்கிறது மாமரத்து விநாயகர் திருக்கோயில். தருமை ஆதின குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், திருமுருக கிருபானந்த வாரியார், வேதாந்த மகரிஷி போன்ற மகான்கள் போற்றிய ஆலயம் இது.

*அகோர கணநாத சொரூபம்*

மாமரத்து சுயம்பு விநாயகர் தெற்கு நோக்கி அருள்கிறார். இப்படியான அம்சத்தை அகோர கணநாத சொரூபம் என்பார்கள். இவரை வழிபட்டால், வேண்டிய வரங்கள் விரைவில் கிடைக்கும்; எதிரிகள் தொல்லைகள் தீரும். நோய்கள் விலகும். இங்கு சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு சந்தனம் சாத்தும் வழக்கம் உண்டு. அப்படி சாத்தப்பட்ட சந்தனம் சகல வியாதிகளையும் தீர்க்கும் அருமருந்து என்பது ஐதிகம்.

*ராசி மண்டல தட்சிணாமூர்த்தி!*

இங்கு அருளும் தட்சிணாமூர்த்தி 12 ராசிகளும் மலைபோல் அமைய அதன் மேல் அமர்ந்து ராசி மண்டல தட்சிணாமூர்த்தியாக அருள் செய்கிறார். எனவே அனைத்து ராசிக்காரர்களும் வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கி தோஷம் நீங்கப் பெறுகிறார்கள்.

*லிங்க வடிவில் தர்ம சாஸ்தா!*

பட்டீஸ்வரம் போலவே இங்கு துர்கை எட்டு கரங்களோடு சிம்ம வாஹினியாக அருள்கிறாள். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இந்த அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் சகல மங்கலங்களும் கைகூடும். அதேபோல் மருந்து மலையோடு அருளும் அனுமன், விசேஷ கோலத்தில் தர்மசாஸ்தா, தேவியருடன் அருளும் நவகிரகங்கள் ஆகியோரும் இக்கோயிலின் விசேஷ அம்சங்கள்.

இங்கு கோயில் கொண்டுள்ள ஈஸ்வரருக்கு மாமரத்து ஈஸ்வரர் என்று பெயர். இங்கு அருளும் அன்னை லலிதாம்பிகைக்கு சந்நிதி எழுப்பும் முன்பாக லட்சம் முறை லலிதா சகஸ்ரநாமம் படித்து அதன்பின் பிரதிஷ்டை செய்தனராம். திருமீயச்சூர் லலிதாம்பிகை போன்று இந்த அம்பாள் காலில் கொலுசுடன் அருள் பாலிக்கிறாள். வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு வழிபட்டால் கல்யாண வரம் கிடைக்கும்; மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

மாமரத்து விநாயகரின் திருவருளால் சங்கடங்கள் அனைத்தும் பொசுங்கி, உங்கள் இல்லங்களில் சந்தோஷம் பொங்கிப் பெருகட்டும்.

ஸ்ரீபாதராஜர்

ஸ்ரீ ஸ்ரீபாதராஜர் தோற்றம் கி.பி 1404 பூர்வாஷ்ரம பெயர் லஷ்மி நாராயணா ஆஷ்ரம குரு ஸ்ரீ ஸ்வர்ணவர்ண தீர்த்தர் வித்யா குரு ஸ்ரீ விபூதீந்திர தீர்த்தர் சித்தாந்தம் த்வைதம் மறைவு கி.பி 1502

விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசனுக்கு ”பிரம்மத்ய தோஷம்” இருக்கவே அதை நிவர்த்தி செய்ய தன் குருவிடம் வேண்டினார் மன்னர். குருவும் யாக பூஜைகள் செய்து தோஷத்தை தீர்க்கவே, மன்னர்  குருவை அரியணையில் அமரவைத்து கனகாபிஷேகம் செய்து கெளரவித்தார். குருவின் எதிரிகளுக்கு இதனால் ஒரே பொறாமை. இந்த குரு, மன்னரை ஏமாற்றி விட்டார் எனவும், மன்னரின் தோஷம் நீங்கவில்லை என கதை கட்டினர். இதை அறிந்த குரு அவர்களை அழைத்து ஓர் வெள்ளைத்துணியை ஆளிவிதை எண்ணெய்யில் போடுமாறு கேட்டுக் கொண்டார். பின் எடுக்க சொல்லவே வெள்ளைத்துணி கருப்பாக இருந்தது. அந்த கருப்புத்துணியில் தான் ஜபித்த கமண்டல நீரை தெளித்தவுடன், துணி முழுவதும் வெள்ளையாக மாறியது. குருவின் எதிரிகள் அவரின் மஹிமையை ஆச்சரியத்தோடு பார்த்தனர். தங்களின் தவற்றை உணர்ந்த எதிரிகள் குருவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். அந்த குருவே “ஸ்ரீ ஸ்ரீபாதராஜர்”. எதிரிகளையும், தூற்றுவோரையும் சிரித்தே மன்னித்து விடுவார் பாதராஜர்.ஸ்ரீ ஸ்ரீபாதராஜரின் வரலாறு நாம் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதை படிக்கும் போது, இப்படியும் ஒரு மஹான் வாழ்ந்தாரா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இன்று நாம் அறுவடை செய்யும் ”தாஸ ஸாகித்ய”த்திற்கு பதினைந்தாம் நூற்றாண்டிலேயே விதை போட்ட மஹானுபாவர்.

”#தாஸ_ஸாகியத்தின்_பிதாமகர்” என்ற சொல்லுக்கு சொந்தக்காரரான இவர் கர்நாடக மாநிலத்தில் கன்வா நதிக்கரையில் அப்பூருக்கு அருகில் உள்ள சென்னப்பட்னா தாலுக்காவைச் சேர்ந்த சேஷகிரிக்கும் கிரியம்மாவிற்கு கி.பி 1404ம் ஆண்டு மகவாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் லஷ்மி நாராயணா.சிறு வயதில் நண்பர்களுடன் லஷ்மி நாராயணா விளையாடிக் கொண்டிருக்கையில், அங்கே வந்த ஸ்வர்ணவர்ண தீர்த்தர் ( ஸ்ரீ பத்மநாப தீர்த்த சமஸ்தானத்தை சேர்ந்த எட்டாவது பீடாதிபதி; பத்மநாப தீர்த்தர் என்பவர் ஸ்ரீ மத்வரின் நேரடி சிஷ்யர் ) அப்பூருக்கு ( புருஷோத்தம தீர்த்தரை பார்ப்பதற்காக ) எப்படி போக வேண்டும் என்று லஷ்மி நாராயணாவிடம் கேட்கவே அதற்கு “சூரியன் மறைய தொடங்கிவிட்டது, நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறோம், இதனால் அப்பூர் எவ்வளவு தூரம் என்று நீங்கள் ஊகிக்கலாம்”, சிறுவன் சொன்ன பொருள் “நாங்கள் சூரியன் மறையும் போதும் விளையாடிக் கொண்டிருப்பதால் அப்பூர் அருகிலேயே உள்ளது” என்பதே.

