வானில் பறந்தபடி ஏதேனும் இரை கிடக்கிறதா என குடியிருப்புக்களைப் பார்த்தது காகம். அதே சமயம் பலத்த இடை முழங்கியது. அதிர்ச்சியில் வெள்ளிய்யடிக்க கலக்கி வைக்கப்பட்டிருந்த சுண்ணாம்பு கரைசலில் விழுந்தது காகம். தட்டு தடுமாறி வெளியேறி குட்டை நீரில் உருவத்தைப் பார்த்தது. வெள்ளை நிறமாக மாறி இருப்பதைக் கண்டு அதிசயித்தது. வண்ண மாற்றம் கர்வத்தை ஏற்படுத்தியது.
வானில் பறந்தபடி தேவலோகத்தில் பிறந்த என்னை பூவுலகில் அரசாளவே அனுப்பியுள்ளார் கடவுள்…………..என்று கூறியது. அதை உண்மை என நம்பின பறவைகள். அன்ரு முதல் கட்டளைகள் பிறப்பித்து வாழத் துவங்கியது வெள்ளை காகம். அதன் பேச்சை மீற முடியாமல் பணிவிடைகளை செய்து வந்தன காட்டில் வசித்த மற்ற காகங்கள்.
ஒரு நாள் திடீரென கார்மேகங்கல் சூழ்ந்து மின்னல் வெட்டி மழை பொழிய துவங்கியது. அதில் ஆனந்த குளியல் போட்டது வெள்ளை காகம். படித்திருந்த சுண்ணாம்பு கரைந்து பழைய உருவை அடைந்தது. அட………………….. நம்மைப் போல சாதாரண காக்கை தான் இது. தேவலோக பறவை என பொய் சொல்லி முட்டாளாக்கிவிட்டதே ………..அடிமையாக நடத்திய இதை சும்மாவிட கூடாது…………என கூறியது முதிய காகம்.
உடனே திரண்டு திட்டமிட்டன காகங்கள். ஏமாற்றிய காகத்தை கொத்தி விரட்டின. தப்பித்தால் போதும் என பறந்தோடியது ஏமாற்று காகம்.
நல்லான்பெற்றான் கிராமத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார் சிவலிங்கம். அவரிடம் வேலை செய்தான் நாகமுத்து. சிடுமூஞ்சிக்காரன் யாருடனும் அன்பாக பழகமாட்டான். அவனிடம் வியாபாரத்தை கவனிக்க சொல்லி விவசாய பணிக்கு சென்று விடுவார் சிவலிங்கம்.
வாடிக்கையாளர் பேரம் பேசினால் முகத்தில் அடிப்பது போல மறுத்துப் பேசுவான் நாகமுத்து. இதனால் வாடிக்கையாளர் கூட்டம் குறைந்தது. கொள்முதல் செய்த காய்கறிகள் விற்பனையாகாமல் அழுக துவங்கின. கடையில் வருமானமில்லாமல் முதலீடு நஷ்டமானது. விசாரித்த சிவலிங்கம் காரணம் பிரிந்து நாகமுத்துவை அழைத்தார். வேலைக்கு வர வேண்டாம் சம்பள பாக்கியை வாங்கிச்செல்…………..இதைக் கேட்டு இடி தாக்கியது போல் உணர்ந்தான் நாகமுத்து.
ஐயா…….எந்த தவறும் செய்யாத என்னை திடீரென வேலையை விட்டு நிறுத்தினால் எங்கே போவேன் என் உழைப்பை நம்பித்தான் குடும்பம் உள்ளது. கருணை காட்டுங்கள்….என்றான். வேலையை விட்டு நிறுத்துவதாக கூறியதும் எப்படி வருந்துகிறாய் என் பேச்சு வேதனையை உண்டாக்கி விட்டதல்லவா……………கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் எவ்வளவு கடுமையாக பேசியிருப்பாய் சுடு பேச்சால் கடைப்பக்கமே வரவே பயப்படுகின்ற்னர் இனிமையற்ற பேச்சு தவறல்லவா…………… புரிகிறது ஐயா………இனிமேல் இனிமையாக பேசி வியாபாரத்தை பழைய நிலைக்கு எடுத்து வருகிறேன் என்னை நம்புங்கள்………கெஞ்சாத குறையாக கேட்டான். அவனை மன்னித்தார் கனிவாக பேசி வியாபாரத்தை பெருக்கினான் நாகமுத்து.
