அலர்நாதர்

முட்டாளே….உன்னைப் போன்ற பக்தியும் நம்பிக்கையும் இல்லாதவன்  படைக்கும் உணவை நான் ஒருபோதும் ஏற்பதில்லை  என்ற அலர்நாத் ஜகந்நாதர்

ஒருசமயம், பகவான் அலர்நாதருக்கு உணவு படைக்கும் சேவையில் ஈடுபட்டு வந்த ஸ்ரீ கேதனர் என்ற பக்தர் , உணவு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை யாசிப்பதற்காக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அவர் மதுசூதனன் என்னும் தனது மகனிடம் தான் இல்லாதபோது உணவு படைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். பகவானின் முன்பு உணவை வைத்துவிட்டு அதனை ஏற்குமாறு அவரிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவனுக்கு அறிவுறுத்தி விட்டுச் சென்றுவிட்டார்.

முதன்முதலாக பகவானுக்கு உணவு படைக்கும் நேரம் வந்தபோது, பகவானுக்கு உணவு கொண்டு வந்த மதுசூதனன், அதனை படைத்து விட்டு, “எனதன்பு பகவானே, இந்த படையலை ஏற்றுக் கொள்ளுங்கள்.நான் சிறுவன் என்பதால் படையலை அர்ப்பணிக்கும் முறை எனக்குச் சரியாகத் தெரியாது” என்று கூறி பிரார்த்தித்தான்.அதன் பிறகு, மது தனது நண்பர்களுடன் விளையாடு வதற்காக வெளியே சென்றுவிட்டான். அவன் திரும்பி வந்த போது உணவு அப்படியே இருப்பதைக் கண்டான்

“பெருமானே, நீங்கள் ஏன் சாப்பிடவில்லை? இதை எனது தந்தை கேள்விப்பட்டால், அவர் என் மீது கோபப்படுவார். தயவுசெய்து சாப்பிடுங்கள்,” என்று அவன் வேண்டினான்.மீண்டும் வெளியே சென்று திரும்பி வந்த மதுசூதனன், தட்டில் உணவு இன்னமும் அப்படியே இருப்பதைக் கண்டான். அதை உண்ணுமாறு அவன் மீண்டும் பகவானை கண்ணீர் மல்க வேண்டினான்.

மூன்றாவது முறையாக மது திரும்பி வந்தபோது, பகவானின் முன்பு வைக்கப்பட்டிருந்த தட்டு காலியாக இருந்தது. அந்த காலித்தட்டை மது மகிழ்ச்சியுடன் தனது தாயாரிடம் எடுத்துச் சென்றான்.“பிரசாதம் எங்கே?” அவள் கேட்டாள்.“அலர்நாதர் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார்!” என்று மது பதிலுரைத்தான்.

தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மதுவும் அவனது குடும்பத்தினரும் பட்டினியாக இருந்தனர்; ஏனெனில், மது எப்போது உணவு படைத்தாலும் பகவான் அதனை முழுவதுமாக சாப்பிட்டு வந்தார்.ஸ்ரீ கேதனன் திரும்பி வந்து நடப்பவற்றை அறிந்தபோது, தனது மகனைக் கடிந்து கொண்டார்.“பகவான் அலர்நாதரின் பிரசாதத்தை நீ என்ன செய்தாய்?”“அவர் சாப்பிட்டு விடுகிறார் தந்தையே. தாங்கள் சொல்லித் தந்தபடியே நான் அவருக்குப் படைத்தேன்.”“அவர் சாப்பிட்டிருக்க முடியாது. அவர் ஒரு கற்சிலை,” என்று ஸ்ரீ கேதனன் பதிலுரைத்தார்.

இருப்பினும், என்னதான் நடக்கிறது என்பதை அறிய ஸ்ரீ கேதனன் விரும்பினார். எனவே, தனது மகன் பகவானுக்கு உணவு படைத்தபோது, அவர் ஒரு தூணிற்குப் பின்னால் மறைந்து கொண்டார்.மதுசூதனன் சென்ற பின்பு, பகவான் கீழே குனிந்து பாயாசம் இருந்த கிண்ணத்தை எடுப்பதை ஸ்ரீ கேதனன் மறைந்தபடி பார்த்தார். தூணின் பின்னாலிருந்து வெளிப்பட்ட ஸ்ரீ கேதனன், பகவானின் கையைப் பிடிக்க, சூடாக இருந்த பாயாசம் பகவானது திருமேனியில் சிந்தியது. “நிறுத்துங்கள்!” என ஸ்ரீ கேதனன் கூக்குரலிட்டார்.

நீங்கள் என்ன செய்கிறீர்கள்? விக்ரஹம் உணவு உண்பதாக யாரேனும் கேள்விப்பட்டதுண்டா? நீங்களே எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டால், நாங்கள் எவ்வாறு வாழ முடியும்?”பகவான் அலர்நாதர் பதிலுரைத்தார்: “பக்தனின் போர்வையில் உள்ள  முட்டாளே….உன்னைப் போன்ற பக்தியும் நம்பிக்கையும் இல்லாத மனிதனால் படைக்கும் உணவை நான் ஒருபோதும் ஏற்பதில்லை.

எளிமையான முறையில் அன்புடன் அர்ப்பணித்த காரணத்தினால், மது கொடுத்த உணவை நான் ஏற்று வந்தேன்.”சூடான பாயாசம் பட்டதால், பகவான் அலர்நாதரின் உடலில் ஏற்பட்ட தழும்புகளை கோயிலில் உள்ளவர்கள் இன்றும் நமக்குக் காட்டுகின்றனர்.

கண்ணன் உண்ணும் கணக்கு

பாரதப் போர் தொடங்கும் சமயம். பாரதத்திலுள்ள சில அரசர்கள் பாண்டவர் பக்கமும் சிலர் கெளரவம் பக்கமும் சென்றார்கள். உடுப்பி  தேச ராஜா,”  நான் எந்தப் பக்கமும் சேரப் போவதில்லை.

