திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்ரமசிங்கபுரத்தில் பிறந்தவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தில் எழுந்தருளியிருக்கும் பாபநாசநாதர் மற்றும் உலகம்மை மீதும் பெரும்பக்தியும் பேரன்பும் செலுத்திவந்தார். குறிப்பாக உலகம்மை மீது அவருக்கு அத்தனை அன்பு…
நமச்சிவாய கவிராயர் நாள்தோறும் பாபநாசம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் உலகம்மையை வழிபாடு செய்து வருவது வழக்கம்…
ஒரு நாள் இரவு, வழக்கம் போல பாபநாசம் சென்று உலகம்மையைத் தொழுதுவிட்டு இல்லத்திற்குத் திரும்பும்போது, உலகம்மையைப் புகழ்ந்து கவிதை பாடிக்கொண்டே வந்தார். பக்தன் பாடும் கவிதையை கேட்க ஆவல் கொண்ட உலகம்மை, அர்ச்சகர் அலங்கரித்த அலங்காரத்தோடு, கவிராயரை பின் தொடர்ந்து வந்தாள். அம்பிகை வருவதை அறியாத கவிராயர், வெற்றிலை தரித்து போட்டுக்கொண்டு வாய்விட்டுப் பாடி வந்தார். மெய்ம்மறந்து பாடியபோது அவருமறியாமல் தெறித்த எச்சில் துளிகள் தேவியின் மேல்பட்டன. அத்திருக்கோலத்தோடு உலகம்மை கோவிலில் மீண்டும் எழுந்தருளினாள்…
மறுநாள் காலையில், கோவிலைத் திறந்து பார்த்த அர்ச்சகர், உலகம்மையின் சேலையில் தெரிந்த எச்சில் துளிகளைக் கண்டு திடுக்கிட்டார். அவ்வமயம் இறைவழிபாட்டுக்குப் பாபநாசம் வந்திருந்த அரசனிடம் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது…
மன்னன் வேதனையுற்றான். இப்பாதகத்தை செய்தவன் யார் என அரசன் யோசித்துக் கொண்டு தூங்குகையில், அவன் கனவில் அசரீரி”விஜயரங்க சொக்கநாதா!! உலகம்மை யான்!! என் மீது கொண்ட பக்தியினால் நமச்சிவயாத்தின் பாடலுக்கு வசப்பட்டு அவனறியாது அவன்பின் சென்றவள் நானே!! எனது கவனக்குறைவாலே அவன் துப்பிய எச்சில் என் மீது பட்டது!!அவனை விட சிறந்த பக்தன் கிடையாது!! ஆதலின் அவனுக்கு சகல மரியாதைகளையும் செய்து கௌரவிப்பாயாக!!!” என்று உலகம்மை எடுத்துரைத்தாள். அம்பிகையின் உத்தரவு கேட்டு அகமகிழ்ந்தான் அரசன். “ஆஹா!! இவரை விட ச்ரேஷ்டமான தேவீ பக்தன் உண்டா??!?” என்றெண்ணி அம்பிகையின் உத்தரவின் படி கௌரவிக்க எண்ணினான்…
நமச்சிவாயரை கோவிலுக்கழைத்து தாங்கள் அம்பிகை தாசர் என்பது ஸத்யமானால்,இதோ உலகம்மை கையிலிருக்கும் தங்கப் பூச்செண்டு, தாங்கள் பாடப் பாட அப்பூச்செண்டை சுற்றியிருக்கும் தங்க கயிறுகள் அறுந்து, இப்பூச்செண்டு தானாய் உங்கள் கையில் வந்து விழ வேண்டும்!! ம்!! ஆகட்டும்” என்றான் அரசன்…
“உலகம்மை அந்தாதி” எனும் அற்புதமான நூலை இயற்றினார். “அபிராமி அந்தாதி”யைப் போல் அதியற்புதமான நூலே இது. அந்தாதி பாடப்பாட அம்மையின் கரத்துள்ள பூச்செண்டின் தங்க நார்கள் அறுந்து விழுந்தன ஒவ்வொன்றாய். ஆஹா!! என்னே!! உலகம்மையின் கருணை!!!
“விண்டல நின்ற சரற்கால சந்திர சுவேதமுக
மண்டலமும் கையில் மலரொடும் தோளில் வழிந்த ரத்ன
குண்டலமும் பொலி வாலப் பிராய குமாரத்தியாய்
செண்டலர் செங்கை உலகாள் என் நாவில் சிறந்தவளே”
எனும் பாடலை பாடி முடித்த சமயம் “படபட” வென்று அனைத்து தங்க நாரும் அறுந்து, தங்கச் செண்டு தேவியின் கையிலிருந்து நமச்சிவாயர் கரத்திற்கு தாவி வந்தது. என்ன!! ஆச்சர்யம்!! அரசர் முதற் கொண்டு அனைவரும் நமச்சிவாயர் பாதத்தில் விழுந்தனர்…இவ்வாரு தன் பக்தனின் எச்சிலை அணியாக ஏற்ற உலகம்மையின் கருணை தான் என்னே.!
இன்று தரிசனம் கிடைத்தது …அம்பிகையின் திருவடிகளில் சரணம்
சனியை போல் கொடுப்பாரும் இல்லை,கெடுப்பாரும் இல்லை என ஒரு சொற்றொடர் உண்டு.நாம் வேண்டினால் நமக்கு செல்வத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் ஒரு ஆல்யம் உண்டு தெரியுமா?அதுதான்“திருக்கொள்ளிக்காடுஅக்கினீஸ்வரர்”ஆலயம்.”கொள்ளி”என்றால் நெருப்பு அந்த நெருப்பாகிய “அக்னி”வழிபட்ட தலம் இது.இந்த திருத்தலத்தில் மூலவர் அகினீஸ்வரராக இருந்தாலும் அந்த கோயில் வீற்றியிருக்கும் சனீஸ்வர பகவ்ான் மிகவும் தன்த்தை கொடுக்க கூடியவர்.