குன்றுகள் நிறைந்த அடர்ந்த காட்டில் வாழ்ந்து வந்தது ஓநாய். காட்டில் ராஜா என எதுவும் இல்லை. எனவே ஓநாயை கண்டால் எல்லா மிருகங்களௌம் அஞ்சி நடுங்கின. பல விலங்குகள் அதற்கு இரையாகின. அந்த காட்டுக்கு புதிதாக ஒரு மான் வந்தது. அதன் கொம்புகளும் உருவமும் அச்சத்தை ஏற்படுத்தியது. புல் மேயும் மிருகம் என்பதால் மானின் கம்பீரத்தை கண்டு மகிழ்ந்தன விலங்குகள். அதை துணையாக்க் கொண்டு ஓநாயை விரட்ட முடிவு செய்தன.
ஓநாய் செய்யும் அட்டகாசத்தையும் அதை வெற்றி கொள்வதில் உள்ள சிரமத்தையும் மானிடம் விளக்கின. உரிய நடவடிக்கை எடுக்க கோரின. ஓநாயை அடிமையாக்கி பயமின்றி வாழ வழி செய்வதாக உறுதியளித்தது மான். பின் ஓநாய் இருக்கும் இடம் தேடிச் சென்றது. தூரத்தில் படந்த கொம்புள்ள விலங்கு வருவதைப் பார்த்ததும் சற்று நடுங்கியது ஓநாய். அதற்கு அச்சம் ஏற்பட்டது. அருகில் வந்ததும் மான் என்பதை அறிந்து பயம் தெளிந்தது. நல்ல வேட்டை கிடைத்ததாக எண்னி மகிழ்ந்தது.
ஓநாயை நெருங்கியதும் நடுங்கத் துவங்கியது மான். அதை வெளியே காட்டாமல் காட்டில் விலங்குகளை எல்லாம் பயமுறுத்துவது நீதானா…………….. என அலட்சிய குரலில் கேட்டது. கோபமுடன் என்னிடம் கேள்வி கேட்கும் துணிச்சல் எப்படி வந்தது. அலட்சியமாக வேறு பேசுகிறாய்?……….. கேவலம் நீ ஒரு மான் ………என்னுடன் சண்டையிட்டு உயிரை விடாதே………….. ஓடி பிழைத்து போ……………… பலசாலிகளோடு போட்டி……………. போட்டு நான் எனக்கு பழக்கம் நீயெல்லாம் தூசு…………………… என்றது ஓநாய்.
அலட்சிய வார்த்தை கேட்டு மோதலுக்கு தயாரானது மான். பயங்கர மோதல் துவங்கியது. சற்று நேரத்தில் இரண்டும் களைப்பு அடைந்தன. வெற்றி தோல்வி இன்றி முடிந்தது முதல் மோதல்.
ஓநாயை வெற்றி கொள்வது கடினம் என உணர்ந்தது மான். எனவே தந்திரத்தால் விழ்த்த முடிவு செய்து உண்மையிலே நீ பலசாலிதான். உன்னுடன் மோத எண்ணியது தப்புதான் என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்………………….என்றது. ஓநாய்க்கு பெருமை தாங்கவில்லை. சண்டையை வேடிக்கை பார்த்த விலங்குகளுக்கு பெரும் ஏமாற்றம். திடீர் என தோற்றத்தால் உங்களுக்கு இரையாக போகிறேன் என் கடைசி ஆசை ஒன்று உள்ளது. அதை நிறைவேற்றுவீரா தலைவரே…………..என்றது மான்,
ஆணவத்தின் உச்சியில் நின்ற ஓநாய் நிறைவேற்றுகிறேன்……………உன் ஆசையை கூறு…………..என்றது. குட்டியாக இருந்த போது தாய் தந்தையுடன் இந்த காட்டிற்கு வந்தேன். அப்போது ……………அதோ……………… தெரிகிறதே அந்த மலை உச்சியில் புல் மேய்ந்தோம் திடீரென்று தாய் கால் வழுக்கி விழுந்து விட காப்பாற்ற சென்ற தந்தையும் இறந்துவிட்டார். அவர்கள் உயிர் பிரிந்த இடத்திற்கு என்னை கூட்டி செல்……………. அங்கு தான் உயிர் விட விரும்புகிரேன். ……..என்றது.
ப்பூ……………இவ்வளவுதானே…………வா…………. என மலை உச்சிக்கு அழைத்து சென்றது ஓநாய். உச்சியிலிருந்து ஆஹா அதோ என் தாய் தந்தை ஆவிகள் ……….என்னை வரவேற்க காத்திருக்கின்றன….. என கதை விட்டது மான்.
எங்கே………………. பார்க்கலாமா……………. என கேட்டபடி மலைமுகட்டின் விளிம்புக்கு வந்து பள்ளத்தை எட்டி பார்த்தது ஓநாய் இது தான் சரியான நேரம் என பலத்தை திரட்டியது மான். கொம்புகளால் வேகமாக முட்டி மோதியது. நிலை தடுமாறி பாதாளத்தில் சாய்ந்தது ஓநாய். விலங்குகள் எல்லாம் மகிழ்ச்சியில் குதித்தன. அப்புறம் என்ன………….சந்தோஷத்தில் ஆட்டமும் பாட்டும் களைகட்டியது.