எல்லா போர் வீரர்களுக்கும் உணவு அளிப்பதை என் கடமையாக எடுத்துக் கொள்கிறேன். மகாபாரதப் போரில் பங்கெடுத்த கெளரவ பாண்டவ சேனை வீரர்களுக்கு உணவு ஒன்றாக பரிமாறப்பட்டது.

தர்மருக்கும் கிருஷ்ணனுக்கும் உணவை பரிமாறுவது தனது கடமையென நினைத்தார் உடுப்பி தேசத்து ராஜா. 

ஒவ்வொரு நாளும் எவ்வளவு பேருக்கு உணவு தயாரிக்க வேண்டும் என்பதை உடுப்பி ராஜாவே கணக்கிட்டு சொல்வார். அதன்படி (பிரசாதம்) உணவு பொருட்கள்  தயாரிக்கப் படும். கூடுதலாகவோ குறைவாகவோ என்றும் இருந்ததில்லை.

கெளரவச் சேனை வீரர்கள் எல்லோரும் உணவு உண்ட பின் நேரே துரியோதனனிடம் சென்று ,” நமது வீரர்கள் அனைவரும் உணவு உண்டு விட்டனர்” என்று சொல்வார்கள்.

அதே போல் தர்மர் தனது படை வீரர்களை அழைத்து,” எல்லோரும் உணவு சாப்பிட்டு விட்டீர்களா? என்று  விசாரிப்பார். வீரர்கள்,” எல்லோரும் உணவு சாப்பிட்டு விட்டோம்!” என்பார்கள்.

இது தினப்படி நடக்கும் விஷயமாகி விட்டது. தர்மருக்கு  இது ஒரு ஆச்சரியமான விஷயமாகப் பட்டது. அது எப்படி சரியான கணக்காக சாப்பாடு தயாரிக்க முடிந்தது ?அவருக்கு அது ஒரு புரியாத புதிராகவே இருந்தது.

நேரே சமையல் கூடம் சென்றார். அங்கு பணி புரிந்து கொண்டிருந்த சமையற்காரர்களைப் போய் கேட்டார். இது நாள்  வரை எந்த வீரரும் பட்டினியில்லை! அனைவருக்கும் சரியாக சாப்பாடு போடப் படுகிறது! இது எப்படி ? புரியாத புதிராக இருக்கிறதே! எங்ஙனம் பாண்டவர்கள் கெளரவர்கள் பக்கம் இறப்பவர்களைக் கணக்கிடுகிறார்கள்? ஒரு நாள் எங்கள் பக்கம் இறப்பவர்கள் அதிகமாக இருப்பார்கள்! மறுநாள் கெளரவர்கள் பக்கம் இறப்பவர்கள் அதிகம்! இதைக் கணக்கிடுவது கடினம் அன்றோ! என்றார்.

அதற்கு பணியாட்கள்,” எங்கள் மன்னன் தான் இன்று இத்தனை பேருக்கு சமையல் செய்ய வேண்டும் என்று கணக்கிட்டுச் சொல்வார். நாங்கள் அதன்படி தயாரிப்போம்!” என்றனர். தர்மர் முதலில் இந்த சந்தேகத்தை கிருஷ்ணனிடம் கேட்டார். கிருஷ்ணரோ,” இதை நீ நேரிடியாக உடுப்பி மன்னனிடமே போய் கேள்!” என்றார்.

தர்மர் உடுப்பி அரசனைக் காணச் சென்றார். அவரிடம் தனது  சந்தேகத்தைக் கேட்டார்.

அவரும் மிகவும் பவ்வயமாகவும் அமைதியாகவும்,” தர்மரே! தாங்களும் கிருஷ்ணனும் தினமும் ஒன்றாக தானே உண்ண வருவீர்கள் அல்லவா?என்று கேட்டார்.”ஆமாம் ஆமாம்!” என்றார் தர்மர்.

பின் ,”உங்களுக்கும் கிருஷ்ணனுக்கும் நானே எனது கரத்தால் உணவை பரிமாறுவேன் அல்லவா? ” என்றார் உடுப்பி அரசன்.அதற்கும் தர்மர்,” ஆமாம் !”என்று தலை அசைத்தார்.

அப்போது நான் கிருஷ்ணன் சாப்பிடும்  கவளங்களை கணக்கெடுப்பேன்.

ஒரு கவளத்துக்கு* *ஆயிரம் பேர் என எடுத்துக் கொள்வேன்! இதில்* *சிறு சிறு பருக்கைகளையும்* *சேர்த்துத்தான்!* *அதை வைத்துக் கொண்டு அடுத்த நாள் போரில்* *இத்தனை ஆயிரம் பேர் மடிவார்கள்* *என்று கணக்கிட்டு மீதியுள்ள வீரர்களுக்கு தயார் செய்வேன்! இது எனக்கும் கிருஷ்ணனுக்கும் உண்டான கணக்கு வழக்கு! ரகசியம் பரமரகசியம்!”

என்றார் உடுப்பி மன்னன்.

தர்மர் நேரே கிருஷ்ணனிடம் சென்றார். தர்மர், கண்ணனைத் கண்டவுடன் மண்டியிட்டு ,” *கிருஷ்ணா! நீதான் இந்த போரில் ஒவ்வொரு நாளும்* எவ்வளவு பேர் இறக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறாய்!”* *நாங்கள் எல்லாம்* *வெறும் பொம்மைகள்!”*

என்று விழுந்து வணங்கினார்.

சான்றோர்களின் வாக்குப் படி,”* *பகவானின் கருணையாலும் கட்டளையாலும் தான் நாம் வளர்கிறோம்! *வாழ்கிறோம்! பகவான் அருளால் தான் ஒரு முனைப் புல் கூட முளைக்கும்.

நமது கையில் ஒன்றுமில்லை!* *பகவான் எல்லாவற்றையும்* *தீர்மானித்து செயல் புரிகிறான்!*நமது புத்திசாலி*

*தனத்தாலோ* *புலமையினாலோ* *நிர்வாகத் திறமையினாலோ* *இவையெல்லாம் செய்ய முடியாது.

