
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றலில் வேர்க்கடலையின் பங்கு கணிசமானது. முந்திரி பாதாம் பிஸ்தா ஆகியவற்றைவிட வேர்க்கடலையில் சத்து அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. வேர்க்கடலையில் போலிக் அமிலம் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்ணின் கருப்பை சீராக செயல்படுவதுடன் கருப்பைக் கட்டிகள் நீர்க்கட்டிகள் ஆகியன ஏற்படாது.

நிலக்கடலையில் உள்ல ரெஸ்வரெட்ரால் இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கல் வருவதைத் தடுக்க மிகச்சிறந்த ஆன்டி ஆகிஸ்டென்டாக செயல்படுகிறது. மூளையை உற்சாகமூட்டும் உயிர் வேதிப்பொருட்களான பிரிட்டோபான் செரட்டோன் போன்றவை இதில் அடங்கியுள்ளன. நிலக்கடலையில் உள்ள பாலி பினால்ஸ் எனும் ஆண்டி ஆக்சிடென்ட் நோய் வருவதை தடுக்கிறது இளமையைப் பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது. பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக கட்டிகள் தோன்றாமல் காக்கிறது. பரஸ்பரஸ் இரும்பு கால்சியம் பொட்டாசியம் துத்த நாகம் வைட்டமின்கள் குளூட்டாயிக் அமிலம் ஆகியன இதில் நிறைந்துள்ளன. இது ஏழைகளின் பாதாம்.
தகவல் நன்றி கே பிரபாவதி மேலகிருஷ்ணன் புதூர்