துவாரகை மன்னரான கண்ணனின் விருப்பத்தை நிறைவேற்ற தன்னால் மட்டுமே முடியும் என்ற எண்ணம் கருடனுக்கு இருந்தது. கண்ணனின் கையிலுள்ள சக்ரமோ தன்னை கொண்டே அசுரர்களை வதம் செய்கிறார் என்ற எண்ணம் எழுந்தது. கண்ணனின் மனைவியரான பாமா ருக்மணிக்கோ தாங்களே உலகில் உயர்ந்தவர்கள் என செருக்கு கொண்டனர். இவற்றை எல்லாம் அறிந்த கண்ணன் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்தனர்.
கருடா உடனே கந்தமாதன பர்வதத்திற்கு புறப்படு. அங்குள்ள குளத்தில் சவுந்திக கமலம் என்னும் மணம் மிக்க மலர் பூத்திருக்கிறது. அதைப் பறித்து வா என கட்டளையிட்டார். எல்லா செயல்களையும் என்னால் தான் கண்ணன் சாதிக்கிறார் என்ற பெருமிதத்துடன் அவனும் வானில் பறந்தான். அங்கு மலரை பறிக்க முயன்றபோது எழுந்த சப்தத்தால் குளக்கரையில் தியானம் புரிந்த அனுமன் விழித்துக்கொண்டார். ஏ கருடனே இந்த பர்வதம் குபேரனுக்கு சொந்தமானது. அவரின் அனுமதி பெறாமல் மலர் பறிக்க முடியாது எனத் தடுத்தார்.
கண்ணனுக்காக மலர் பறிக்க வந்துள்ள எனக்கு யாரும் அனுமதியளிக்கத் தேவையில்லை என எதிர்ப்பு தெரிவித்தார். கோபத்தால் முகம் சிவந்த அனுமன் தன் தோளில் கருடனை கட்டி இழுத்தபடி துவாரகை வந்தார். கருடனின் நிலை கண்டு பரிதாப்ப்பட்ட சக்கராயுதம் சீறிக்கொண்டு அனுமனைத் தாக்க வந்தது. ஆனால் அதை சுழல விடாமல் தடுத்தார் அனுமன். கருடனும் சக்கரமும் செய்வதறியாமல் திகைத்தனர். அனுமன் வந்திருக்கும் விஷயம் அறிந்த கண்ணன் தன் தேவியரை அழைத்தார். இதோ பாருங்கள் அனுமனின் தியானம் கலைந்ததால் கோபத்துடன் துவாரகை வந்திருக்கிறான் அவனை சாந்தப்படுத்த சீதாராமர் இங்கு வந்தாக வேண்டும். இல்லாவிட்டால் துவாரகையே ஒரு நொடியில் காணாமல் போகும். நீங்கள் யாராவது ஒருவர் சீதை போல வேடமணிந்து வாருங்கல். அதற்குள் நானும் ராமனாக வேடமணிந்து வருகிறேன். இருவருமாக அனுமனை சமாதானம் செய்யலாம் என்றார்.
சிறிது நேரத்தில் ராமன் போல் வேஷம் தரித்தார் கண்ணன். தேவியருக்கோ சீதையைப் போல் மாறவோ முடியவில்லை காரணம் தங்களின் அலங்காரத்தில் ஏதோ குறையிருப்பதாக உணர்ந்தனர். முடிவில் கண்ணனின் காதலியான ராதாவுக்கு வேடம் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்தனர். சம்மதித்த ராதையும் உடனடியாக சீதையாக வேடமிட்டு கண்ணனுடன் புறப்பட்டாள். ராமர் சீதையை பார்த்த அனுமனுக்கும் கோபம் மறைந்தது.
அனுமனே உன் தோளில் என்ன கட்டியிருக்கிறாய் எனக் கேட்டார் ராமர். சுவாமி ஒன்றுமில்லை என் தியானத்தை களைத்த இந்த பறவையையும் வழி மறித்த சக்கரத்தையும் தோளில் கட்டி வைத்துள்ளேன். தங்களுக்கு சேவை செய்ய அடியேன் காத்திருக்கிறேன் என்றார். பாவம் சிறுபிள்ளைத்தனமாக நடந்த இவர்களை தண்டிக்காதே கடமையாற்ற வழிவிடு என்றார் கண்ணன். ஆணவத்தில் சிக்கிக் கிடந்த கருடனையும் சக்கராயுதத்தையும் விடுவித்தார் அனுமன். இதைக் கண்ட தேவியரும் மனம் திருந்தினர். ஜெய் ஸ்ரீராம் என ஜபித்தபடியே கந்தாமாதன் பர்வதம் புறப்பட்டார் அனுமன்.