சிறுவனின் புத்திசாலித்தனத்தை பார்த்து வியந்த ஸ்வர்ணவர்ண தீர்த்தர், அப்போதே இந்த சிறுவன் தான் தனக்கு பிறகு பட்டத்திற்கு வர வேண்டும் என்று முடிவு செய்து விட்டார். ஸ்வர்ணவர்ண  தீர்த்தரின் தோற்றம் ப்ரம்ம தேஜசும், தங்க சாயலை கொண்டிருப்பார், அதனால் அப்பெயர் பெற்றார். ஸ்வர்ணவர்ண  தீர்த்தர் தன் ஆசையை புருஷோத்தம தீர்த்தரிடம் கூறவே,  அவரும் லஷ்மி நாராயணாவின் பெற்றோரை தான் சம்மதிக்க வைக்கிறேன் என்று கூறினார். ப்ரம்மண்ய தீர்த்தரும் ( புருஷோத்தம தீர்த்தரின் சிஷ்யர் ) லஷ்மி நாராயணாவும் உறவினர் என்பதால் சேஷகிரியும் கிரியம்மாவும் தன் மகனை துறவறத்திற்கு அனுமதித்தனர். ஸ்வர்ணவர்ண தீர்த்தர் லஷ்மி நாராயணாவிற்கு “லஷ்மி நாராயணா யோகி” என்று பட்டம் இட்டார். அப்போது அவருக்கு வயது பதினாறு. தன் குருவான ஸ்வர்ணவர்ண  தீர்த்தரிடம் வேதம், உபநிடதம், சாஸ்திரங்கள், மத்வ சித்தாங்கள் கற்றுக் கொண்டு சிறந்து விளங்கினார். திக்விஜயங்கள் மேற்கொண்டு இறைவனை கண்டுகொண்டும், த்வைத கொள்கைகளை பரப்பியும், பல வாதிகளை வென்றார்.

லஷ்மி நாராயணா யோகி எப்போது ஸ்ரீ ஸ்ரீபாதராஜர் ஆனார் என்று கேள்வி எழலாம். ஸ்வர்ணவர்ண தீர்த்தர் பிருந்தாவன பிரவேசத்திற்கு பிறகு, ஸ்ரீரங்கத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள முலுபாகலு என்ற இடத்தில் தன் வாழ்நாளை களித்தார். அப்போது இருந்த குருவான ஸ்ரீ விபூதீந்திர தீர்த்தரிடம் லஷ்மி நாராயணா யோகி வித்யா கற்றுக் கொண்டார். விபூதீந்திர தீர்த்தர் லஷ்மி நாராயணா யோகியுடன் உத்திராதி மடத்தின் பீடாதிபதியான ரகுநந்தன தீர்த்தரை சந்தித்தனர்.

இந்த ரகுநந்தன தீர்த்தரே லஷ்மி நாராயணா யோகிக்கு ஸ்ரீ ஸ்ரீபாதராஜர் என்று பெயர் இட்டார். இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. ஒருமுறை லஷ்மி நாராயணா யோகி “ஸ்ரீ சுதா” க்ரந்தத்தை படித்துக்கொண்டிருந்த போது மிகவும் கடினமான சொற்களையும், பொருள்களையும் மிக எளிமையாக விளக்கியதால் ஆச்சரியத்தோடு பார்த்தார் ஸ்ரீ ரகுநந்தன தீர்த்தர். அப்போது ஸ்ரீ ரகுநந்தன தீர்த்தர் ”நாங்கள் எல்லாம் வெறும் சன்யாசிகளே, நீயோ சன்யாசிகளுக்கே ராஜா (பாதராஜர்)” , அன்று முதல் லஷ்மி நாராயணா யோகி “ஸ்ரீ ஸ்ரீபாதராஜராக” மாறினார்.மற்றொரு காரணமாக கருதப்படுவதை பார்ப்போம். லஷ்மி நாராயணா யோகி ஒரு இறந்த சிறுவனை உயிர்த்து எழவைக்கவே ரகுநந்தன தீர்த்தர் அதிசயத்தோடு பார்த்து “ஸ்ரீ ஸ்ரீ பாதராஜர்” என்று பெயர் இட்டார் என்றும் கூறப்படுகிறது.