பகவானே காரணமும் கர்த்தாவும்.நாம், அவனால் ஆட்டிப் படைக்கப்படும் பொம்மைகள்!நமக்கு அதிகாரமுமில்லை அதனால் ஆணவமும் தேவையில்லை! இதை உணர்வது கடினம்.ஆனால் உணர வேண்டும்.

எல்லாம் ஸ்ரீ கிருஷ்ணனுக்கே அர்ப்பணம். 

ஜெய் ஸ்ரீராம்

எம தர்மா.* … *என்னுடைய பல்லக்குத் தூக்குபவர்களில்* , *நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்ற ஸ்ரீ ராம நாமம் சொன்ன பக்தன் 

வீதியில்  ராமா நாம சங்கீர்த்தனம் பாடியபடி  பஜனை கோஷ்டி ஒன்று சென்று கொண்டிருந்தது.அதை அலட்சியம் செய்த கதிரேசன் என்பவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி ஒருவர் இதை  ஒரு போதும் விற்காதே ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார் என்றார்.

கதிரேசனும் அப்படியே செய்தான்.காலகிரமத்தில் இறந்து போனான்.அவன் ஆத்மாவை இழுத்துப் போய் யமதர்மராஜன் முன் நிறுத்தினர்.அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய் அதற்காக என்ன வேண்டுமோ கேள் என்றார்.

ராம நாமத்தை உபதேசித்த ஞானி அதை விற்காதே என்று கூறியிருந்ததுநினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு விலை கூற மறுத்து, ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள் என்றான்.

திகைத்த யமதர்ம ராஜா ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது  என்று எண்ணி இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும் வா இந்திரனிடம் போகலாம் என்றார்.

‘நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன் அத்துடன், எம தர்மா….என்னுடைய பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா என்றான்.இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.

இந்திரனோ ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள் என்றார்.யமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன் என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான்.

அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.அவரும் ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள் என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.

அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று  இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை என்றனர்.இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே… இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா ??  என்று சொல்லி ..பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான் !!

 *ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்* !

பணக்காரப் பாட்டி

பணக்காரப் பாட்டி” என்று பெரியவாளால் விளையாட்டாக வம்பிழுக்கப்பட்ட பாக்யஶாலிதான், கோகிலாபாட்டி என்ற எஸையனூர் பாட்டி. ஜகன்மாதாவான பெரியவாளுக்கே, யஶோதையாகி, மாத்ரு பாவத்தில் பக்தியை பொழிந்தவள்.நல்ல பணவஸதி படைத்திருந்தாலும், சிறு வயஸிலேயே கணவனையும், குழந்தைகளையும் பறிகொடுத்துவிட்டு, ‘பெண்களுக்கு வைதவ்யம் என்பது ஶாபமில்லை; பகவான் குடுத்த ஸந்யாஸம்‘ என்ற பெரியவாளின் வாக்கை வேதவாக்காக கொண்டு, ‘அத்தனை ஸொத்தும் பெரியவா கைங்கர்யத்துக்கே! ” என்று வைராக்யமாக வாழ்ந்தவள்.எஸையனூரை சேர்ந்த, ப்ரஹ்மஸ்ரீ வேதபுரி மாமா, சிறுவனாக இருந்தபோது, பெரியவாளுக்கு எப்படி கைங்கர்யம் பண்ணவேண்டும் என்பதை அரிச்சுவடி பாடமாக ஆரம்பித்து வைத்தவள் இந்த எஸையனூர் பாட்டி.பல வர்ஷங்களுக்கு முன்பு, ஒரு சாதுர்மாஸ்யத்துக்கு எஸையனூரில் பெரியவா முகாமிட்டிருந்தார்.அப்போது 8 வயஸு சிறுவன் வேதபுரிக்கு, பெரியவாளின் பரம பக்தையான, கோகிலாப்பாட்டி என்ற எஸையனூர் பாட்டி சொல்வதே வேதவாக்கு!“வேதபுரி….. தெனோமும் வயல்லேர்ந்து பூ எல்லாத்தையும் பறிச்சிண்டு வந்து, பெரியவாளுக்கு முன்னால வெச்சுட்டு நமஸ்காரம் பண்ணு! பல்லு தேச்சுட்டு, விபூதி இட்டுண்டு பூவை பறிக்கணும்… என்ன?”கர்ம ஶ்ரத்தையோடு பாட்டி சொன்னதை சிறுவன் வேதபுரி கடைப்பிடித்தான்