ஒரு கைங்கர்யம் கூட விடாமல் ராமனின் இளவல்களும், சீதையும் சேர்ந்து தயாரித்த பட்டியலைப் பார்த்தார் ராமன் விடுபட்ட கைங்கர்யத்தைத் தான் செய்வதற்கு அனுமதி கேட்டார் ஹனுமான். எதையும் விட்டுவிடவில்லை என்ற தைரியத்தில் அவர்கள் ஒப்புக்கொள்ள, ஹனுமானின் உற்சாகம் அவர்களுக்கு சந்தேகத்தைக் கிளப்பியது. மீண்டும் பட்டியலை வாங்கிச் சரிபார்த்துவிட்டுக் கேட்டான் இலக்குவன்.இவற்றில் எந்த சேவை விடுபட்டு விட்டது என்று நினைக்கிறாய் ஹனுமான்? ப்ரபு கொட்டாவி விடும்போது அவர் வாய்க்கு நேராக சொடக்கு போடுவதுதான். அது ஒரு வேலையா?ஆமாம். இல்லையென்றால் ப்ரபுவுக்கு வாய் வலிக்காதா? ஏற்கனவே ஒப்புக்கொண்டுவிட்டதால், அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. முதலிலாவாது பரவாயில்லை. எல்லா சேவைகளையும் செய்தபோதும், வேலை முடிந்தால், ஹனுமான் ஒரு இரண்டடிகளாவது ராமனை விட்டுத் தள்ளி நிற்பார். இப்போது என்னடாவென்றால், எப்போது பார்த்தாலும் ராமனின் வெகு அருகில் அல்லது காலடியிலேயே இருக்க ஆரம்பித்தார். கேட்டால் ராமன் எப்போது கொட்டாவி விடுவாரென்று தெரியாது. அதனால் எப்போதும் தயாராக அருகிலேயே இருக்க வேண்டுமே என்பார்.கொட்டாவிக்கு சொடுக்கு போடுவதெல்லாம் ஒரு வேலையா என்று நினைத்தவர்கள் இப்போது அதுதான் பெரிய வேலையோ என்று நினைத்தார்கள். ஏனெனில் ஒரு கணம் கூட ராமனை விட்டு கண்ணை எடுக்காமல் அவரது திருமுக மண்டலத்தையே பார்த்துக்கொண்டிருக்கும் பாக்யம் கிடைக்கிறதே. இரவிலும், ராமன் உறங்கும் வரை கொட்டாவிக்கு சொடுக்கு போடுகிறேன் என்று அருகிலேயே ஹனுமான் நிற்பார். ராமன் உறங்கிய பின் அறை வாசலில் நிற்பார். முன்பாவது சீதை பள்ளியறைக்குள் வந்ததும் வெளியே செல்வார். இப்போது சீதையாலும்கூட ராமனிடம் தனிமையில் பேச இயலவில்லை. மிகவும் பொறுத்துப் பார்த்த அவர்கள் ஒரு கட்டத்தில், ஹனுமானுக்கு ஏதாவது வேலை கொடுத்து அனுப்பிவிட்டு ஒரு நாளாவது ராமனோடு சற்று அளவளாவலாம் என்று நினைக்கும் அளவிற்குப் போய் விட்டனர்.அனைவரும் ஒன்றுகூடிப்பேசியபின், கௌசல்யையிடம் சொன்னார்கள். அம்மா, நாளை காலை ஹனுமானிடம் எதையாவது கொடுத்து உங்களிடம் கொடுத்துவிட்டு வரச் சொல்லி அனுப்புகிறோம். நீங்கள் அவரைப் பிடித்து மாற்றி மாற்றி உச்சி வேளை வரை ஏதாவது வேலை வாங்குங்கள். நாங்கள் சற்று நேரமாவது ராமன் அண்ணாவோடு பேசுகிறோம்.அவர்களைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாய் இருந்தது கௌசல்யைக்கு. சரியென்று ஒப்புக்கொண்டாள். சொன்னபடி ஏதோ ப்ரசாதங்களையெல்லாம் போட்டு ஒருமூட்டை கட்டி, இது ப்ரசாதமாதலால், பணியாளிடம் கொடுத்தனுப்ப வேண்டாமென்று பார்க்கிறேன். நீதான் என் கணவருக்கு மிகவும் பிரியமானவன். உன் மூலம் கொடுத்தனுப்பினால் மிகவும் மரியாதையாய் இருக்கும். ராஜமாதாவிடம் கொடுத்துவிட்டு வா என்று சொல்லி ஹனுமானை சீதை அனுப்பிவிட்டாள்.