கர்ப்பத்தில் இருக்கும் சிசு

பூலோகத்தில் ஒரு பிறவியை எடுக்கும் முன் ஸ்ரீமந் நாராயணனுக்கும்  ஆத்மாவிற்கும் பெரிய சொற்போரே நடக்குமாம்..இந்த கலியுகத்தில் நான் பிறக்கமாட்டேன் என்று ஸ்ரீமந் நாராயணனிடம் ஆத்மா அடம் பிடிக்குமாம்…. அதற்கு ஸ்ரீமந் நாராயணன் ஆத்மாவிடம் சொல்லுவாராம்…..நீ பிறக்கும் பொழுது நீ இரண்டு வழிகளில் வாழ உனக்கு வாய்ப்பை கொடுத்து அனுப்புகிறேன்.

 அந்த இரண்டை கொண்டு,*நீ உன் இஷ்டம் போல வாழ்ந்து ஒன்று என்னை வந்து அடையலாம்*.இரண்டு உன் மனசு போல வாழ்ந்து திரும்ப திரும்ப பூலோகத்தில் பிறக்கலாம்*..*இரண்டும் உன் கையில் தான் இருக்கிறது*. உன் வாழ்க்கையில் எந்த விதத்திலும் நான் தலையிட மாட்டேன், நீ என்னை அழைத்தால் ஒழிய என்ற ஸ்ரீமந் நாராயணன் *இங்கு தான் சரணாகதி வெளிப்படுகிறது*.

ஒரு ஜீவனுக்கு உரிய ஜீவ ஸ்வாதந்தரியத்தை**உனக்கு கொடுத்து அனுப்புகிறேன்*.*ஸ்ரீமந் நாராயணன் கொடுத்த விளக்கங்களும் உண்மைகளும்* ஒரு ஆத்மா கர்ப்பத்தில் சிசுவாக வளர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஏழாவது மாதம் வரை ஞாபகத்தில் இருக்குமாம்*.. *ஏழாவது மாதத்தில் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவிற்கு* எல்லாம் ஞாபகம் வந்து இறைவனை அழைக்குமாம்.* .*என்னை இனிமேல் பிறக்க வைக்காதே*. *எனக்கு இந்த மனிதப்பிறவி வேண்டாம் என்று கெஞ்சுமாம்*.*அப்பொழுது “ஷடம்” என்னும் வாயு இறைவனை அழைக்கும்* *ஏழாவது மாத சிசுக்களை மூடி அவைகளை சுற்றி ஒரு கவசத்தை உருவாக்கும்.* *அந்தக்கவசத்திற்கு சென்ற பிறவியின் ஞானம்,* *ஞாபகங்கள் எல்லாவற்றையும் மறக்க வைக்கும் சக்தி உள்ளது.*

சிசு குழந்தையாக பிறந்து இந்த பூலோகத்தில் ஒரு பிறவியை எடுத்து கலி காலத்தின் தாக்கங்களாலும் விஹாரங்களாலும் பாதிப்புக்கு உள்ளாகி எல்லா பாவங்களையும் செய்து திரும்ப ஒரு பிறவிக்கு வித்திட்டு இந்த பூலோகத்தில் இருந்து பிறந்து விடுகிறோம்.*வைஷ்ணவ கோவில்களில் பெருமாளின் திருவடிகளை கொண்ட “சடாரி” என்னும் பாதத்தை நம் தலையில் வைப்பார்கள்*. *அது ஏதற்கு என்றால் “நான் கர்ப்பத்தில் இருந்தாலும் ஒரு பிறப்பை எடுத்து இருந்தாலும் எனக்கு உன் நினைவாகவே இருக்க வேண்டும்*. *மறதியை கொடுக்காமல் ஷடம் என்னும் வாயுவிடம் எனக்காக போராடி உன்னுடைய ஞாபகம் எப்பொழுதும் இருக்கும் படி எனக்கு அருள்வாயாக* *என்று பெருமாளை வேண்டி கொள்வது தான் நமக்கு சடாரியை தலையில் வைக்கும் தாத்பர்யம்

Leave a comment