கங்கையில் கரைக்கப்படும் பாவங்கள் எங்கே மறைகின்றது

ஒருமுறை,  பாவங்கள் எதுவும் செய்யாத புண்ணியாத்மாவான முனிவர் ஒருவர்,கங்கையில் நீராட சென்றார்.அப்போது, அங்கே குளித்துக்கொண்டு இருந்தவர்கள்,”மாதா கங்கே,என் பாவத்தினை போக்கி காத்தருள்க”என்று கூறி நீராடினார்கள்இதை கேட்ட அந்த முனிவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. “இப்படி பாவங்களை ஒழுக்கிவிடப்படும் கங்கையில் நான் குளித்தால் இந்த பாவங்கள்என்னை வந்து ஒட்டி கொள்ளுமல்லவா?”எனவே அதில் குளிக்காமல் இருப்பதே நலம் என்று புறப்படலானார்.

அந்நேரம் ஒரு பெண் அங்குவந்து, ஏன் முனிவரே நீங்கள் குளிக்காமல் செல்கிறீர்கள் என்று கேட்க முனிவர் தன் சந்தேகத்தை அவரிடம் கூறினார்.இந்த நீர் ஓடி சென்று கடலில் கலக்கிறது, எனவே இந்த பாவங்கள் கடலை சென்று அடைகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்,எனவே நீங்கள் இந்த கங்கையில் நீராடுங்கள் என்று கூற முனிவர், அந்த பெண்ணை பார்த்து நீங்கள் சாதாரண பெண்ணாக தெரியவில்லை,நீங்கள் யார் என்று கேட்க, அதை நீங்கள் போக போக தெரிந்து கொள்வீர்கள் என்று கூறி, அங்கிருந்து சென்று விட்டாள்.

நாம் சமுத்திர தீரத்திற்கு செல்வோம் சென்று சமுத்திரத்தை நோக்கி செல்லலானார்.அங்கே சென்ற முனிவர், சமுத்திர தேவனான வருணனை தபம் செய்தார்.வருண தேவனும், அவர் முன் தோன்ற, முனிவர் தன் சந்தேகத்தை அவரிடம் கூறினார். ?”வருண தேவனே, கங்கையில் ஒழுக்கிவிடும் பாவங்கள் அனைத்தும், சமுத்திரத்தில் வந்து அடைகின்றன,அப்படி இருக்க, எப்படி சமுத்திரத்தில் நீராடினால் புண்ணியம் ஆகும்?

இதற்கு, வருண தேவன் “முனிவரே கடலில் கலக்கும் பாவங்கள் அனைத்தும் சூரிய பகவானின் ஒளிக்கதிர்களால் ஆவியாக மாற்றி இழுத்து கொள்வதால், கடல் ஒருபோதும் பாவங்களை தன்னுள் வைத்துக்கொள்ளவில்லை. எனவே, கடல் புண்ணிய நீராடலுக்கு உகந்தது தான்”. என்று கூறி வருண பகவான் மறைந்தார்.இத்துடன் தன் சந்தேகம் தீராத முனிவர், தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சூரிய தேவனை நோக்கி பிரார்த்தனை செய்தார். .”சூரிய பகவானே! கடலில் சேரும் பாவங்களை தன் ஒளிக்கதிர்களால் ஈர்த்துக்கொள்ளும் தங்களை அது பாதிப்பதில்லையா?” என்று கேட்டார்

அதற்கு சூரிய பகவான், முனிவரே தங்கள் சந்தேகம் யதார்த்தமானது தான் சொல்கிறேன் கேள் என்று சூரிய பகவான் விளக்கலானார்”முனிவரே, என் ஒளிக்கதிர்களால் ஆவியாக்கப்படும் பாவங்கள்,என் உஷ்ணத்தால் என்னை நெருங்குவதில்லை.இவை மேகங்களாக வானிலே தங்கிவிடுகிறது” உடனே, முனிவர்”அப்படியென்றால், இந்த பாவங்களின் தாக்கம் என்ன ஆகிறது?” என்று கேட்க”, அதை நீங்கள் மேகத்திடமே கேட்டு அறிந்துகொள்ளலாம்”, என்று கூறி மறைந்தார் சூரிய தேவன்.