ராமன் எழுந்திருப்பதற்குள் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிடலாம் என்று சீதை போனாள்.நேரமாகிக்கொண்டே இருந்தது. வழக்கமாய் அதிகாலை எழும் பழக்கமுள்ள ராமன் இன்று படுக்கையை விட்டு எழவேயில்லை. சுப்ரபாதம் இசைப்பவர்கள் ஸ்ருதி சேர்க்கும்போதே எழுந்து பாட்டுக்கள் முழுவதையும் கேட்பார். காலை நேரத்து வீணையிசை ராமனுக்கு மிகவும் பிடிக்கும். பாடி முடித்ததும் அவர்களைப் பார்த்து ஒரு அழகான முன்முறுவல் செய்வார். அதையே அவர்கள் மிகப்பெரிய வரப்ராசாதமாய் எண்ணி மகிழ்ந்து போவார்கள்.இன்று அவர்கள் பாடி முடித்தாயிற்று. ஆதவனுக்கு முன்னால் எழும் ராம சூரியன் பள்ளியறை விட்டு வரவில்லை. ஸ்நானம் செய்துவிட்டு வந்து பார்த்த ஸீதைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.என்னாயிற்று? உடம்பு சரியில்லையா? அருகில் சென்று பார்த்தாள். ஒன்றும் புரியவில்லை அவளுக்கு. ராமன் வாயைத் திறந்துகொண்டு, ஆனால் விழித்துக்கொண்டு தான் படுத்திருந்தார். என்னவாயிற்று ஸ்வாமி? ஆதவன் வந்துவிட்டான். எழ மனமில்லையா?பதிலில்லை.பதில் சொல்லாமல் ராமன் திருதிருவென்று விழிப்பதைப் பார்த்தால் சீதைக்கு பயமாய் இருந்தது. எழுந்திருங்கள் ஸ்வாமிதோளைப் பிடித்து உலுக்கினாள். ம்ஹூம் வாய் திறந்தே இருந்தது. அவளையே ராமன் விழித்துப் பார்க்க மிகவும் பயந்து போன சீதை இளவல்களுக்கு அவசரச் செய்தி அனுப்பினாள்.மூன்று தம்பிகளும் ஓடிவந்து முடிந்தவரை முயற்சி செய்தனர்.ராமன் எழவும் இல்லை. வாயை மூடவும் இல்லை. பற்றாக்குறைக்கு காது வரை நீண்ட அவரது தாமரைக் கண்களை வைத்துக்கொண்டு பரிதாபமாக கண்களை உருட்டி உருட்டி விழித்துப் பார்த்தார். என்னவோ உடம்புதான் சரியில்லை போலும் என்று நினைத்து ராஜ வைத்தியருக்குச் சொல்லியனுப்பினார்கள். அவர் வந்து தலையைப் பிய்த்துக் கொண்டார்.நாடி நன்றாய்ப் பேசுகிறது. கழுத்தை ஆராய்ந்து பார்த்தார். தாடையிலும், கழுத்திலும் ஒரு ப்ரச்சினையும் இல்லை. பின் ஏன் வாய் மூடவில்லை? ஏதாவது மந்திர தந்திரமாய் இருக்குமோ?எனக்குத் தெரியவில்லை. குலகுருவைக் கூப்பிடுங்கள்.வசிஷ்டர் வந்தார். குருவுக்குத் தெரியாதா சீடனின் நிலைமை? கண்டதும் சிரித்தார்.ராமா இதுவும் ஒரு விளையாட்டா? மனதிற்குள் நினைத்தவர், கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டு ஹனுமான் எங்கே? என்றார்.சேதி வந்ததும் பறந்து வந்தார் ஹனுமான். மன்னித்துவிடுங்கள் ப்ரபோ என்று சொல்லிக்கொண்டே திறந்திருந்த ராமனின் வாய்க்கு நேராக இரண்டு சொடக்குகள் போட, ராமன் வாயை மூடிக்கொண்டார். இதற்குள் மாலையாகிவிட்டது. கிட்டத்தட்ட ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. கொட்டாவிக்கு சொடக்கு போடுவதெல்லாம் ஒரு வேலையா என்று நினைத்தவர்களுக்கு அதை ஒரு கைங்கர்யமாகச் செய்வேன் என்று சொன்ன ஹனுமான் மீது சற்றே இளக்காரம் வந்துவிட்டது போலும். ஆனால், அதையும் ஒரு கைங்கர்யமாக மதித்து ஏற்றுக்கொண்ட ராமன் அதற்காக ஒரு நாளெல்லாம் வாயைத் திறந்துகொண்டே இருப்பார் என்றால், கைங்கர்யத்தில் உயர்வு தாழ்வேது? சிறிய வேலையாக இருந்தாலும் அதை இறைவன் உவந்து ஏற்றுக்கொண்டால் அதுதான் பெரிய கைங்கர்யம். மலை போன்ற போன்ற செயலானாலும் இறைவனுக்கு உகப்பில்லையெனில் அதன் பயன் உடலுக்கு ஏற்பட்ட சிரமம் மட்டுமே.