. ஒருநாள், ஶ்ரீமடத்தில், ஶ்ரீசந்த்ரமௌலீஶ்வரர் பூஜை முடிந்ததும், பெரியவா எல்லாருக்கும் தீர்த்தம் குடுத்தார். வேதபுரி தீர்த்தம் வாங்க கையை நீட்டியதும், பெரியவாளின் திருக்கரத்திலிருந்து தீர்த்தம் வேதபுரியின் குட்டிக் கைகளில் விழுந்தது…. கூடவே, திருவாயிலிருந்து ஒரு கட்டளையும் விழுந்தது!“இங்கியே…. ஓரமா நில்லு….”என்னமோ, ஏதோ, என்று பயந்து கொண்டு திரு திருவென்று முழித்துக் கொண்டு ஓரமாக நிற்கும் வேதபுரியைப் பார்த்ததும், பெரியவா சிரித்துக் கொண்டே, அதிக வாஞ்சையுடன்,“பயப்படாதடா! ஒங்கிட்ட பேசணும்!…”ஜகதாச்சார்யனுக்கு, இந்த சிறுவனிடம் அப்படி என்ன பேச வேண்டுமோ?தன் பாதங்களில் விழ வேண்டிய புஷ்பங்களை பகவானே தேர்வு செய்வான்! இல்லையா?எல்லாருக்கும் தீர்த்தம் குடுத்தானதும், வேதபுரியைக் கூப்பிட்டார்.“ஆமா…. தெனோமும் பூ கொண்டு வரியே?…… நீயா கொண்டு வரியா? இல்லேன்னா… யாராவுது சொன்னதுனால கொண்டு வரியா?…”குழந்தை மனஸில் உள்ள ஸத்யம், பளிச்சென்று வாயிலும் வந்தது!“கோகிலாப்பாட்டிதான் எங்கிட்ட, ‘தெனோமும் பெரியவாளுக்கு இப்டிப் பண்ணு’-ன்னு சொன்னா! அதான் செய்யறேன்”“ஓஹோ! பாட்டி சொல்லித்தான் செய்வியோ? ஏன்? ஒனக்கே தெரியாதா?..…..”“ஆத்துல யாராவுது பெரியவா சொல்லிக் குடுத்தாத்தானே எனக்கு தெரியும்? நா…. சின்னக் கொழந்தை, ஒண்ணுமே தெரியாது…. சொல்லிக் குடுத்தா செய்வேன்”“வாடா! என் அன்பு மகனே!…..”தெய்வம் தன் மகிழ்ச்சியை, சிரிப்பாக கொட்டியது.“எனக்கு ஒன்ன ரொம்ப பிடிச்சிருக்கு….. நீ…. எங்கூட வரியா?….. என்ன ஸம்பளம் வேணும்? சொல்லு……”“உம்மாச்சி… என்ன குடுக்கறேளோ, அத… வாங்கிக்கறேன்”பெரியவாளின் முகத்தில் புன்னகை அரும்பியது.தன்னையே அல்லவோ முழுஸாகத் தந்துவிட்டார்! கோடிகோடியான பணமெல்லாம் இனி…. எந்த மூலைக்கு?“உம்மாச்சி….. என்னோட அம்மா….. நா… சின்னவனா இருக்கச்சயே செத்துப் போய்ட்டா! அப்பாதான் என்னை வளக்கறார். அப்பா, ‘ஸெரி’ன்னு சொன்னா…. ஒங்களோட வரேன்”“நீங்க எத்தனை கொழந்தேள்….. ஒங்க அப்பாக்கு?….”“நா…..ஒரு அக்கா, ரெண்டு தம்பி. ஒரு தம்பி செத்துப் போய்ட்டான். அக்காவுக்கு கல்யாணமாயி புக்காத்துல இருக்கா…..”“அப்போ ஸெரி….ஒன்னோட தம்பி வந்து… ஒங்கப்பாவை பாத்துக்கட்டும்..! நீ… என்னோட வா!…..”என்ன ஒரு பாக்யம் !“ஏண்டா வேதபுரி…! பெரியவா என்னடா பேசினா? சொல்லு….”கோகிலாப்பாட்டி குருநாதரின் திருவாக்கில் வந்ததை கேட்க ஆசைப்பட்டாள்.“என்னை பாத்து, ‘எங்கூட வரயா?’ன்னு கேட்டா…. என்ன ஸம்பளம் வேணுன்னு கேட்டா…..”“நீ என்னடா சொன்ன?…”“நா…..பெரியவா… என்ன குடுக்கறேளோ, வாங்கிக்கறேன்னு சொன்னேன்…..”பாட்டியின் முகத்தில் லேஸாக கோபம் தெரிந்தது!“அஸடே! பெரியவாகிட்ட ஸம்பளம்-லாம் வாங்கப்டாதுடா ! அவரோட க்ருபா கடாக்ஷமே போறும்..!ஒங்க குடும்பத்தை காப்பாத்தும்..!”“ஸெரி பாட்டி……”கொஞ்சநாட்கள் கழித்து, நம்முடைய தாயுமான’குழந்தை’ஸ்வாமி, வேதபுரியின் வாயைக் கிண்டியது……“என்னடா? …ஒனக்கு… எவ்ளோ ஸம்பளம் வேணும்? சொல்லவேயில்லியே…”“எனக்கு… பெரியவாளோட அனுக்ரஹம் மட்டும் போறும்…”“ஓஹோ! என்ன? அந்த பணக்காரப்பாட்டி சொன்னாளாக்கும்?…”“ஆமா…….”பெரியவாளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. சாதுர்மாஸ்யம் முடிந்ததும், பெரியவா எஸையனூரை விட்டுக் கிளம்பினார்.சிறுவன் வேதபுரியின் வீட்டுவாஸலில், அந்த வேத முதல்வனின் பல்லக்கு நின்றது! வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் நமஸ்காரம் செய்தனர். குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு நின்ற சிறுவன் வேதபுரியிடம்,“அன்னிக்கி என்னோட வரேன்னியே?…… வரியா?….”“ஓ ! வரேனே!…”பக்கத்தில் நின்று கொண்டிருந்த கோகிலாப்பாட்டியிடம், முறையாக permission கேட்கிறாராம்!“என்ன? இந்தக் கொழந்தைய அழைச்சுக்கட்டுமா?……..”பாட்டியோ, வேதபுரியின் பரம பாக்யத்தை எண்ணியெண்ணி கண்கள் ஆறாகப் பெருக,“ஈஶ்வரா! பெரியவா இஷ்டம்! பாவம்…! தாயில்லாக் கொழந்தை! பெரியவாதான்… பாத்துக்கணும்”“.நீ…..நெறைய்ய செஞ்சுட்ட..! இனிமே…..இந்தக் கொழந்தைய… நா….. பாத்துக்கறேன்! [ஆஹா! எப்பேர்ப்பட்ட அனுக்ரஹ அரவணைப்பு!] ஒங்கிட்ட கேக்கறதுக்கு முந்தியே, இவன்ட்ட, எங்கூட வரியான்னு கேட்டேன்….”பாட்டி மேல் பெரியவா வைத்திருந்த அன்பு….. அளவிலாதது!