உடனே, முனிவர் மேகத்தை வேண்டி தன் கேள்வியை எழுப்பினார். முனிவரின் சந்தேகத்தினை அறிந்த மேகம், “முனிவரே, சூரியனின் ஒளிக்கதிகளால் ஈர்த்தெடுக்கப்பட்ட பாவங்கள், காரிருள் மேகங்களாக வானில் வலம் வருகின்றது.ஆனால், அதன் தாக்கம் அதிகரிக்கும்போது, மழை பெய்விக்கப்படுகின்றது, அங்ஙனம் மழையுடன் அந்த பாவங்கள் பூமிக்கே திரும்பவும் அனுப்பப்படுகின்றது. அதை பொறுமையின் தேவதையான பூமியும் ஏற்றுக்கொள்கிறாள்”.ஆகவே, தங்கள் சந்தேகத்தை பூமாதேவியிடமே கேட்டறிந்து கொள்ளுங்கள்” என்றது மேகம்.எனவே, தன் பிரார்த்தனையை பூமாதேவியிடம் திருப்பினார்முனிவரின் பிரார்த்தனையில் மெச்சிய பூமாதேவி முனிவருக்கு அருளலானார்.

“முனிவரே, பொறுமைக்கு இலக்கணமாகிய எனக்கு, மழை மூலம் என்னை நோக்கி வரும் பாவங்களை ஏற்றுக்கொள்வது என் கடமை. என்றாலும், நான் உட்கொண்ட பாவங்கள், என்னில் தங்குவதில்லை என்பதை நீங்கள் அறிந்தாலும். அத்தகைய பாவங்கள்,மரம் செடிகள் வேர்கள் மூலம் உறிஞ்சி எடுத்து, அதன் காய் கனிகளில் அடைத்து விடுகின்றது. அக்காய் கனிகளை சம்பந்தப்பட்ட மனிதர்கள் உண்ணும் போது மீண்டும் அப்பாவங்கள் அவர்களையே சென்றடைகிறது.

மனிதர்கள் மீண்டும் கங்கைக்கு சென்று பாவத்தை போக்கி கொள்கின்றனர்.இங்கனம், மேற்கொண்ட பாவங்கள் அவர்களை மீண்டும் மீண்டும் வந்தடையும். முனிவரே இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?”இல்லை பூமி மாதா”என்றார் முனிவர். என்றால், “நீங்கள் கங்கை கரைக்கே செல்லுங்கள், அங்கு நீங்கள் முதலில் கண்ட பெண்மணியை சந்தித்தால், முழு விளக்கவும் உங்களுக்கு கிடைக்கும்”, என்றார் பூமி மாதா.இதை கேட்ட முனிவர் மீண்டும் கங்கை கரைக்கே சென்றார். அங்கே, அவர் முதலில் கண்ட பெண்மணியை காணலானார். இதை பார்த்த அப்பெண்மணி,

இப்போது உங்களுக்கு என்ன சந்தேகம்?” என்று வினவ”நீங்கள் வெறும் சாதாரண பெண்மணி இல்லை என்று நான் அறிகிறேன், தாங்கள் யார் என்பதை எனக்கு உணர்த்தியருளுங்கள்”, என்று முனிவர் கேட்க, தன் சுயரூபத்தை காண்பித்து, நான் தான் கங்காதேவி என்று முனிவருக்கு அருளினார்.இதனால் மகிழ்ச்சியுற்ற முனிவர், “மாதா, மனிதர்கள் செய்யும் பாவங்கள், சுழன்று சுழன்று மீண்டும் மனிதர்களையே சென்றடைகிறது. மனிதர்கள் மேலும் மேலும் பாவங்களை செய்து கங்கையில் கரைப்பதால், கங்காநதியில் பாவத்தின் பாரம் அதிகமாகி கொண்டே செல்லுமல்லவா?”முனிவரே, இந்த சந்தேகம் ஒருமுறை எனக்கும் வந்தது, அந்நேரம் நான் சிவபெருமானை வேண்டி என் சந்தேகத்தை முன் வைத்தேன்,

சிவபெருமான்: தேவி, கங்கையில் பாவம் செய்தவர்கள் மட்டுமே நீராடுவதில்லை. பூமியில் புண்ணியாத்மாக்களும் உண்டு என்பதை அறிந்து கொள்ளவும்.அங்ஙனம் புண்ணியம் செய்தவர்கள் கங்கையில் நீராடும் போது கங்கையில் ஒழுகிவரும் பாவங்களின் ஒரு பாகம், அந்த புண்ணியாத்மாவின் புண்ணியத்திற்கேற்ப, எரிந்து நாசமாகிறது.”முனிவரே, இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?” என்று கங்காதேவி கேட்க, “ஆம்” என்றார் முனிவர்.”அதனால் தான் தங்களை நீராடுமாறு கேட்டுக்கொண்டேன்” என்று தேவி கூற. “நிச்சயமாக செய்கிறேன்”, என்று கூறி முனிவர்நீராட சென்றார்.  

Leave a comment