ஹனுமானைப் போல் நுழைந்து நுழைந்து கைங்கர்யங்களைக் கண்டுபிடித்து அதை இறைவன் உகக்கும்படி விநயமாகச் செய்ய வேண்டும். கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதும், புனருத்தாரணம் செய்வதும் பெரிய கைங்கர்யம். ஆனால், அதே சமயத்தில், கோவில் பிரகாரத்தைக் கடக்கும்போது கண்களில் படும் ஒற்றடைகளைக் களைவதும், ஆங்காங்கே கோபுரத்திலும், மண்டப இடுக்குகளிலும் முளைக்கும் செடிகளைக் களைவதும், கோவில் வளாகத்தினுள் குப்பை போடாமல் இருப்பதோடு, கண்ணில் படும் குப்பைகளை அகற்றுவதும் கும்பாபிஷேகத்திற்கு ஒப்பான கைங்கர்யங்களே.. ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஒரு நாள் ரட்சவிருதன் என்ற வானரவீரன் இமயமலைச் சாரலில் உள்ள குளத்தில் நீந்தி மகிழ்ந்தான். கரையேறியதும் அதிர்ச்சிக்கு ஆளானான். ஏனெனில் அந்தக் குளத்தில் நீராடும் ஆண்கள் பெண்ணாக மாறும் சாபத்திற்கு ஆளாவர். அப்போது அந்த வழியாக வந்த இந்திரன் தனிமையிலிருந்த பெண் வடிவ ரட்சவிருதனைக் கண்டு ஆசைப்பட்டான். அவர்களது சேர்க்கையால் வானர வீரனான வாலி பிறந்தான். இந்திரன் புறப்பட்ட சிறிது நேரத்தில் சூரியதேவன் குளக்கரைக்கு வந்தார். பெண்ணாக இருந்த ரட்சவிருத்னைக் கண்டதும் அவரது ஞான திருஷ்டியில் எதிர்காலத்தில் ராம ராவண யுத்தம் நடக்கப்போவது தெரிந்தது.
ராமருக்கு பலமாக தானும் ஒரு வானர வீரனை தோற்றுவிக்க சூரியன் விரும்பினான். இதனால் சூரியனின் அம்சமாக ரட்சவிரதனுக்கு மற்றொரு குழந்தை உண்டானது. அழகிய கழுத்தைக் கொண்ட அக்குழந்தைக்கு சுக்ரீவன் எனப் பெயரிடப்பட்டது. அதன்பின் பிரம்மாவை நோக்கித் தவமிருந்து ரட்சவிருதன் மீண்டும் ஆணாக மாறினான். ரட்சவிருதனுக்குப் பிறந்த வாலி சுக்ரீவன் ஆகியோர் சகோதர முறையில் வளர்ந்தனர். அவர்களே கிஷ்கிந்தை பகுதியில் ராம லட்சுமணரைச் சந்திக்க நேர்ந்தது. இவர்களில் சுக்ரீவனுக்கு ராம சேவையில் ஈடுபடும் பாக்கியம் கிடைத்தது.
கிளிமுகம் கொண்ட முனிவரான சுகபிரம்மர் பூவுலகில் இருந்து வானுலகம் புறப்பட்டார். வழியில் மேரு மலையை வலம் வந்து கொண்டிருந்த சூரியன் கண்டார். சுகபிரம்மரே பிரம்மச்சாரியான தங்களுக்கு இல்லற வாழ்வின் பெருமையோ பிள்ளைச் செல்வத்தின் மகத்துவமோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை அதனால் வானுலகம் செல்ல அனுமதிக்க மாட்டேன் எனத் தடுத்தார் சூரியன்.
அவரிடம் முனிவர் இல்லற வாழ்வில் ஈடுபட்டால் மனிதன் பக்குவ நிலை பெற முடியும் என்பது உண்மை. ஆனால் இல்லற வாழ்வில் எனக்கு விருப்பமில்லை. சாதாரண மானிடர்களுக்குரிய விதிகளை என்னுடன் ஒப்பிட தேவை இல்லை என்றார் சுகபிரம்மர்.