 Sri SIVAN SAR

சூரிய பகவான் வந்து தீர்ப்பு கூறுவார்

 மகாபாரதம் போரின் முடிவில் கவுரவருக்கும் பாண்டவருக்குமிடையே அறிவுத் தேர்வு நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. இருபாலருக்கும் ஒரே அளவு பணத்தைக் கொடுத்து, அதைக் கொண்டு ஒரு அறை நிறைய பொருட்களை நிரப்பிவைக்க வேண்டுமென்று துரோணர் கூறினார்.துரியோதனன் அறை முழுக்க வைக்கோலை வாங்கி அடைத்து வைத்திருந்தான். பீஷ்மர், விதுரர், கிருபர் போன்றோர் வந்து அறையைத் திறந்ததும் தும்மல்தான் வந்தது.பஞ்ச பாண்டவர்களின் அறையைத் திறந்ததும் அறை முழுவதும் கோலங்கள். அதில் நேர்த்தியாக விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. மலர்த் தோரணங்கள், பழங்கள், பால், சந்தனம் எல்லாம் தயாராக இருந்தன. அகில் வாசனை மனதை நிறைத்தது.பாண்டவர்களின் மதி நுட்பத்தை எண்ணி அனை வரும் வியந்தனர். 

தாங்கள் தோற்றதை எண்ணிக் கோபமுற்ற துரியோதனன், ஒரே தேர்வில் யார் புத்திசாலிகள் என்பதை முடிவு செயலாகாது” என வாதிட்டான்.துரோணரும் அதற்கிசைந்து நூற்றைந்து பேரையும் அழைத்து, இன்று முதல் பத்து நாட்களுக்குள் கௌரவர்கள் எட்டு குடங்களிலும், பாண்டவர்கள் எட்டு குடங்களிலும் பனி நீரை நிரப்ப வேண்டும். பத்தாம் நாள் காலை சூரியன் தோன்றுவதற்கு முன் நாங்கள் வந்து பார்ப்போம்” என்றார்.‘சரி’ என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.கவுரவர்களுக்கு இதை எப்படிச் செய்வது என்று விளங்காது போகவே, மாமன் சகுனியின் உதவியை நாடினர். 

இதற்கிடையில், ஒன்பது நாட்கள் கடந்துவிட்டன. பத்தாம் நாள் காலை சூரிய உதயத்திற்குள் எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்ப வேண்டும். அப்படி செய்யாவிட்டால், தோற்று அவமானப்பட வேண்டும் என்பதை எண்ணி அஞ்சினர் கவுரவர்கள்.நடு நிசியில் பனி பெய்து கொண்டிருந்த போது, கவுரவர்கள் அனைவரும் தங்கள் மாமன் சகுனியின் அரண்மனைத் தோட்டத்திற்குள் சென்றனர். செடியின் இலைகளில் தேங்கிக் கிடந்த பனிநீரைத் தனித்தனியாக எடுத்து குடத்தில் விட்டனர். இப்படியே காலை சூரிய உதயம் வரை செய்தனர். அவர்கள் சேகரித்த பனிநீர் ஒரு குடம் மட்டுமே இருந்தது. மற்ற குடங்களில் எப்படி நிரப்புவது? சகுனியின் யோசனையின்படி மற்ற குடங்களில் நீரை நிரப்பி குடங்களைப் போட்டி நடக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.

பாண்டவர்களும், எட்டுக் குடங்களுடன் போட்டி நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தனர். போட்டியைக் காண பலர் கூடி விட்டனர். இரு சாரரும் பனி நீர் நிரம்பிய தங்களுடைய எட்டுக்குடங்களையும் குருவின் முன்வைத்தனர்.மன்னர் திருதராஷ்டிரர் தன் மக்கள் எட்டுக் குடங்களில் பனிநீரை நிரப்பிவிட்டனர் என்ற மகிழ்ச்சியில்… “”துரோணரே! என் புதல்வர்கள் அறிவு படைத்தவர்கள் இல்லையா?” என்று கேட்டார்.”மன்னவா! சோதனை இன்னும் முடியவில்லை. சற்று நேரத்தில் சூரிய பகவான் வந்து தீர்ப்பு கூறுவார்,” என்று குரு பதிலளித்தார்.சூரிய பகவான் வருவதா? தீர்ப்பு கூறுவதா? அது என்ன என்று புரியாமல் அனைவரும் விழித்தனர்.

துரோணரே பாண்டவர்களிடம் தங்களுடைய எட்டுக் குடம் பனிநீரை சூரிய வெயில் படும்படி வைக்குமாறு தெரிவித்தார். அப்படியே அவர்களும் செய்தனர். சூரியஒளி பட்டதும், எட்டுக் குடங்களிலிருந்த நீர் மெல்ல ஆவியாக மறைந்து விட்டது. பின்னர் கவுரவர்களை தங்களுடைய எட்டுக்குடம் பனிநீரை சூரிய வெயில் படும்படி வைக்குமாறு கூறினார். எட்டுக்குடங்களும் சூரிய வெயிலில் வைக்கப்பட்டன. ஒரு குடத்திலிருந்த நீர் மட்டும் ஆவியாக மாறி மறைந்தது. மற்ற ஏழு குடங்களிலிருந்த நீர் அப் படியே இருந்ததே தவிர ஆவியாக மாறவில்லை.”மன்னவா! தங்கள் மைந்தர்கள் ஒரு குடத்தில் மட்டும் பனிநீரையும், மற்ற குடங்களில் தண்ணீரையும் நிரப்பி விட்டனர். 

போட்டியில் யார் வெற்றி பெற்றனர் என்பதை நீங்களே தெரிவிக்கலாம்,” என்று கூறியதும், மன்னர் பதில் கூறாது தலை குனிந்தார்.பாண்டவர்கள் எப்படி எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்பினர் என்று தருமனிடம், துரோணர் கேட்டார். “போட்டி முடிவுறும் பத்தாம் நாள், முன் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்னர் தோட்டத்தில் உள்ள செடி, கொடிகளின் மீதெல்லாம் துணிகளை விரித்து வைத்தோம். இரவு முழுதும் பெய்த பனி அத்துணிகளின் மீது விழுந்து நனைந்திருந்தன. காலையில் அத்துணிகளை எடுத்து குடத்தில் பிழிந்து எட்டுக் குடங்களில் பனி நீரை நிரப்பி விட்டோம்,” என்று தருமன் பதிலளித்தான். பாண்டவர்கள் உண்மையிலேயே புத்திசாலிகள் என்று மக்கள் போற்றினர். கவுரவர்கள் அவமானத்தில் தலை குனிந்தவாறு வெளிஏறினர்

மச்சேஸ்வரர்

திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்ட கோயில்

சோமுகாசுரன் வேதங்களை  திருடிச்சென்று, கடலுக்கடியில் 

ஒளிந்துகொண்டபோது, திருமால் பெரிய சுறா மீனாக உருவம் 

தாங்கி, கடலுக்கடியில் சென்று, அவனை சம்ஹாரம் செய்து, 

வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். 

