ஸ்ரீ கிருஷ்ணன் அருள்

நம் அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஸ்ரீ கிருஷ்ணன் அருள் என்றும்  உண்டு நமக்கு

நம் உடலுக்குள் ஆத்மா உண்டா??அது அழிந்து போகாதா??உடல் அழிந்து போகிறதே?.விளக்கம் சொல்லுங்கள் என்ற சீடனுக்கு குரு விளக்கினார். .

” பால் “பயனுள்ளதுதான்…ஆனால் அதை அப்படியே விட்டால் கெட்டுப்போகும்..அதில் ஒரு துளிஉறை மோர் விட்டால் பால் தயிராகி விடும் கெடாது…தயிரான பால் இன்னும் ஒரு நாள் தான் தாங்கும்….

அப்படியே விட்டால் கெட்டுப் போகும்…அதைக் கடைய வேண்டும்….கடைந்தால் வெண்ணெய்ஆகி விடும் கெடாது…

வெண்ணெய் ஆன பால் பல நாள் தாங்காது….அப்படியே விட்டால் கெட்டுப் போகும்….அதை உருக்க வேண்டும்…. சரியாக உருக்கினால் சுத்தமான நெய் ஆகிவிடும்…அந்தப் பரிசுத்தமான நெய் கெடவே கெடாது……

அதுபோலத்தான்…நம்மை ஸ்ரீ கிருஷ்ண பக்தியில் மூழ்க செய்தால் நம் ஆன்மா திரும்ப திரும்ப பிறவிகள் கிடையாது கெட்டுப் போகும் பாலுக்குள்கெடாத நெய் இல்லையா??அதுபோலத்தான்…நம் அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஸ்ரீ கிருஷ்ணன் அருள் என்றும்  உண்டு நமக்கு …

Leave a comment