சுகபிரம்மரின் விளக்கம் கேட்டு சூரியன் சிரித்தார். வியாசரின் மகனான தாங்களே இப்படி சொல்வது முறையல்ல. முன்னோர் கடன் செய்ய பிள்ளைகள் இருப்பது அவசியம். சாஸ்திரத்தை மதிப்பது தங்களின் கடமை என்றார் சூரியன். இதைக்கேட்ட சுகபிரம்மரின் மனம் மாறியது. தவசக்தியால் புத்திரன் ஒருவனை உருவாக்கி சாயா சுகர் என பெயரிட்டார். அவனிடம் சுகபிரம்மர் தவத்தால் கிடைத்த தங்கமகனே புனித தலமான காசியில் தங்கியிருந்து முன்னோர் கடனை சரிவர செய்து வா என வாழ்த்தி அனுப்பி பயணத்தை தொடர்ந்தார்.
தேரோட்டியான அதிரதன் மற்றும் ராதையினால் வளர்க்கப்பட்டவன் கர்ணன். பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே? துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன். மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு. அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான்.
இப்போது கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான். மிகச் சிறந்த வில்வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார். குருவே இது மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம். கலங்கிப்போன குரு சொன்னாராம், “கர்ணா நீ கற்றது வித்தை அல்ல *வேதம்”* என்று.
ஒரு முறை காஞ்சி மகாசுவாமிகளிடம் அன்பர் ஒருவர் மதமாற்றம் தொடர்பான சந்தேகம் கேட்டார். எல்லா மக்களையும் எங்கள் மதத்திற்கு கன்வர்ட் பண்ண வேண்டும் என்பது எங்கள் மதத்தின் கொள்கை. எனவே மாற்றம் செய்வது தவறு ஆகாது எனச் சொல்கிறார்கல் அவர்களுக்கு நாம் என்ன சொல்வது? அவர்கள் செய்யும் தப்புக்கு இப்படி ஒரு சமாதானமா? எனச் சிரித்தார் சுவாமிகள்.
முன்பெல்லாம் ராஜாக்கள் வெறுமனே தங்கள் ராஜ்யத்தை விரிவுபடுத்த போர் தொடுத்தனர். ஹிட்லர் கூட அப்படித்தான். அது போல காரணமின்றி முறைகேடாகப் போர் தொடுப்பதை இன்று உலகம் ஏற்பதில்லை. தேவையின்றி போர் தொடுப்பது குற்றம் என்ற மனப்பான்மை உலகெங்கும் வந்து விட்டது. அந்தக்கால விரிவாக்க கொள்கையை இந்தக் காலத்தில் நியாயப்படுத்த கூடாது.
அது போல ஆதிகால மத விஸ்தரிப்புக் கொள்கையை இந்த காலத்தில் நியாயப்படுத்துவது சரியாகாது. ஒரு தேசத்தின் பகுதிகளைக் கவரப் பார்ப்பது எப்படி தவறோ அது போல ஒரு மதத்தினரை இன்னொரு மதத்தினர் கவரப் பார்ப்பதும் தப்புதான். பிற மதத்தினரின் மூலபுருஷர்கள் கடவுள் சம்பந்தமான சில உண்மைகளைத் தெரிந்து கொண்டனர். அதையே புது மதமாக உருவாக்கினர். அதனடிப்படையில் அனைவருக்கும் நிறைவளிக்க தங்களுடைய மதத்தால் முடியும் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனாலும் அவர்கள் எவ்வளவு பெரியவர்கள் என்றாலும் தங்கள் வழியே சிறந்தது. வேறு வழி கிடையாது என அவர்கல் நியனித்தது சரியல்ல. கடவுள் படைப்பில் எங்கும் எதிலும் வெரைட்டி இருக்கிற மாதிரி மத விஷயத்திலும் ஒரே பரமாத்மாவை அடைய பல வழிகள் இருக்கின்றன என வேதம் சொல்கிறது. இதுவே சத்தியம். அப்படிப்பட்ட பல வழிகளை தனக்குள் அடக்கியிருப்பது தான் இந்து மதம்.
மதப் பிரசாரம் செய்யும் பலருக்கும் நம் மதத்தின் பெருமை தெரிந்திருக்கும். இருந்தாலும் குறை சொல்லிப் பழிப்பதன் காரணம் அதுவே மதக்கடமையாகவே தங்களுக்கு வாய்த்து விட்டதாக கருதும் தொழிலின் நிமித்தம் தான். அரசு ஒவ்வொருவருக்கும் சொத்துரிமை அளித்திருக்கிறது. இதன் பொருள் என்ன? நியாயமாக தனக்கு உரிமையான சொத்தை ஒருவர் அனுபவிக்கலாம் என்பது தானே தவிர மற்றவர் சொத்தில் உரிமை பாராட்டலாம் என்பது ஆகாது இல்லையா? அப்படித்தான் மதச் சுதந்திரம் என்பது அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றும் உரிமையே தவிர மற்ற மதத்தினரை தன்வழிக்கு இழுப்பதற்கான உரிமையல்ல.