அந்த காலத்தில் “விஜயநகர சாம்ராஜ்யம்” பரந்து விரிந்து இருந்தது. முலுபாகலு என்ற ஊரும் விஜய நகர சாம்ராஜ்யத்தின் கீழே வந்தது. வியாஸராஜர் ”#ஸ்ரீபாதராஜராஷ்டகம்” என்ற நூலில்  சாளுவ நரஸிம்மனின் அரசவையில் ஸ்ரீ பாதராஜரின் செல்வாக்கை பற்றி எழுதியுள்ளார்.ஸ்ரீ ஸ்ரீபாதராஜர் பல நூல்களை இயற்றியுள்ளார். அவற்றில் பிரம்மகீதா, வேணுகீதா, கோபிகீதா,மத்வ நாமா புகழ் பெற்றது. மத்வ நாமாவிற்கு பலச்ருதி அவர் எழுதாமல், சுமார் இருநூற்றி ஐம்பது வருடங்களுக்கு பின் வாழ்ந்த ஸ்ரீ ஜகன்னாத்தாஸரால் இயற்றப்பட்டது. அவர் பல பாட்டுகளையும் எழுதியுள்ளார், “கண்கள் யாதகோ காவேரி ரங்கன நோடத”, “பூஷணக்கே பூஷண இது பூஷண” போன்ற பாடலை பாடினார். அவர் தன் வாழ்நாளில் நாற்பது முறை மத்வர் அருளிய “சர்வ மூல க்ரந்தங்களை” வியாக்கியானத்தோடு சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இவர் “ரங்க விட்டல” என்ற முத்ரிகையில் பல கன்னட பாடல்களை இயற்றியுள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீபாதராஜர் துறவியாக இருந்தாலும் ராஜாவாக வாழ்வார். ”சுக ப்ராப்தா”திற்கு சொந்தக்காரான இவர் துருவராஜனின் அவதாரமாக கலியுகத்தில் அவதரித்துள்ளார். ஸ்ரீ பத்மநாப மடம் என்று அழைக்கப்பட்ட குரு பரம்பரையில் வந்த இவரின் புகழ் உச்சி அடைந்ததால் ஸ்ரீபாதராஜர் மடம் என்று மாற்றப்பட்டது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் மன்னரான நரசிம்ம பூபாலன் ஸ்ரீ ஸ்ரீபாதராஜரிடம் தன்னுடைய அமைச்சரவையில் “ராஜகுருவாக” இருக்குமாறு கேட்டுக் கொள்ள, அதற்கு மறுப்பு தெரிவித்து, தன் சிஷ்யரான “வியாஸ தீர்த்தரை” அனுப்பினார். கிருஷ்ண தேவராயரின் அவையில் மன்னனை குகயோகம் என்ற மரண யோகத்தில் இருந்து காப்பற்றி ஒரு நாள் ஆட்சி செய்ததால் வியாஸ தீர்த்தர் வியாஸ ராஜராக மாறினார். ஒருமுறை உடல் நலக்குறைவால் படுத்திருந்த ஸ்ரீ ஸ்ரீபாதராஜர், தன் சிஷ்யரான வியாஸராஜரை பூஜை செய்யுமாறு கூறினார். ஒரு ஸ்வாமி பெட்டி மட்டும் பல வருடமாக திறக்க முடியாமல் இருந்தது. அன்று பூஜை செய்த வியாஸராஜர் திறக்கவே, பெட்டியில் இருந்த அழகான வேணுகோபால ஸ்வாமி விக்கிரகம் குழல் ஊதியபடி நடனமிட தொடங்கியது. வியாஸராஜர் தாளம் போட்டு பாடவே, படுத்திருந்த ஸ்ரீ ஸ்ரீபாதராஜர் எழுந்து வந்து கோபாலனின் நடனத்தை மெய்சிலிர்த்துப் பார்த்தார். நடனமாடிய வேணுகோபால ஸ்வாமி அதற்கு பின் விக்கிரஹமாக மாறியது. அந்த விக்கிரஹத்தை வியாஸராஜரிடம் பரிசாக கொடுத்தார் ஸ்ரீபாதராஜர். இன்றும் அந்த விக்கிரஹத்தை வியாஸராஜமடத்தில் காணலாம்.

