பூச்சாண்டி சேவை /அங்கோபாங்க சேவை.

பவித்ரோற்சவம்!

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழைத் திருநாள் 9 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான பவித்ர உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் காலை 9.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 9.45 மணிக்கு யாகசாலைக்கு வந்து சேர்ந்தார். அங்கு காலை 10.30 மணிக்கு சிறப்பு திருவாராதனம் கண்டருளினார். பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் நம்பெருமாள் அலங்காரம் வகையறா கண்டருளி இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

பூச்சாண்டி சேவை:

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூச்சாண்டிசேவை எனப்படும் அங்கோபாங்க சேவை நேற்று மதியம் நடைபெற்றது. மதியம் 2 மணிமுதல் மாலை 6 மணிவரை இந்த பூச்சாண்டி சேவையைப் பக்தர்கள் தரிசித்தனர்.

பூச்சாண்டிசேவையின் போது மூலவர் ரெங்கநாதரின் திருமுக மண்டலம் உள்பட திருமேனி முழுவதும் பவித்திர நூலிழைகளைச் சுருள், சுருளாக வைத்து அலங்கரித்திருப்பர். இந்த காட்சி  குழந்தைகளின் பார்வைக்கு அச்சமூட்டுவதுபோல் இருக்கும், எனவே இதைப் பூச்சாண்டி சேவை என்று குறிப்பிடும் பழக்கம் ஏற்பட்டது.

பவித்ர உற்சவத்தின் 7-ஆம் நாளான வருகிற 12-ஆந்தேதி உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் கோவில் கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார், உற்சவத்தின் 9-ஆம் நாளான 14-ஆந் தேதி காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார். மறுநாள் பெரிய பெருமாள் ரெங்கநாதர் திருமேனிக்கு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலக்காப்பு நடைபெறுகிறது.

இதையொட்டி நம்பெருமாள் நாள்தோறும் தங்கக் கொடிமரம் அருகிலுள்ள பவித்ரோத்ஸவ மண்டபத்தில் எழுந்தருளி, பக்தா்களுக்குக் காட்சியளிப்பாா்.

திருவிழாவின் முதல் நாளான புதன்கிழமை காலை 9.15 மணிக்குக் கருவறையிலிருந்து புறப்பட்ட நம்பெருமாள், யாகசாலை மண்டபத்துக்கு காலை 9.45 மணிக்கு வந்தடைந்தாா். தொடா்ந்து காலை 10.30 மணிக்குத் திருவாராதனமும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுலும் நடைபெற்றது. அலங்காரம் வகையறா கண்டருளிய பின்னா், இரவு 11 மணிக்கு கருவறையைச் சென்றடைந்தாா் நம்பெருமாள்.நேற்று பூச்சாண்டி சேவை : திருவிழாவின் 2-ஆம் நாளான புதன்கிழமை (செப்டம்பர் 7) அங்கோபாங்க சேவை எனப்படும் பூச்சாண்டி சேவை நடைபெற்றது. 

 பவித்ரம் என்னும் நூலிழையில் கருவறை பெரிய பெருமாள், உற்ஸவா் திருமேனி முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.இந்த அலங்காரத்தை அங்கோபாங்க சேவை என்றும், குழந்தைகளை பயமுறுத்துவது போல இருப்பதால் பூச்சாண்டி சேவை என்றும் அழைப்பா். பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கும் இந்த சேவை மாலை 6 மணி வரை நடைபெற்றது இரவு 8 மணிக்கு நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு திருப்பவித்ரோத்ஸவ மண்டபம் வந்தடைவாா்.அலங்காரம் வகையறா கண்டருளிய பின்னா், இந்த மண்டபத்திலிருந்து இரவு 9.45 மணிக்குப் புறப்படும் நம்பெருமாள், இரவு 10.15 மணிக்கு கருவறை சென்றடைந்தார். 

பூச்சாண்டி சேவை காரணமாக, பிற்பகல் 2 மணி வரை கருவறை சேவையும், விஸ்வரூப சேவையும் நடைபெறவில்லை.இத் திருவிழா செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெறும்.

*எல்லோருக்கும் சுகம் உண்டாகட்டும் எல்லோருக்கும் அமைதி உண்டாகட்டும் எல்லோரும் எதிலும் முழுமை பெறட்டும் எல்லோருக்கும் எல்லா வளங்களும் உண்டாகட்டும்

Leave a comment