மதமாற்றத்தை அறவே கைக்கொள்ளாதது நம் இந்து மதம்., மற்ற மதங்களை வெறுப்பதும் இல்லை. மதமாற்றமும் செய்வதில்லை. அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதே இந்து மதத்தின் கருத்து. கடவுளை அடையப் பல வழிகள் உள்ளன. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வழி. அவரவர் வழியில் சென்றால் யாருக்கும் பிரச்னை இல்லை. விளக்கம் கேட்ட அன்பர் மனம் தெளிந்தார்.
சங்கீர்தம் நாட்டை மன்னர் வேதராஜ் ஆண்டு வந்தார். அவரது மந்திரிசபையில் புத்திகூர்மையும் நேர்மையும் நிறைந்த மந்திரி இருந்தார். மன்னர் முன்கோபக்காரர். அரண்மனையின் உள்ளே காவலாளிகளோ வேலைக்காரர்களோ சிறு தவறு செய்தாலும் உடனே சிறையில் அடைத்து விடுவார். இந்த போக்கு மந்திரிக்கு பிடிக்கவில்லை. மன்னர் நல்லெண்ணம் படைத்தவர். ஆனால் முன்கோபத்தால் அறிவிழந்து செயல்பட்டு வந்தார். அவரின் குணத்தை மாற்றி சிறையில் வாடும் பணியாட்களை காப்பாற்ற முடிவு செய்தார்.
ஒரு நாள்…………….மன்னா…………… வெளி நாட்டில் இருந்து வித விதமான பூச்செடிகள் நம் அரண்மனைக்கு வந்துள்ளன. அவற்றை அரண்மனை தோட்டத்தில் நட்டு வைக்க ஏற்பாடு செய்துள்ளேன். அதை தாங்கள் பார்வையிட வேண்டும்…………….. என்றார் மந்திரி. அழைப்பை ஏற்று மந்திரியுடன் தோட்டத்துக்கு சென்றார். இதோ வலது புறமாக நிற்கிற பூச்செடிகளைப் பாருங்கள்…………….செடிகளின் இலைகளை கிள்ளி நுகர்ந்தாலே நல்ல வாசனை இருக்கும்……………என்று அறிமுகம் செய்தார் மந்திரி. அதை அறியும் ஆசையில் ஆர்வத்தோடு ஒரு செடியில் இலையைக் கிள்ள முயன்றார் மன்னர். உடனே வேரோடு பிடிங்கி வந்தது. அடுத்த செடி இலையையும் கிள்ள முயற்சித்தார். அதுவும் வேரோடு வந்து விட்டது. மன்னா…………… என்ன காரியம் செய்து விட்டீர் ………….. இரண்டு செடிகளையும் பிடுங்கி வீணாக்கி விட்டீரே…………..இவை மிகவும் உயர்ந்தவையாயிற்றே………..நீங்கள் பெரும் குற்றம் செய்துவிட்டீர்கள்…….என்றார் மந்திரி.
மன்னிக்க வேண்டும் மந்திரியாரே…………..செடிகள் வேரோடு பிடுங்கிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கவில்லை……………செடியைப் பிடுங்கி விட்டீர் யார் தவறு செய்தாலும் அதிகபட்சம் தண்டனை கொடுக்கும் நீங்கள் செய்த தவறுக்கு தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும்………………….. மந்திரி இவ்வாறு கூறியதும் மன்னர் யோசனை செய்தார். சிலர் அறியாமையால் தவறு செய்து விடுகின்றனர். அதை குற்றமாக எடுத்துக் கொள்வது சரியல்ல. அவர்களுக்குப் பெரிய தண்டனை கொடுத்து துன்புறுத்துவது பெரிய தவறு…………. இது நாள் வரை இந்த குற்றத்தை செய்து வந்திருக்கிறேன் அதை தான் சுட்டிக் காட்டியுள்ளார் மந்திரி. இனிமேல் இப்படி செய்யக்கூடாது சிறையில் இருப்போரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.
மன்னித்து விடுங்கள் மந்திரி என் அறிவுக் கண்களை திறந்துவிட்டீர் இனி கோபத்துடன் நடந்துகொள்ள மாட்டேன் தவறுகளை பொறுத்து திருந்தும்படி அறிவுரை வழங்குவேன் சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய ஏற்பாடு செய்கிறேன்…………..என்றார். மந்திரி மகிழ்ச்சியடைந்தார். திருத்திய மந்திரிக்கு பரிசுகள் கொடுத்து கௌரவித்தார்.