பொதுவாக, ஆலயங்களில் சனி பகவான் கையில் சூலம், வில், அம்பு என்று ஏதேனும் ஆயுதம் இருக்கும். ஆனால் இத்தலத்து சனி பகவானின் கைகளில் எந்த ஆயுதமும் கிடையாது. குபேரேன் வைத்திருப்பதுபோல் வலது மேல் கரத்தில் ஏர்கலப்பைத் தாங்கி அருள்பாலிக்கும் கடவுளாக, அனுக்கிரக மூர்த்தியாக விளங்குகிறார்.இங்கு சனி பகவான் இங்கு மகாலட்சுமி ஸ்தானத்தில் அமர்ந்து சகல செல்வங்களையும் அளிக்கிறார்.தம்மை நம்பி வழிபடுவோருக்கு தன பாக்கியத்தை அள்ளித் தருபவர் இவர். திருநள்ளாறு திருத்தலத்தில் வழிபட்ட நளனுக்கு சனி தோஷம் நீங்கியது. ஆனால் அவன் இழந்த நாட்டையும் செல்வத்தையும் திருக்கொள்ளிக்காடு சனி பகவானை வழிபட்ட பிறகே திரும்பப் பெற்றான் என்கிறது ஆலய வரலாறு.*சனியினால் பாதிக்கப்பட்டவர்கள்,சனி இரண்டாவது சுற்று நடப்பவர்கள்,ஏழரை சனி,அஷ்டம சனி,அரிஷ்டாடம சனி,ஜீவன சனி பீடித்திருப்பவர்கள் இந்த ஆலயம் சென்று வழிபடலாம்.
வயிற்றில் பை உள்ள பாலூட்டி வகை விலங்கு கங்காரு. ஆஸ்திரேலியா கண்டப்பகுதியே இதன் தாயகம். ஆஸ்திரேலிய தேசிய விமான நிறுவனத்தின் சின்னமாக உள்ளது. ஒரே தாவலில் 13 மீட்டர் தூரத்தைத் தாண்டும் திறன் கொண்டது. ஆனால் பின்னோக்கி நகர இயலாது. நீந்தும் திறன் பெற்றது. முன்னங்கால்களை உயர்த்தி பின்னங்கால்களை ஊன்றி அதிவேகமாக குதிக்கும் இது வேக ஓட்டமாக கருதப்படுகிரது. நான்கு கால்களையும் தரையில் ஊன்றி நகர்ந்தால் மெதுவாக நடப்பதாக கொள்ளலாம். வலுமிக்க வால் உண்டு. இது தத்தி குதிக்கும்போது உடல் சம நிலை பேண உதவுகிறது.
கங்காருவின் விருப்ப உணவு புல். உண்டபின் ஆடு மாடு போல அசை போடும். அபாயச் சூழலை உணர்ந்தால் கால்களை வேகமாக தட்டி சக கங்காருவை எச்சரிக்கும் வளர்ந்த ஆண் கங்காரு பக் என்றும் பெண் டோ என்றும் அழைக்கப்படுகிறது. இளம் கங்காருவை ஜோயி என்பர் பிறக்கும்போது 2 செ மீ நீளத்தில் சிறிய புழு போல் காணப்படும். பின் தாயின் வயிற்றுப்பகுதி பையில் வளரும் அதிலிருந்து வெளியே வர ஒன்பது மாதங்கல் வரை ஆகும். பெண் கங்காரு ஒரே சமயத்தில் குட்டிகளை மூன்று அடுக்கு முறையில் பராமரிக்கும் அதாவது முதலில் பிறந்த குட்டி அவ்வப்போது வந்து பால் குடித்து செல்லும். அடுத்து பிறந்த குட்டி பையில் இருக்கும் மூன்றாவது கருவில் இருக்கும். இதனால் பெண் கங்காரு நிரந்தர கர்ப்பிணியாகவே காட்சியளிக்கும் கங்காருவின் பொறுப்புணர்வை போற்றுவோம்.
உணவில் எண்ணெய்க்கு தனித்துவம் உண்டு. சமையல் எண்ணெயில் பல ரகங்கள் உள்ளன. அவற்றில் ரைஸ்பிரான் எண்ணெயும் ஒன்று. நெல்லில் இருந்து அரிசியை பிரிக்கும் போது அரிசி உமி இடையே அதிக சத்து மிக்க பொருள் படிந்து இருக்கும். கைக்குத்தல் முறையில் பிரித்தால் அரிசியில் இந்த பொருள் சேர்ந்துஇருக்கும். இயந்திர முறையில் பிரித்தால் உமியுடன் அகன்றுவிடும்.
இதன் பெயர் தவிடு. ஆங்கிலத்ஹ்டில் ரைஸ்பிரான் என்பர். தவிட்டில் 21 சதவீதம் உள்ள எண்ணெய் சத்து உடல் நலனுக்கு உகந்தது.
உடல் நலனுக்கு ஏற்றதாக மூன்று வகை எண்ணெயை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. அவற்றில் ஒன்று ரைஸ்பிரான் எண்ணெய் மற்றவை ஆலிவ் மற்றும் கார்ன் எண்ணெய். இவற்றில் ஆலிவ் எண்ணெய் விலை மிக அதிகம். பொதுவாக பளிச் வெண்மை நிறத்துக்கு மக்களிடையே வரவேற்பு அதிகம். இந்த மன நிலையை அறிந்த உணவுப்பொருள் வணிக நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்களை வேதியியல் முறையில் பிளீச் செய்கின்றன. இதனால் சமையல் எண்ணெய் இயற்கை நிறம் நுண்ணூட்டச் சத்துக்களும் காணாமல் போய்விடும். ரைஸ்பிரான் எண்ணெயில் ஒரைசனால் என்ற அன்டி ஆக்ஸ்டன்ட் உள்ளது. உடலில் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதை உணவாகக் கொண்டால் இதயம் சம்பந்தமான நோய் பாதிக்கும் வாய்ப்பு குறையும். கிழக்காசிய நாடான ஜப்பானில் இதை ஹார்ட் ஆயில் என்றும் அமெரிக்காவில் ஹெல்த் ஆயில் என்றும் அழைக்கின்றனர். ரைஸ்பிரான் எண்ணெயில் உள்ள லைப்போயிக் என்ற அமிலச்சத்து ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. தோலில் சுருக்கம் விழுவதை தடுக்கிறது.
