கீரைகளுக்கெல்லாம் அரசன் என்பதால் இது சக்கரவர்த்தி கீரை என பெயர் பெற்றது. மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை இக்கீரைக்கு உண்டு. ரத்தசோகை சரியாவதுடன் மலச்சிக்கல் மறைகிறது. வயிற்றுப் புண்ணை சரி செய்யும் தன்மை சக்கரவர்த்தி மட்டுமில்லாமல் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது சக்கரவர்த்தி கீரை. சக்கரவர்த்தி கீரையில் இரும்புச்சத்து பொட்டாசியம் கால்சியம் துத்த நாகம் மற்றும் நார்ச்சத்து மிகுந்து உள்ளது. இக்கீரை சரிவிகித உணவாகிறது.
.புற்று நோயை தடுக்க வல்ல இந்த கீரை எலும்பை பலமடையச் செய்கிறது. சிறு நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. ஒரு கைப்பிடி சக்கரவர்த்தி கீரை இலையை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு சுக்குப்பொடி ஒரு ஸ்பூன் சேர்த்து நீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதன் மூலம் ரத்தசோகை குணமாகும். மாதவிலக்கு கோளாறு சரியாகும்.
சக்கரவர்த்தி கீரையின் இலையை அரைத்து பசையாக்கி மேல்பூச்சாக பூசி வர வெயிலால் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மறையும். சிராய்ப்பு காயங்கல் ஆறும். ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் உடன் சக்கரவர்த்தி கீரையை சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ளவும். இளஞ்சூட்டுடன் மூட்டு வலி உள்ள இடத்தில் இதை கட்டி வைத்தால் வலி குறையும். வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம். அவ்வாறு செய்தாலும் வலி மறையும். சிறு நீரக கற்கல் தொற்றுக்களை போக்க கூடியதும் எலும்புகளுக்கு பலத்தை கொடுக்ககூடியது இக்கீரை.
தகவல் நன்றி கவிதா சரவணன் திருச்சி தோழி