பிறகு மீன் உருவத்துடன் கடலுக்கடியில் சென்று மகிழ்ச்சியில்

 கடலை கலக்கி விளையாடினார். இந்த செயலால் உலகம் 

துன்பமடைந்தது.

அப்போது சிவபெருமான் பெரிய கொக்கு வடிவமெடுத்து திருமாலுக்கு தன் தவறை உணர்த்தினார். திருமால் மத்ஸ்ய (மீன்) உருவத்துடன் பல காலம் சிவபூஜை செய்ததாக வரலாறு கூறுகிறது.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலின் முன் உள்ள 16 கால் மண்டபத்தில் உள்ள தூணில் பெரிய கொக்கு வடிவில் சிவபெருமானும், அவருடைய அலகில் சிக்கிக்கொண்டு மீன் உருவத்தில் வழிபடும் பெருமாளையும் காண்கிறோம். 

திருமால் மீனாக அவதாரம் எடுத்து சிவனை வழிபட்டதால் இக்கோயில் இறைவன் மச்சேஸ்வரர் எனப்படுகிறார். 

கும்பகோணம் அருகிலுள்ள தேவராயன்பேட்டை என்ற ஸ்தலம்  முன்னாளில் சேலூர் (சேல் – மீன்) என்று அழைக்கப்பட்டது. 

அங்குள்ள சிவபெருமானையும் மீன் வடிவ திருமால் வணங்கியதால், இறைவன் மச்சேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு

ஒரு நிறுவனத்தின் தலைவர் தன் மனதில் உள்ள கலக்கம் தீர பாதிரியார் ஒருவரை பார்க்க சென்றார்.  பணியாளர்கள் சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்  இதற்கு தீர்வு சொல்லுங்கள் என்றார் தலைவர்.  உங்களுக்குள் ஒருவராக ஆண்டவர் மறுபிறவி எடுத்திருக்கிறார்  அவரை கண்டுகொள்ளாததுதான் பிரச்னைக்கு காரணம் என்றார் பாதிரியார்.

அவர் யார் எனக் கூறுங்கள் என்றார்.   நீங்கள் அனைவரும் அவரைத் தேடினால் காணலாம் என்றார் பாதிரியார்.  இந்த செய்தி புயலாக பரவியது.  ஒவ்வொருவரும் யார் ஆண்டவர் என்று தேடத் தொடங்கினர்.  ஒவ்வொருவரும் பிறரிடம் உள்ள நல்ல குணங்களை பார்த்தனர்.  யார் மீதும் பழி போடுவதை நிறுத்தியதால் நிறுவனத்தில் அமைதி தோன்றியது  ஆனால் அவரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.

அவரை கண்டுபிடிக்க முடியாததால் நிறுவனத்தின் தலைவர் மீண்டும் பாதிரியாரிடம் சென்றார்.  அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என புலம்பினார்.  அலுவலத்தில் தேடியதற்கு பதிலாக உங்களின் மனதில் தேடியிருந்தால் கிடைத்திருக்குமே என சிரித்தபடி சொன்னார் பாதிரியார்  தலைவருக்கோ ஒன்ரும் புரியவில்லை.  நல்ல செயல்கள் யார் செய்தாலும் அவரின் அவதாரம் தானே என சொன்னார் பாதிரியார்  அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடுத்தால் பிரச்னையின்றி வாழலாம்.

அரண்டவன் கண்ணுக்கு

சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான் ராவணன்.   அடுத்தவன் மனைவியை அடைய நினைப்பது கூடாது என புத்தி சொன்னான் தம்பி விபீஷணன்.    ஆனால் தம்பியின் பேச்சை ராவணன் பொருட்படுத்தவைல்லை.   அண்ணா என் பேச்சை ஏற்க மறுத்தால் உன்னைவிட்டு பிரிவேன் என்று சொல்லிய விபீஷணன் கதாயுதம் தாங்கியபடி ராமனைச் சந்திக்கப் புறப்பட்டான்.   அவனுக்கு ஆதரவாக நான்கு ராட்சஷர்கள் கூட வந்தனர்.  தூரத்தில் இவர்கள் வருவதைக் கவனித்த வானர அரசன் சுக்ரீவனுக்கு பயம் உண்டானது.

பார்த்தாயா ராமா.  நம்மைக் கொல்லும் நோக்கத்துடன் ராவணன் தன் தம்பி விபீஷணை  ஏவி விட்டிருக்கிறான். நான்கு ராட்சதர்களையும் சேர்த்துக்கொண்டு பல ஆயுதங்களைத் தாங்கியபடி வருகிறார் பார் என்ரான்.  ஒரே ஒரு கதாயுதத்துடன் தானே வருகிரார்ன்.  ஏன் அவனைத் தவறாக நினைக்கிறாய் எனக் கேட்டார் ராமர்.

உண்மையில் நடந்தது என்ன தெரியுமா  ஒரு கதாயுதம் கூட சுக்ரீவன் கண்களுக்கு பல ஆயுதங்களாகத் தெரிந்தது.  பரம்பொருளான ராமர் அருஇல் இருந்தும் கூட அவன் மனம் பலமடையவில்லை.  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே………..அது இதுதான் போலிருக்கிறது.