மாதவிடாய் காலங்களில் பெண்களின் வலியைப் போக்க உதவுகிறது. தேவையான வலிமை மற்றும் ஆற்றலை தருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த எண்ணெயில் உறிஞ்சும் திறன் குறைவு. இதை பயன்படுத்தி தயாரிக்கும் உணவில் பிசுபிசுப்பு தன்மை அதிகம் இருக்காது. செரிமான சக்தியும் அதிகம். ரைஸ்பிரான் எண்ணெய்க்கு தனி மணமோ சுவையோ கிடையாது. சமைக்கும் பொருட்களின் மணத்தையும் சுவையையும் கொண்டிருக்கும். தரமான உணவுப்பொருட்கலை உண்டு உடல் நலம் பேணுவோம்.
ஓர் எதிரியை வீட்டிற்கு வரவேற்பதென்றாலும் அதை மரியாதையுடன் செய்யவேண்டுமென்பது நம் வேதக் கட்டளையாகும்.
எதிரியின் வீட்டிலிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படாத வண்ணம் அவரை நன்கு உபசரிக்க வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுடனும், பீமனுடனும் மகத ராஜனான ஜராசந்தனை அணுகியபோது, மதிப்பிற்குரிய எதிரிகளை ஜராசந்தன் ராஜ மரியாதையுடன் வரவேற்றான்.
எதிரி விருந்தினராக இருந்த பீமன் ஜராசந்தனுடன் சண்டை செய்வதாக இருந்தது. இருப்பினும் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவில் அவர்கள் நண்பர்களைப் போலவும், விருந்தினர்களைப் போலவும் ஒன்றாக அமர்ந்திருப்பது வழக்கம்.
பகலிலோ வாழ்வா, சாவா என்ற ஆபத்தான சூழ்நிலையுடன் அவர்கள் போர் செய்தனர். அதுதான் உபசரணை விதியாகும்.
ஒருவன் பரம ஏழையாக இருந்தாலும், குறைந்தது குடிப்பதற்கு சிறிது நீர் மற்றும் இனிய வார்த்தைகள் ஆகியவற்றையாவது தன் விருந்தினருக்கு அளிக்க வேண்டும் என்பது உபசரணை விதி.
எனவே ஒரு விருந்தினர் நண்பராகவோ அல்லது எதிரியாகவோ இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பதில் எந்த எந்த தயக்கம் கூடாது என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது, நாமும் நம்முடைய விருந்தினர் எதிரியாக இருந்தாலும் அவரை வரவேற்று உபசரிப்பதில் எந்தவித தயக்கம் காட்டாது உபசரிப்போம்
அமெரிக்க அதிபராக 1857 முதல் 1861 வரை பதவி வகித்தவர் ஜேம்ஸ் புக்கன் அவருக்கு ஒரு கடிதம் வந்தது. சில பரிசுப்பொருட்களும் அதில் இருந்தன. அந்த பரிசுகள் யானை தந்தத்தில் அழகுற செதுக்கப்பட்டிருந்தன. சயாமில் இருந்து அந்த கடிதம் வந்திருந்தது. ஆசிய நாடான தாய்லாந்தின் பழைய பெயர் தான் சயாம்.
அந்த கடிதத்தில்………………… அமெரிக்காவுக்கு சில யானைக்குட்டிகளை அன்பளிப்பாக தர விரும்புகிறோம். அவற்றை சிறப்பாக வளர்த்து முறையாக பராமரித்தால் சில வருடங்களில் குட்டிகள் போட்டு பெருகும். அவற்றை கொண்டு அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்கலாம் கனமான சுமைகளை ஏற்றி செல்ல பயன்படுத்தலாம்
இவ்வாறு குறிப்ப்டப்பட்டிருந்தது. கடிதத்துக்கு ஜேம்ஸ் புக்கான் பதில் ஏதும் தரவில்லை. அவருக்கு பின் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றார். ஆபிரகாம் லிங்கன். அந்த கடிதத்துக்கு அவர்தான் பதில் அனுப்பினார். தாய்லாந்து நாடு அனுப்பியிருந்த பரிசுகளுக்கு நன்றி தெரிவித்துடன் எங்கள் நாட்டு யானை குட்டிகள் எதுவும் அனுப்ப வேண்டாம். வலுவான பொருட்களை சுமக்கவும் தூக்கவும் ஆவியில் இயங்கும் ஆட்டோமொபைல் இயந்திரங்களை எங்கள் தொழில் நுட்ப வல்லுனர்கள் துணையால் கண்டுபிடித்துள்ளோம் அவை கனமான பொருட்களை சுலபமாக சுமக்கும் எளிதாக தூக்கும். எனவே யானைகள் தேவையில்லை என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிலால் தாய்லாந்து யானியக் குட்டிகள் அமெரிக்கா போகும் பாக்கியத்தை இழந்தன.
அய்யா நான் மகா விஷ்ணுவைக் கண்ணால் காண முடியுமா….?” என குரு ஒருவரிடம் கேட்டான் சுரேஷ் “தம்பீ……! நான் உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ….,உன்னிடம் ஒரு கேள்வி கேட்கலாமா….? இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா…?”அய்யா எனக்கென்ன கண் இல்லையா…….?இந்த உடம்பை நான் எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.” …!!
“தம்பீ……! கண் இருந்தால் மட்டும் போதாது……!!கண்ணில் ஒளியிருக்க வேண்டும்……!! காது இருந்தால் மட்டும் போதுமா…..? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும்…..!!அறிவு இருந்தால் மட்டும் போதாது…….!!அதில் பரிபூரண ஸ்ரீ மகா விஷ்ணுவின் அன்பை உணரும் நுட்பமும் திட்பமும் அமைந்திருக்க வேண்டும்…!! உடம்பை நீ பார்க்கின்றாய்….!!
இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா….?””ஆம். நன்றாகத் தெரிகின்றது.” “தம்பீ…… …! அவசரப்படாதே…..!! எல்லாம் தெரிகின்றதா….?””என்ன ஐயா விளையாட்டு….! தெரிகின்றது…, தெரிகின்றது…, என்று எத்தனை முறை கூறுவது….?எல்லாம்தான் தெரிகின்றது….?”
“தம்பீ….! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா…?” “ஆம்! தெரிகின்றன.”…..!! “முழுவதும் தெரிகின்றதா…?” அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில்,”முழுவதும் தெரிகின்றது” என்றான்….!! “தம்பீ…! உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா….?” விழித்தான். சுரேஷ் “ஐயா…! பின்புறம் தெரியவில்லை.” “என்றான்.
தம்பீ…! முதலில் தெரிகின்றது.. தெரிகின்றது.. என்று பலமுறை சொன்னாய்….!! இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே….!!சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா…?” “முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.’…!!நிதானித்துக் கூறு….!!.””எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன்….!!எல்லாம் தெரிகின்றது.’…!!'”தம்பீ…! முன்புறத்தின் முக்கியமான, ” முகம் தெரிகின்றதா”…..?சுரேஷ் துணுக்குற்றான்.பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன்,”ஐயனே…! முகம் தெரியவில்லை….!” என்றான்.
“குழந்தாய்…! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை…..!!முன்புறம் முகம் தெரியவில்லை……!!நீ இந்த உடம்பில் சிறிது தான் கண்டிருக்கிறாய்…..!!இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்….!!
அன்பனே…! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால்,இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.” …!!இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு, இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல்,ஞானமே வடிவாய் உள்ள ஸ்ரீ மஹா விஷ்ணுவை காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.”ஒரு கண்ணாடி….. திருவருள்….!!
மற்றொன்று…. குருவருள்…….!! திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால், “ஞானமே வடிவான ஸ்ரீ மகாவிஷ்ணுவை காணலாம்”….!!
“தம்பீ…..! “ஸ்ரீ மகாவிஷ்ணுவைதிருவருள் எங்கும் நிறைந்திருப்பினும்”……,அதனைக் “குருவருள் மூலமே பெறமுடியும்”…..!!” திருவருளும் குருவருளும் ஸ்ரீ மகாவிஷ்ணுவை காண இன்றியமையாதவை.”…..!!!சுரேஷ் தன் தவறை உணர்ந்து குருவின் காலில் விழுந்து பணிந்தான்…
இன்று சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்!இன்று சந்திர தரிசனம் செய்ய மறவாதீர் !இன்று ஜூன் 30-06-2022, சுபகிருது வருடம், ஆனி 16, வியாழக்கிழமை, சந்திர தரிசனம்!
இன்று மூன்றாம் பிறை, சந்திர தரிசனம் செய்வதால் மன நிம்மதி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி உண்டாகும். அமாவாசை முடிந்து மூன்றாம் பிறை தரிசனம் பார்த்து விட்டால் அந்த ஆண்டு இரண்டு மடங்கு வருமானம் செல்வ செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை. மூன்றாம் பிறை பார்க்க முடியாவிட்டால் வீட்டில் சிவ வழிபாடு செய்வதும், சிவன் தலையில் இருக்கும் சந்திரனை இன்று மாலை தரிசனம் செய்வது சிறப்பு.வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, ‘பிறை காணுதல்’ என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ‘சந்திர தரிசனம்’ என்று குறிப்பிட்டுள்ளது.
சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காண வேண்டும் என்று கூறினார்கள்.
மூன்றாம் பிறை உருவான கதை :
ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர்.
உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமை யால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார்.
இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறுபெற்றார்.
சுறுசுறுப்போடு அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடைய முடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்த பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை ‘ஆயிரம் பிறை கண்டவர்’ என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம்.
பலன்கள் :
அமாவசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும்.
குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் இப்பிறையைக் கண்டால் ஓர் ஆண்டு சந்திர தரிசனம் செய்த பலன் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையைக் கண்டால் சகல பாவங்களும் தொலையும்.
நான்காம் பிறையை ஏன் பார்க்கக் கூடாது ?
ஒரு முறை விநாயகப் பெருமான் சந்திரலோகத்துக்கு விஜயம் செய்தார். கையில் கொழுக்கட்டையுடன் வந்திருந்த விநாயகரைக் கண்டு ஏளனம் செய்த சந்திரன் மீது விநாயகர் மிகுந்த கோபம் அடைந்தார். அன்று பிள்ளையார் சதுர்த்தி வேறு. கோபமுற்ற கணபதி, ‘சதுர்த்தியில் உன்னைப் பார்ப்பவர்கள் வீண்பழிக்கு ஆளாவார்கள்!’ என்று சபித்தார். மனம் வருந்திய சந்திரனோ, தான் அறியாது செய்த தவற்றை மன்னித்து சாப விமோசனம் தரும்படி கேட்டுக்கொண் டான். விநாயகர் சந்திரனை மன்னித்தார், ஆனால், மூன்றாம்பிறையைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் முழு மகிழ்ச்சி பொங்கும் என்று அருளினார்.
நான்காம்பிறையைப் பார்த்ததால் வரும் கெடுபலனை எப்படித் தவிர்க்கலாம்? இதற்கும் புராண காலத்தில் கிடைத்த ஒரு தீர்வைப் பார்ப்போம்.