ஸ்ரீபாதராஜர் வியாஸராஜருக்கு பல அதிசயத்தை கற்றுக்கொடுத்துள்ளார். அதனால் தன் குருவை ”பக்த மந்திரா” என்று வியாஸராஜ அழைப்பார். ஸ்ரீபாதராஜரின் வாழ்க்கை நிகழ்வுகளை வியாஸராஜர் தன் சமஸ்கிருத நூலான ”#பஞ்சரத்னமாலாதுதி”யில் எழுதியுள்ளார்.தன் வயதான காலத்தில் கங்கா நதிக்கு போகமுடிய வில்லையே என்ற வருதத்தில் இருந்தார் ஸ்ரீபாதராஜர். அவரின் கனவில் தோன்றிய கங்கா தேவி மறுநாள் நரஸிம்ம தீர்த்தர் குளத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளவே மறுநாள் மேகங்கள் சூழ கங்கா தேவியின் அருள் மழை பொழிந்தது. அந்த அளவிற்கு சக்தி படைத்தவர் ஸ்ரீ ஸ்ரீபாதராஜர். அந்த குளத்தில் குளித்தால் புன்னிய நதியான கங்கையில் குளித்ததற்கு சமமாக கருதப்படுகிறது. இப்போதும் கங்கா நீரை முலுபாகலில் காணலாம்.

இன்று செழித்து இருக்கும் தாஸ ஸாகித்யதிற்கும், கன்னட மொழி மூலம் பாட்டுகளை இயற்றி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். தொன்னூற்றி எட்டு வயது வரை வாழ்ந்த மஹான் ஜேஷ்ட, சுத்த சதுர்தசி அன்று முலுபாகலுவில் உள்ள நரஸிம்ம தீர்த்தருக்கு அருகில் கி.பி 1502ல் பிருந்தாவனமானார்.

ஸ்ரீ ஸ்ரீ பாதராஜரின் மூல பிருந்தாவனம்செல்லும் வழி :பெங்களுரில் இருந்து 100 கி.மீ / சென்னையில் இருந்து 240கி.மீ.

படித்ததில் பிடித்தது:

*பாறை* – 

மலை சாய்ந்தாலும் மனம் கலங்காத மன உறுதியைக் கற்றுக் கொடுக்கும்.

*வாழை*-

வெட்ட வெட்ட வளரும் வித்தையைக்கற்றுக் கொடுக்கும்.

*புறா*

– மாடமாளிகையில்கூட கோபுரத்தில் வாழக் கற்றுக் கொடுக்கும்.

*விதை*- 

மண்ணைத் தள்ளி மூடினாலும் முளைக்கக் கற்றுக் கொடுக்கும்.

*மழை* – 

உதவி செய்து விட்டு நன்றியை எதிர்பார்க்காத மனப்பக்குவத்தைக் கற்றுக் கொடுக்கும்.

*மாமரம்*-

கல்லால் அடிபட்டாலும் சுவையான மாங்கனியைத் தர  வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கும்.

*தென்னை*- 

எந்த நீரை ஊற்றி வளர்த்தாலும், சுவையான இளநீர் தர வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கும்.

*மலர்*-

நசுக்கிப் பிழிந்தாலும் நறுமணம் கொடுப்பதைக் கற்றுக் கொடுக்கும்.

*உப்பு* – 

எதிலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைக் கற்றுக் கொடுக்கும்,

*புன்னகை*-

உள்ளத்தில் துன்பம் உள்ளபோதும்உதட்டில் போர்வையைப் போர்த்தி, சிரிக்கும் வேடத்தைக் கற்றுக் கொடுக்கும்.

*கண்ணீர் துளிகள்*-

மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைக்கக் கற்றுக் கொடுக்கும்.வாழ்க்கையில் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றைக் கற்றுக் கொடுக்கும்.சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒன்றைக் கற்றுக் கொடுத்து விட்டுப்போகிறான.