நக்னஜித்

ஏழு கிருஷ்ணரும் ஏழு காளையைப் பிடித்துக் கயிறு பூட்டி, அதை ஒரு விளையாட்டுப் பொருளாக அடக்கினார்கோசல நாட்டு மன்னன் நக்னஜித் கிருஷ்ணரிடம் உரையாடுகிறார்,

“நீர் பகவான் கிருஷ்ணர், வீராதி வீரர், நீர் எவ்வித சிரமமுமின்றி இந்த ஏழு காளைகளையும் அடக்கக் கூடியவர் என்பதை நான் அறிவேன்.எந்த அரசகுமாரனாலும் இதுவரை இவற்றை அடக்க முடியவில்லை. இவற்றைப் பணியச் செய்ய முயன்றவர்களெல்லாம் அங்கங்கள் முறியப் பெற்றுத் தோற்றுப் போனார்கள்.நீர் தயவுசெய்து இந்த ஏழு காளைகளுக்கும் கயிறு பூட்டி அடக்க வேண்டும். அப்போது நீர் என் அன்பு மகள்  சத்யாவின் கணவராக அறிவிக்கப்படுவீர்.”

இதைக் கேட்ட கிருஷ்ணர், மன்னர் தன் பிரகடனத்தை மாற்ற விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொண்டார். எனவே, மன்னரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக அவர் காளைகளுடன் சண்டையிடுவதற்கு ஆயத்தமானார்.உடனடியாக, அவர் தம்மை ஏழு கிருஷ்ணர்களாக வியாபித்துக் கொண்டார், ஏழு கிருஷ்ணரும் ஏழு காளையைப் பிடித்துக் கயிறு பூட்டி, அதை ஒரு விளையாட்டுப் பொருளாக அடக்கினார்.கிருஷ்ணர் தம்மை ஏழாகப் பிரித்தது குறிப்பிடத்தக்கது.  அவள் கிருஷ்ணரிடம் பிரியம் கொண்டிருந்தாள். அவளின் விருப்பத்தைப் பூர்த்திசெய்வதற்காக அவர் ஏழு வடிவங்களில் தம்மை வியாபித்துக் கொண்டார்.

கிருஷ்ணர் ஒருவரேயானாலும் அவர் எண்ணற்ற உருவங்களில் வியாபிக்க வல்லவர் என்பது கருத்து. ஏழு காளைகளையும் கிருஷ்ணர் கயிறிட்டு அடக்கியபோது அவற்றின் பலமும் பெருமையும் நொறுங்கிப் போயின. அவற்றிற்கு ஏற்பட்டிருந்த பெயரும் புகழும் உடனடியாக மறைந்தன.

கிருஷ்ணர் அவற்றிற்குக் கயிறிட்டு, ஒரு குழந்தை மரத்தாலாகிய பொம்மை காளையைக் கட்டி இழுப்பது போல பலமாக இழுத்தார். கிருஷ்ணரின் மேன்மையைக் கண்ட நக்னஜித் ஆச்சரியமடைந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் மகளான சத்யாவை வரவழைத்து கிருஷ்ணரிடம் ஒப்படைத்தார். கிருஷ்ணரும் அவளை ஏற்றுக் கொண்டார். 

ஷட்திலா ஏகாதசி

அன்ன தானத்தின் பெருமையை விளக்கும் ஷட்திலா ஏகாதசி.

எள் சேர்த்து அன்னதானம் செய்தால் அனைத்து வளங்களும் பெருகும்.

பெண் ஒருத்தி மோட்ச லோகம் செல்லும் வரம் பெற்றாள். அதுவும் அவளின் உடலோடு. ஐம்பூதங்களாலான இந்த மனித உடலோடு மோட்ச லோகத்துக்குச் செல்ல எவ்வளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும். 

அங்கு அத்தனை வசதிகளும் இருந்தன. தங்குவதற்குப் பெரிய அரண்மனை, பணி செய்ய சேவகர்கள். தங்கமும் வைரமும் அங்கே கொட்டிக் கிடந்தன. ஆனாலும் அவளுக்கு ஒரு பெரும் குறை, அவள் பசி யார உணவு ஏதும் அங்கில்லை. பசியால் வாட ஆரம்பித்தாள். 

பூலோகத்தில் வாழ்ந்தபோது, தான் செய்த அத்தனை தான தருமங்களை நினைத்துப் பார்த்தாள். மேற்கொண்ட விரதங்களை நினைத்துக்கொண்டாள். அத்தனை நியம ங்களைக் கடைப்பிடித்தும்தான் இன்று இப்படி சொர்க்கத்தில் அல்லல்படுவது ஏன் என்று திகைத்தாள். அப்போது ஶ்ரீமன் நாராயணன் ஒரு துறவியின் வேடம் கொண்டு அங்கே வந்தார். 

உடனே அந்தப் பெண் அந்தத் துறவியின் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அவரும் அவளுக்கு ஆசீர்வாதம் செய்தார். துறவியிடம் தனது துயரத்தைத் தெரிவித்தாள்.

“ஐயா, மண்ணுலகில் நான் வாழ்ந்த நாள் களில் அனைத்து விரதத்தையும் கடைப்பி டித்தேன். பொன்னையும் மணியையும் தானமென எல்லோருக்கும் வழங்கினேன். அந்தப் புண்ணிய பலனாலேயே இந்தச் சொர்க்க வாழ்வில் புகுந்தேன் என்று இறு மாந்திருந்தேன். ஆனால் இது பெருமை அல்ல… சாபம் என்று அறியாமல் இருந்து விட்டேன். இங்கு எனக்கு எல்லா வசதிகளு ம் இருந்தும் உண்ண உணவென்பது இல் லை. நான் இந்த உடலோடு இங்கு வரப் பெற்றிருக்கும் வாழ்வென்பது சாபம் தானா… எனக்கு ஏன் இந்தக் கீழ்நிலை..? தாங்கள் தான் எனக்கு வழிகாட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்”

மாய வேடதாரியான நாராயணனோ புன்னகையோடு அவளைப் பார்த்தார்.