ஒருமுறை சதுர்த்தியில் வரும் நான்காம் பிறையைப் பார்த்து வீண்பழிக்கு ஆளானார் கண்ணன். இதற்குப் பரிகாரமாக, அடுத்த திங்களில் (அடுத்த மாதத்தில்) அமாவாசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் செய்ததோடு கணபதியையும் வேண்டி பழியில் இருந்து விடுபட்டார்.காலை வேளை பிரம்ம முகூர்த்தமாகும். மாலை வேளை விஷ்ணு முகூர்த்தமாகும். எனவே, அந்த வேளையில் சந்திர தரிசனம் செய்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும்.திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராக சந்திர தரிசனம் செய்யலாம். திருமணம் ஆகாதவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மூன்றாம் பிறையை தரிசிக்கலாம். இதனால் குடும்ப ஒற்றுமை பெருகும்.
அருணகிரிநாதர் குருபூஜை ஆனிமாதம் மூலம் நட்சத்திரம் அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் ஆயிரக்கணக்கான பல்வேறு இசைச் சந்தங்களில் பாடினார். கருத்தாழமும், சொல்லழகும், இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவர் பாடல்கள். இவர் எழுதிய திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.இவருடைய நூல்கள் தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப்பாடும் நூலாகவும் பக்தி வழி பின்பற்றுவோர் கொள்ளுகின்றனர்.
உருவ அமைப்பு
அருணகிரிநாதர் கைகளில் ஆறு விரல் இருந்தன. அதனால் முருகப் பெருமானின் ஆறு தலைகளையும், அவருக்குரிய “சரவணபவ” எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும் நினைவுறுத்துவது போல இருப்பதாகக் கூறுவர்.
அருணகிரிநாதர் வரலாறு
திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப்பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு.
அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் விலை மாதரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கு.
என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர் சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு.எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை.
ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.
திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.
பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாமோ?
கந்தன்_வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.
அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.
மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.
சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.
தேவி_உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காட்சி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்,. மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்.
சந்தக்கவி, தளமாலையின் முதல்வர், பன்னிருகை வேலவனைப் பாடியதில் முதல் இடம் பெற்றவர். முருகனை நேரில் தரிசித்தவர். எனினும், அசடர்களும் அறிவிலிகளு மான சிலர் அருணகிரிநாதரைப் பழித்தனர். ஒரு_முறை… திருத்தணிகையில் அடியார்கள் சூழ, ஆறுமுகனை துதித்துத் திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியபடி, மலையை வலம் வந்து கொண்டிருந்தார் அருணகிரிநாதர்.அங்கிருந்த சிலர், ‘‘ஆளப் பார்றா! நெத்தியில சுண்ணாம்பு, உடம்புல காவிப் புடவை, கழுத்துல என்னவோ தொங்குது, கேட்டா ருத்ராட்சம்னு சொல்லுவானுக.கால்கால்னு கத்திக்கிட்டு, மலையைச் சுத்தறாங்களாம். தொல்லை குடுக்கறானுங்கப்பா!’’ என்று பழித்துப் பேசினார்கள்.அவர்களது வம்பு ஒரு கட்டத்தில் எல்லை மீறியது.
அருணகிரிநாதர் மனம் வருந்தினார்.‘‘முருகா! உன் திருப்புகழையும், அதைப் பாடும் இந்த உத்தமர்களையும் இப்படிப் பழித்துப் பேசுகிறார்களே! இவர்களை எரிக்க, தனியாக நெருப்பா வேண்டும்! திருப்புகழே நெருப்பாக மாறி இவர்களை எரித்து விடாதா?’’ என்று முறையிட்டு, ‘சினத்தவர் முடிக்கும்’ என்ற ‘திருப்புகழ்’ பாடலைப் பாடினார். இகழ்ந்தவர் அனைவரும் அப்போதே சாம்பலாகினர். அதைக் கண்ட அருணகிரிநாதர், அதிகம் மனம் வருந்தி முருகனிடம் முறையிட்டார். அதற்கு முருகன் செவி சாய்த்தான். சாம்பலானவர்கள் அனைவரும் மீண்டும் உயிருடன் எழுந்தனர்.அருணகிரிநாதரின் கால்களில் விழுந்து வணங்கிய அவர்கள், ‘‘ஐயா! தங்களை இகழ்ந்த எங்களுக்கும் உயிர்ப் பிச்சை அளித்தீர்களே எங்களை மன்னித்து, அடியார் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்!’’ என வேண்டினர். அந்த வேண்டுதலை அருணகிரிநாதர் நிறைவேற்றினார்.ஒரு_நாள், அருணகிரிநாதரின் எதிரில் புலவர்கள் சிலர் வந்தனர். ஆர்வத்தோடு அவர்களைப் பார்த்தவர் திடுக்கிட்டார்.ஏனெனில், அந்தப் புலவர்கள் அனைவரும் காதுகளை இழந்திருந்தனர். காரணம் கேட்டபோது, ‘‘நாங்கள் பாடிய பாடல்களில் குற்றம் கண்டுபிடித்து வில்லிப்புத்தூரார் இவ்வாறு தண்டித்தார்!’’ என்றனர்.அவர்களை வில்லிப்புத்தூராரிடம் அழைத்துப் போனார். அங்கே, வில்லிப்புத்தூராருக்கும் அருணகிரி நாதருக்கும் புலமைப் போட்டி ஆரம்பமானது. அருணகிரிநாதரின் பாடல்களுக்கு வில்லிப் புத்தூரார் பொருள் சொல்ல வேண்டும். சொல்லா விட்டால் வில்லிப்புத்தூரார் தோற்றுப் போவார்.
#வில்லிப்புத்தூரார் தனது வழக்கப்படி வாளாயுதத்தை அருணகிரிநாதரின் காதில் மாட்டிப் பிடித்துக் கொண்டார். அருணகிரிநாதர் தோற்று விட்டால், அவர் காதை அறுப்பது வில்லிப்புத்தூராரின் எண் ணம்.அருணகிரிநாதரும் அதே போல வாளாயுதம் ஒன்றை வில்லிப்புத்தூராரின் காதில் மாட்டிப் பிடித்துக் கொண்டார். போட்டி ஆரம்பமானது. அருணகிரிநாதர் தடையில்லாமல் பாடல்கள் பாடினார். வில்லிப்புத்தூராரும் தடையின்றிப் பொருள் சொல்லி வந்தார்.இப்படி ஐம்பத்துநாலாவதாக, ‘திதத் தத்தத்’ என்று தொடங்கும் பாடல் வெளியானது.
