பிரணவன்

ஓம்* ` *என்ற பிரணவ மந்திர ரூபியான ஞானமே வடிவான விநாயகன்*

ஒரு சமயத்தில் சௌனகாதி முனிவர்கள் ஒன்று கூடி தாங்கள் செய்கிற எல்லா நற்செயல்களும் சரிவர நடக்காமலும் பூர்த்தி அடையாமலும் போய் விடுவதாகவும் எண்ணிக் குழப் பம் அடைந்தனர்.இதற்குத் தீர்வு காண பரமேஸ்வரனிடம் சென்று முறையிட்டனர்.பரமன் தனது தர்ம பத்தினி யாம் பார்வதி தேவியை ஞானக் கண்ணால் உற்று நோக்கினார். அந்த சமயத்தில் அதிசயிக்கும் வகையில், மோகன வடிவத்தில், எல்லோரையும் கவர்ந்திழுக்கும் அழகோடு பிள்ளை ஒருவன் தோன்றினான்.

மற்றவர்களது கண்கள் படாமல் இருக்கப் பார்வதி தேவியானவர் பிறரை மயங்கச் செய்யும் இந்த அழகான வடிவத்தை விடுத்துப்பருமனான தொந்தியும் யானைத் தலையும் ஏற்பாய் என்று சொல்லி உருவத்தை மாற்றினாள்.

பரமன் தன் பிள்ளையை அழைத்து, விநாயகன் என்று பெயர் சூட்டிக் கனங்களுக்கெல்லாம் தலைவனாக நியமனம் செய்தார்.இனிமேல் எந்தக் காரியங்கள் செய்தாலும் அவரை வைத்தே தொடங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் அதற்குத் தடைகள் ஏற்படும் என்றும் அறிவித்து விட்டார்.அன்றைய நாள் முதல் இந்நாள் வரை பிள்ளையாரை முதலில் வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது.

32 விநாயகர் மூர்த்தங்கள்

1. பால கணபதி 2. தருண கணபதி 3. பக்தி கணபதி 4. வீர கணபதி 5. சக்தி கணபதி 6. துவிஜ கணபதி 7. சித்தி கணபதி 8. உச்சிட்ட கணபதி 9. விக்ன கணபதி 10. க்ஷிப்ர கணபதி 11. ஏரம்ப கணபதி 12. லட்சுமி கணபதி 13. மஹா கணபதி 14. விஜய கணபதி 15. நிருத்த கணபதி 16. ஊர்த்துவ கணபதி 17. ஏகாட்சர கணபதி 18. வர கணபதி 19. திரயாக்ஷர கணபதி 20. க்ஷிப்ரபிரசாத கணபதி 21. ஹரித்திரா கணபதி 22. ஏகதந்த கணபதி 23. சிருஷ்டி கணபதி 24. உத்தண்ட கணபதி 25. ரணமோசன கணபதி 26. துண்டி கணபதி 27. துவிமுக கணபதி 28. மும்முக கணபதி 29. சிங்க கணபதி 30. யோக கணபதி 31. துர்க்கா கணபதி 32. சங்கடஹர கணபதி

விநாயகர் உருவத் தத்துவம்

தத்துவங்கள் தோன்றும் முறையில் முதற்கண் சுத்தமாயையில் இருந்து `ஓம்` என்ற பிரணவ நாதமே தோன்றியது.பிள்ளையார் பிரணவ வடிவினர் ஆதலால் `பிரணவன்’ என்றும் `மூத்த பிள்ளையார்’ என்றும் அறியப்படுகின்றது. `ஓங்கார நாத தத்துவம்` சிவனையும் சுட்டி நிற்பதால் சிவனும், பிள்ளையாரும் ஒன்றேயென்றும் கொள்ளமுடிகின்றது.பிரணவத்தை முற்றறிந்தவர் என்பதால் பிரணவன், பிரணவநாதன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார். `ஓம்` என்ற பிரணவ மந்திர ரூபியான அவர் ஞானமே வடிவானவர்.

Leave a comment