“பெண்ணே, உன் தர்மத்தின் பலனாகவும் விரத மகிமையினாலுமே மனித வாழ்வில் பெறற்கரிய பெரும்பேறு பெற்றாய். என வே, இதைச் சாபம் எனக் கொள்ளலாகாது. ஆனால், நீ செய்ய மறந்த ஒரு தானமே உன்னை இந்நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது…”

“மண்ணுலகில் மிகப் பெரிய பிணி, பசிப் பிணி. பிறந்த கணத்திலிருந்து இறக்கும் கணம் வரைக்கும் பசிப்பிணி பீடித்தேயி ருக்கும். எந்த வசதியும் ஆடம்பரமும் இல் லாமல்கூட வாழ்ந்துவிடலாம். ஆனால், பசிக்கு உணவில்லாமல் வாழ இயலாது. எனவேதான் பிறவிகளில் உயர் பிறப்பான மானுடப் பிறப்பில் பசிப்பிணி நீக்குதலை யே தலையாய தர்மமாக வேதங்கள் வகுத்துள்ளன…”

“அன்னதாதா சுகிபவா’ என்னும் பெரும் பொருளை நீ அறியவில்லை. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே… நீ எத்தனை தானம் செய்த போதும், `போதும்’ என்று சொல்லாது மனித மனம். அதுவே, அன்னதானம் என்றால் ஓர் அளவுக்கு மேல் கொள்ளவும் முடியாது. எனவே எல்லோராலும் எல்லோருக்கும் நிறைவாக தானம் செய்யமுடியும் என்றால் அது அன்னதானமே. நீ அத்தகைய அன்னதான த்தைச் செய்யாது விட்டாய். இத்தனைக்கு ம் உனக்கு அதன் மகிமையை உணர்த்த ஒரு துறவி உன் இல்லம் தேடிவந்தார். நினைவிருக்கிறதா?” என்று கேட்டார்.

துறவியின் பேச்சைக் கேட்டு வருத்தமுற்ற வளாகிய அந்தப் பெண்

“ஆம். அன்றைய நாளில் என் இல்லம் தேடி அந்தத் துறவி வந்தார். தானம் கேட்டு வந்தவருக்கு நான் பிறபொருள்களை தானம் தர முன்வந்தும் வேண்டாம் என்று சொல்லி அன்னம் வேண்டி நின்றார். அன் று அதுவரை நான் சமையல் ஏதும் செய்தி ருக்கவில்லை. அதனால் உண்டான ஆத்தி ரத்தில் மண்ணைத் திரட்டி அவரின் பிச்சைப் பாத்திரத்தில் இட்டேன்” என்றாள்.

துறவியோ, “சரியாக சொன்னாய். நீ இட்ட மண்தான் இந்த மாளிகையாக மாறியிருக் கிறது. ஆனால், அவர் கேட்ட பசி தீர்க்கும் உணவு இங்கு இல்லை.”

அந்தப் பெண் தன் தவற்றை உணர்ந்து வருந்தினாள். இந்தப் பாவத்திலிருந்து தப்பிக்க வழி உண்டா என்று கேட்டாள்.

நல்லவளும் உத்தமியுமான அந்தப் பெண் ணின் பாவத்தைப் பொறுத்தருளிய பெரு மாள், அவளுக்கு அருள தீர்மானித்தார்.

“பெண்ணே, மண்ணுலகில் பாவம் தீர்க்கும் விரதம், ஏகாதசி விரதம். அதில் ஒவ்வொரு விரதமும் ஒவ்வொரு பலன் தரும். குறிப்பாக தைமாதம் தேய்பிறையி ல் வரும் ஷட்திலா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்க சகல பாவங்களும் நீங்கும். அன்றைய திதியில் விரதமிருந்து அன்ன தானம் செய்ய அன்னத்துக்குக் குறைவே வராது. பசிப்பிணி போக்கும் அருமருந்து ஷட்திலா ஏகாதசி…”

“உன்னைப் பற்றித் தகவல்கள் கேட்டு உன்னை தரிசிக்க தேவலோகத்திலிருந்து பெண்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். நீ அவர்களிடம் எப்படியாவது அவர்கள் மேற்கொண்ட ஷட்திலா ஏகாதசி விரத பலன்களைக் கேட்டுப் பெற்றால் இந்தப் பிணி நீங்கப் பெறுவாய்” என்று சொல்லி மறைந்தார். 

வந்து வழிகாட்டியவர் அந்த நாரயணனே என்பதை அறிந்த அந்த பெண், தேவலோ கப் பெண்கள் வருமுன் சென்று அறைக் குள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள். அவர் கள் வந்து இவள் தரிசனம் வேண்டினர். “தனக்கு ஒருநாள் ஷட்திலா ஏகாதசி விரதபலனைத் தந்தால் நான் தரிசனம் தருகிறேன்” என்று சொன்னாள். வேறு வழியின்றி அவர்களும் ஒத்துக்கொள்ள அவள் அந்தப் புண்ணிய பலனை பெற்று த் தன் பசிப்பிணி போக்கிக்கொண்டாள்.

ஷட் என்றால் ஆறு, திலா என்றால் எள். ஆறுவகையான எள் தானத்தை முன்னி லைப் படுத்துவது ஷட்திலா ஏகாதசி. அதி ல் முக்கியமானது எள் சேர்த்து செய்யப் பட்ட அன்னத்தை தானம் செய்வது. வறிய வர்களுக்கு எள்சாதம் தானம் செய்வதன் மூலம் பெரும்பலனை அடையமுடியும்.

 ஷட்திலா ஏகாதசி திதி. அன்று விரதமிருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவ து, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது ஆகிய நற்காரியங்களில் ஈடுபட வேண்டும். மேலும் இந்த நாளில் எளியவர்களுக்கு அன்னதானம் செய்தால், முன் செய்த பாவங்கள் நீங்கி காலமெல்லாம் பசிப்பிணி இல்லாத வாழ்வைப் பெறலாம் என்கின்றன சாஸ்திரங்கள்.