திதத் தத்தத் தித்தத் திதிதாதை
தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்ததி தித்திதத்த
தேதுத்து தித்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை
தாததீ தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித் திதீதீ
திதி துதி தீ தொத்ததே
இந்தப் பாடலை வில்லிப்புத்தூரார் திரும்பவும் சொல்லலாம் அல்லது பதவுரையோ கருத்துரையோ கூடச் சொல்லலாம்’ என்று வில்லிப்புத் தூராருக்கு விளக்கப்பட்டது. ஆனால், அவரோ, ‘‘என்னால் முடியாது!’’ என்று தன்னிடமிருந்த வாளாயுதத்தை வீசி எறிந்து, ‘‘அருணகிரிநாதரே! நான் தோற்று விட்டேன். என் காதுகளை அறுத்து விடுங்கள்!’’ என்றார்.தன்னிடம் இருந்த வாளாயுதத்தையும் வீசி எறிந்த அருணகிரிநாதர், ‘‘புலவரே! நடந்து கொண்டே இருந்தால் காலும், பார்த்துக் கொண்டே இருந்தால் கண்ணும், பேசிக் கொண்டே இருந்தால் வாயும் வலிக்கும்.
ஆனால், கேட்டுக் கொண்டே இருந்தால் காது வலிக்காது. ஆகவே, நல்லதைக் கேளுங்கள்! நாலு பேருக்குச் சொல்லி வழிகாட்டி வாழ வையுங்கள்!’’ என்று கருணையோடு சொன்னார்.அதன் பின், பாடலுக்கு அருணகிரிநாதரே பொருள் சொல்லி, வில்லிப்புத்தூராரின் வேண்டுதலின் பேரில், மேலும் 46 பாடல்களைப் பாடி நிறைவு செய்தார். அருணகிரிநாதரின் அருள் உள்ளத்தை வெளிப் படுத்தும் இந்த பாடல்கள், ‘கந்தரந்தாதி’ எனும் பெயரில் வில்லிப்புத்தூராரின் உரையோடு இப்போதும் கிடைக்கிறது.அதில் தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அருளை முழுமையாகப் பெற்ற அருணகிரிநாதரின் அருந்தமிழை அறிந்து, உணர்ந்து, தோய்ந்து நாமும் முருகன் அருளை அடையலாம்.
#கிருபானந்த வாரி யார் – அருணகிரிநாதர்
இளம் வயதிலேயே, அருணகிரிநாதர் படத்தைப் பலரிடம் தந்து வழிபடுவதற்கு வழிகாட்டியவர். தலைசிறந்த முருக பக்தர். அருணகிரிநாதரிடம் அளவில் லாத, அசைக்க முடியாத பக்தி கொண்டவர். இப்படிப்பட்டவர், தானே முன்னின்று வயலூர் முருகன் கோயில் ராஜ கோபுரத் திருப்பணியை நடத்திக் கொண்டிருந்தார். ஒரு நாள் இந்த பக்தரும் அவர் நண்பரும் கோயிலி லேயே படுத்துக் கொண்டனர்.விடியற்காலை ஐந்து மணி. பக்தருக்கு இனிமையான ஒரு கனவு. அதில் காங்கேயநல்லூர் முருகன் கோயிலில் அருணகிரி நாதர் விக்கிரகத்தின் முன் நின்று கைகூப்பி வழி படுகிறார் பக்தர். அப்போது அருணகிரிநாதர் வடிவம் முன்பக்கம் சற்றுச் சாய்ந்திருந்தது. ‘ஏன் இப்படி?’ என்று பக்தர் வருந்தினார். சட்டென்று அருணகிரிநாதர் விக்கிரகம் நிமிர்ந்து நின்றது. காவி உடையில் காட்சியளித்த அருணகிரிநாதர், தன் பக்தரை அருகே அழைத்து, ‘‘ரொம்ப பசியா இருக்கு. கொஞ்சம் சாதம் போடு!’’ என்றார்.பக்தர் தன் தம்பியை வீட்டிலிருந்து உணவு எடுத்து வரச் சொன்னார். சற்று நேரத்தில் திரும்பிய தம்பி, ‘‘இந்த நேரத்தில் வீட்டில் அன்னம் இல்லை!’’ என்றார்.
அருணகிரிநாதரோ, ‘‘எனக்குக் கடும் பசி. உப்புமா கிண்டிக் கொடு!’’ என்றார்.பக்தரின் தம்பி மறுபடியும் வீட்டுக்குப் போய் வந்து ‘‘அரிசி நொய்தான் இருக்கிறதாம். அதில் உப்புமா செய்து கொடுத்தால், ஸ்வாமி சாப்பிடுவாரா என்று அம்மா கேட்டு வரச் சொன்னார்!’’ என்றார். அதைக் கேட்ட அருணகிரிநாதர், பக்தரிடம், ‘‘உன் கையால் ஏதாவது தா; என் பசி தீரும்!’’ என்றார்.அருணகிரிநாதருக்கு சரிவர நைவேத்தியம் ஆகவில்லை போலும். ஆகவே, அவரின் நைவேத்தியத்துக்கு ஏதாவது, நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும்!’ எனத் தீர்மானித்தார் பக்தர். பின்பு சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து, இரண்டு ஆண்டுகளில் நான்கு ஏக்கர் நிலம் வாங்கி, அதை அருணகிரிநாதர் பெயரிலேயே பதிவும் செய்தார். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் இன்றும் அருணகிரிநாதருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு, அது பல ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த முருக பக்தர் வேறு யாருமல்ல திருமுருக கிருபானந்த வாரி யார் சுவாமிகள்தான்.