வாழ்க்கை என்பதேகற்பதும் , கற்பிப்பதும் தான்.அறிந்து கொள்வதை விட, புரிந்து கொண்டால் வாழ்க்கை இன்பமாக அமையும்*.

தெய்விக மரம்

பணக்கார கடவுளான குபேரனுக்கு பணக்கஷ்டம் வந்த போது என்ன செய்தார் தெரியுமா..?*உலகிலேயே பணக்கார கடவுள்…யார் என்று கேட்டால் திருப்பதி பெருமாள் என்றுதான் சொல்வோம். ஆனாலும் பணம் வேண்டுமென்றால் குபேரனைத்தான் வழிபடுவோம்… குபேரன் மாதிரி பணக்காரனாக வேண்டும் என்னும் ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அந்த குபேரனுக்கே பணத்தட்டுப்பாடு வந்த போது என்ன செய்தார் தெரியுமா?

போர் ஏற்பட்ட காலத்தில் எதிரிகளின் சூழ்ச்சியால் தம்மிடம் இருந்த செல்வம அனைத்தையும் இழந்துவிட்டான் குபேரன்…. செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தம்மிடமிருந்த சொத்துக்களை இழந்து தவித்தபோது சிவபெருமானிடம் சென்று முறையிட்டான். “நெல்லிமரங்களை நட்டு வளர்த்துவிட்டு அது வளர்ந்ததும் என்னை வந்து பார்” என்றார்.செல்வத்துக்கும் நெல்லிமரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்த குபேரன் சிவபெருமான் சொன்னாததால் எதுவும் பேசாமல் ஆயிரக்கணக்கான நெல்லி மரங்களை வளர்த்தான். நெல்லிமரங்கள் பராமரிப்பிலும் குறைவைக்க வில்லை… ஏனெனில் சிவபெருமானின் ஆணையாயிற்றே.. நாள்கள் கடந்து விட்டது…நெல்லிமரங்கள் அனைத்தும் பூ பூத்தது… காய் காய்த்தது… காய்களெல்லாம் இனித்தது… குபேரனின் வாழ்வு பழமையாக திரும்பிற்று…சூழ்ச்சி செய்து செல்வம் பறித்த வளங்களையெல்லாம் மீண்டும் கொண்டு வந்து குபேரனிடம் கொடுத்தார்கள். இழந்த நாடுகளெல்லாம் திரும்ப கிடைத்தது. குபேரனை விட பெரிய அரசனெல்லாம் ஓடி வந்து கப்பம் கட்ட தொடங்கினார்கள். இழந்த செல்வங்களோடு மீண்டும் புதிய செல்வங்களும் பெருகியது..

குபேரனுக்கு மனம் முழுக்க கேள்விக்கணைகள்.. எப்படி இது சாத்தியம் மீண்டும் சிவபெருமானிடம் சென்றார்… “நெல்லிமரங்கள் வளர்ந்ததா.. இழந்த செல்வம் கிடைத்ததா?” என்றார் சிவப்பெருமான். ”நெல்லிமரம் வளர வளர செல்வம் கிடைத்த காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லையே” என்றார் குபேரனும் விடாமல்.. ”நீ வைத்தது நெல்லிமரங்கள் அல்ல லட்சுமி தேவிகள்.. உரிய முறையில் அவற்றுக்கு நீரூற்றினாய் அதனால் நீ செய்த பாவங்களைத் தொலைந்து லட்சுமி தேவியின் அருளை பெற்றாய்”… என்ற சிவபெருமான் நெல்லிமரம் பூலோகத்தில் உருவான கதையை சொல்லலானார்.தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லி மரம்… அதனால் தான் இது தெய்விக மரம் என்று சொல்கிறார்கள் என்றார்…

லட்சுமி சொரூபமான நெல்லி மரத்தை வளர்த்து லட்சுமி கடாட்சத்தைப் பெற்று மகிழுங்கள்…