தெய்வ பக்தி பெரியதா? குரு பக்தி பெரியதா? என்பதை ராமானுஜர் மூலமாக பெருமாள் உணர்த்திய ஆன்மிக கதையை விரிவாக பார்க்கலாம்.
#திருப்பதியில் அடிவாரத்தில், சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு, தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராமானுஜர். அப்போது ‘மோரு… மோரு…’ என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. தலையில் மோர்ப்பானை சுமந்து, இடையர் குலப் பெண்மணி ஒருத்தி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தாள். சீடர்களுக்கு மோர் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது. ஆனால், குருநாதர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வேளையில் மோர்க்காரியைக் கூப்பிட்டால், பாடத்தின் மேல் கவனம் இல்லாதது போல் ஆகிவிடும் என்பதால், மோர் ஆசையைத் துறந்து, பாடத்தில் கருத்தாக இருந்தார்கள். ஆனாலும், அன்றைக்கு மோர் குடித்தே ஆக வேண்டும் என்பது எழுதப்பட்டிருந்த ஒன்று போலும்.
#இவர்கள் அனைவரும் கூட்டமாக அமர்ந்து ஏதோ சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பதாக நினைத்த மோர்க்காரப் பெண்மணி, இந்த இடத்தில் பானையை இறக்கி வைத்தால் நல்ல வியாபாரம் ஆகிவிடும் என்று தீர்மானித்து, இவர்கள் பக்கம் நடந்து வந்தாள். ஐயா… சாமீ… நல்ல மோரு. ஆளுக்கு ஒரு குவளை குடிச்சீங்கன்னா, தெம்பா இருக்கும். உஷ்ணம் ஓடியே போயிடும் என்று சொன்னபடி, மோர் பானையைக் கீழே இறக்கி வைத்தாள்.
#ஏற்கெனவே பசியிலும் அசதியிலும் இருந்த சீடர்களுக்கு, மோர் பானையைப் பார்த்ததும் வயிறு கபகபவென்று இருந்தது. ஆளாளுக்கு, எனக்கு… எனக்கு என்று கேட்டு வாங்கிக் குடித்தனர். அவர்களில் ஒரு சில சீடர்கள் இன்னொரு குவளையும் வாங்கிச் சாப்பிட்டனர். மோரின் தரம் அப்படி. எல்லோருக்கும் மோர் கொடுத்து முடித்ததும், பானையின் உள்ளே சற்று எட்டிப் பார்த்தாள் பெண்மணி.
#கிட்டத்தட்ட பானை காலியாக இருந்தது. நிறைந்த மனத்துடன் சீடர்களையும் ராமானுஜரையும் பார்த்தாள். அப்போது அவள் மனத்தில் திடீரென ஓர் ஏக்கம் வந்தது. அதாவது, தானும் இவர்களைப் போல் பக்தித் திறனில் தேர்ந்து விளங்க வேண்டும் என்று ஆசை கொண்டாள். திடீரென்று அப்படி ஒரு பக்தி எழுந்தது ஏன்? மகான்களின் பார்வை விசேஷம் அப்படிப்பட்டது. அதனால், பக்தியின் பிடியில் திடீரென அகப்பட்டுக் கொண்ட காரணத்தால், மோருக்கான காசை கேட்டுப்பெற வேண்டும் என்பதையும் மறந்து நின்றாள்.
#அப்போது அந்தப் பெண்மணியைப் பார்த்து, “அம்மா… நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன?” என்று கேட்டார் ராமானுஜர். மோர் நன்றாக வியாபாரம் ஆகும். காசு கிடைக்கும் என்ற ஆசையில்தான் இங்கே வந்தாள். ஆனால், இப்போது இவளது மனநிலையே வேறாக இருக்கிறது. ராமானுஜரை மரியாதையுடன் பார்த்தாள்.
பிறகு, வேணாம் சாமீ. மோருக்குக் காசெல்லாம் வேணாம்… அதை வெச்சிட்டு நான் என்ன பண்ணப் போறேன்?! என்று இழுத்தாள். அப்படீன்னா காசுக்குப் பதிலா ஏதாவது பொருள் வேணுமா? என்று கேட்டார் சீடர் ஒருவர். ராமானுஜரை நமஸ்கரித்த அந்தப் பெண், “எனக்குக் காசும் வேணாம்… பொருளும் வேணாம் சாமீ. பெருமாள் இருக்கக்கூடிய பரமபதத்தை அடையணும்; மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க. சந்தோஷமா போயிடுவேன்” என்றாள்.
#ராமானுஜர் ஆச்சரியத்துடன் பார்த்தார். ஆசார நியமங்களோ, சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள், ‘மோக்ஷம் வேண்டும்’ என்கிற ஆசை தோன்றியது விந்தைதானே! தவிர, இப்படி ஒரு கோரிக்கையை அவள் வைப்பாள் என்றும் அவர் எதிர்பார்க்கவில்லை. ஒரு சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, “கவலைப்படாதம்மா… உன்னோட நல்ல குணத்துக்கு நிச்சயம் மோட்சம்தான் கிடைக்கும். சந்தோஷமா போயிட்டு வா” என்றார் அவர்.
#ஆனால், அந்தப் பெண்மணி விடவில்லை. “ஒங்க வாக்கு அப்படியே பலிக்கட்டும் சாமீ. ஆனா, அந்த மோட்சம் எனக்குக் கிடைக்கறதுக்கு ஒரு வழியைக் காட்டுங்க. நான் போய்ச் சேர்றேன்” என்றாள். ராமானுஜர் சிரித்தார். “அம்மா… நீ நினைப்பதுபோல் மோட்சத்துக்கு ஒரு வழியைக் காட்டுவதோ, மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ, எனக்கோ இங்கு கூடி இருக்கின்ற சிஷ்யர்களுக்கோ இல்லை. மேலே திருமலையில் இருக்கின்றானே ஒருவன்… ஏழுமலைக்குச் சொந்தக்காரன்… அவன்கிட்டப் போய்க் கேள்.
#உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவனுக்குத் தான் உண்டு” என்றார். இதற்குப் பிறகும் அந்த மோர்க்காரப் பெண்மணி நகர்கிற வழியாக இல்லை. “சாமீ… மேலே இருக்கிற ஏழுமலையான் கிட்ட போய் எத்தனையோ தடவை ‘மோட்சம் வேணும் மோட்சம் வேணும்’னு கேட்டுப் பாத்துட்டேன். ஆனா, அங்கே இருக்கிற பெருமாள் வாயைத் தொறந்து பேசக்கூட மாட்டேங்கிறாரே…” என்றாள் பொருமலாக.
“அப்படி இல்லேம்மா… அவருக்கு எத்தனை வேலை இருக்கோ… அதை ஒரு குறையா சொல்லிட்டு இருக்காதே. உன் மனசுல படறதை – நீ கேக்கணும்னு நினைக்கறதை அவர்கிட்ட கேட்டுக்கிட்டே இரு. என்னிக்கானும் ஒருநாள் நிச்சயம் செவி சாய்ப்பார்” என்றார் ராமானுஜர். “இல்லீங்க சாமீ. ஒங்களைத்தான் நம்புறேன். ஒங்களைப் பாத்த பிறகு எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு” என்றாள், குரலில் உற்சாகத்துடன்.
‘இவள் ஏதோ ஒரு தீர்மானத்துடன்தான் இருக்கிறாள் போலிருக்கிறதே’ என்று யோசித்தார் ராமானுஜர். மீண்டும் அந்தப் பெண்மணியே, விநயமாகப் பேசினாள். “சாமீ… எனக்கு மோட்சம் தரச் சொல்லி பெருமாள்கிட்ட சிபாரிசு செஞ்சு நீங்கதான் ஒரு ஓலை எழுதித் தரணும். ஒங்களை மாதிரி பெரியவங்க ஓலை கொடுத்தா, இருக்கிற வேலையை எல்லாம் விட்டுட்டு பெருமாள் எனக்குப் பதில் சொல்லுவாருன்னு தோணுது” என்றாள் தெளிவாக.
#இதற்கு மேலும் மறுக்க இயலாது என்று உணர்ந்த ராமானுஜர், சிஷ்யனிடம் ஓர் ஓலை நறுக்கும், எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். அதைக் கேட்டதும், சீடர்களுக்கு வியப்பு தாங்க முடியவில்லை. என்றாலும், அவர் கேட்டதை எடுத்துக் கொண்டு வந்து தந்தனர். ‘நிஜமாகவே திருமலை பெருமாளுக்கு சிபாரிசு செய்து, குருநாதர் ஓலை எழுதப் போகிறாரா… இல்லை அந்தப் பெண்மணியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி ஏதேனும் செய்கிறாரா?’ என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாகி, ராமானுஜரைச் சுற்றி அமர்ந்து, கவனிக்கலானார்கள். மேலே அண்ணாந்து திருமலையைப் பார்த்து இருகரம் கூப்பிவிட்டு, ஓலை நறுக்கில் பெறுநர் முகவரியை எழுதும் இடத்தில் ‘ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், திருமலை’ என்று குறிப்பிட்டுவிட்டு, பெண்மணியின் கோரிக்கையை எழுதத் தொடங்கினார் ராமானுஜர். எழுதி முடித்த பின் ஓலையின் கீழே தன் கையெழுத்தையும் போட்டார்.
பின்னே… ஒரு கடிதம் என்றால், அது எங்கிருந்து வருகிறது என்பதும் முக்கியம் ஆயிற்றே! அதை வைத்துதானே சிபாரிசு மதிப்பிடப்படும்?! அதை அந்தப் பெண்மணியிடம் கொடுத்தார். அப்போது ஓலை நறுக்கில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை சீடர்களும் படித்துப் பார்த்தனர். ‘மோர்க்காரிக்கு மோட்சம் கிடைக்க அனுக்ரகம் செய்’ என்பதாக சிபாரிசு செய்து எழுதப்பட்டிருந்தது. ஓலையை வாங்கிய அடுத்த விநாடி அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலையை நோக்கிப் புறப்பட்டாள். மலை ஏறி, பெருமாள் சன்னிதிக்குச் சென்று அங்குள்ள அர்ச்சகர்களிடம் கொடுத்தாள். மோர்க்காரப் பெண்மணியை மேலும் கீழும் பார்த்து, இது என்ன ஓலை? என்று குழப்பத்துடன் கேட்டனர் அர்ச்சகர்கள். அவர்களிடம் முழு விவரத்தையும் சொன்னாள் அவள்.
#ராமானுஜர் எழுதிக் கொடுத்த ஓலை என்று அறிந்ததும், மறுப்பு ஏதும் சொல்லாமல் அதைக்கொண்டு போய் பெருமாளின் முன்னால் நீட்டினர். எப்பேர்ப்பட்ட ஆச்சார்யர், ராமானுஜர் ! அவருக்கு உண்டான முக்கியத்துவத்தை பெருமாள் கொடுக்காமலா இருப்பார்?! தம் வலக் கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டார் பெருமாள். விஷயம் அறிந்தார். பிறகு, உனக்கு மோட்சம் தந்தேன் என்று மோர்க்காரியைப் பார்த்துப் பெருமாள் திருவாய் மலர்ந்தார்
#அடுத்த கணம் வானில் இருந்து பிரகாசமாக ஒரு புஷ்பக விமானம் வந்தது. அதில் இருந்து விஷ்ணு தூதர்கள் இறங்கினர். மோர்க்காரியைத் தங்களுடன் ஏற்றிக் கொண்டு வைகுந்தம் புறப்பட்டனர். ராமானுஜர் ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுத்தால், பெருமாளிடம் எப்பேர்ப்பட்ட கவனிப்பு, பார்த்தீர்களா?
உடையவர், உடையவர் என்று கொண்டாடுவதன் சூட்சுமத்தை உணர்த்துகிற சம்பவமல்லவா இது! தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?..