மகிஷ சம்ஹாரத்திற்குப் பின் சாந்த சொரூபியாய் திரிபங்க நிலையில் மகிஷாசுரமர்த்தனி சிற்பம்..!!
இக்குகைக் கோயிலிலுள்ள இறைவியை துர்க்கை, கொற்றவை, மகிஷாசுரமர்த்தினி என்று போற்றி மக்கள் வழிபடுகிறார்கள். அன்னை தலையில் ராஜகிரீடம் புனைந்து, எட்டுத் திக்குகளையும் எட்டுக் கரங்களாகக் கொண்டு, இடது மேல் கரத்தில் தண்டம் (வில்) பிடிக்க, மற்ற கைகள் சங்கம், கேடயம் ஏந்தியும், நான்காவது கை தண்டத்தை அணைத்தவாறு அன்னையின் இடது தொடைமீது படிந்துள்ளது. சிம்மத்தின் மீது தன் இடதுகாலைத் தூக்கி வைத்தும், வலது காலைத் தரையில் ஊன்றியும், வெற்றிக்களிப்புடன் காட்சியளிக்கிறாள். அம்மனின் வலது மேற்கைகள் சக்கரம், பெருவாள் பிடித்தும், ஒரு கை கடக முத்திரையோடும், மற்றொரு கையைத் தன் இடைமீது கடிகஸ்தமாகவும் வைத்திருக்கிறாள். காதுகளில் தடித்த குழைகளும், கழுத்தில் மங்கல அணியும், மேற்கையில் தோள்வளையும், மார்பில் மேலிருந்து கீழாக நூலாடையும், முன்கையில் கைவளையும், இடையில் கச்சையும், இடையின் முன் இடைவாரும், பக்கங்களில் ஆடையும், காலில் பாதசரமும் கொண்டிருக்கிறாள். அம்மனைத் தாங்கும் சிம்மம், முன்பக்க இடது காலைத் தரையில் ஊன்றி, முன் வலது காலை மேலே தூக்கிச் சற்றே சாய்ந்த நிலையில், கம்பீரமாகச் சிலிர்த்தெழுவதுபோலக் காட்சியளிக்கின்றது..!!
இதன் காரணமாக முன்கோபுரத்தை அடுத்துள்ள நந்தியும் உள்மண்டபத்தில் உள்ள நந்தியும் விலகியுள்ளன.
திருஞானசம்பந்தா் கோவிலின் உள்ளே புகுந்து வலம் வந்து பட்டீசாின் திருவடித்தாமாரை மலா்களைத் தாிசித்துப் பூமியில் வீழ்ந்து வணங்கி
“பாடல் மறை” என்று தொடங்கும் பாமாலை பாடி திருவருள் திறத்தை வியந்து ஆனந்தப் பெருவெள்ளத்தில் மூழ்கி ஆராத பெருங்காதலுடன் திருக்கோயிலின் புறத்தே இருந்தே மடாலயத்தில் தங்கினாா்.
இதனை நினைவு கூறும் வகையில்
முத்தப் பந்தல் ஐதீக விழா ஆண்டுதோறும் ஆனி மாதம் முதல் தேதியில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. *
ஆசிய ஐரோப்பிய கண்டங்களை உள்ளடக்கிய நாடு ரஷ்யா இதன் வடக்குப் பகுதியில் பெரும் நிலப்பரப்பு உள்ளது. இதுதான் சைபூரியா இதர்கு தூங்கும் நிலம் என பொருள். இங்கிருந்து தான் மனிதகுல மூதாதையர் தோன்றியதாக ஒரு கருத்து உள்ளது.
இங்கு குளிர் காலம் மிகவும் நீண்டது. வெயில் காலம் ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை சில நேரம் நீடிக்கும். அப்படி நீடித்தால் காடுகள் தீப்பிடித்து உறைபனி உருகி பெரும் சேதம் விளைவிக்கும். ஆனால் இப்படி உருகுவது அபூர்வமாக தான் நடக்கும். இங்குள்ள ஓயும்யாகூம் மற்றும் வெர்பகாப்யன்ஸ்க் நகரங்களில் 1933 ல் கடும் குளிர் வாட்டியது. இது மூன்று நாட்கள் நீடித்தது குளிர் மிகுந்த பகுதிகள் இவை.
இங்கு நிலவும் வெப்ப வித்தியாசம் கிடுகிடுக்க வைக்கும். திடீர் என காலை வெப்பம் 30 டிகிரி செல்ஷியசை தொடும் இரவில் மைனச் 60 டிகிரி செல்ஷியசை தொடும். இரவில் மைனச் 60 டிகிரியை தாண்டி குளிர் தாக்கும். ஒரே நாளில் 74 முதல் 100 டிகிரி செல்ஷியஸ் அளவில் தட்ப வெப்ப நிலையில் வித்தியாசத்தை உணர முடியும்.
மாபெரும் விண்கல் விழுந்த பள்ளத்தை சைபீரியாவில் இன்றும் காணலாம். சைபீரியா பகுதி ரஷ்யாவின் 70 சதவீத நிலத்தை கொண்டுள்ளது. ஆனால் மக்கள் தொகையில் 23 சதவீதம் பேர் தான் இங்கு வசிக்கின்றனர். ஒரு கிலோ மீட்டருக்கு மூன்று பேர் என்ற விகிதத்தில் தான் மக்கள் தொகை பரவல் உள்ளது. உலகின் மிக ஆழமானது பைகால் ஏரி. இது சைபீரியாவின் சொத்தாக கருதப்படுகிறது.
ஆப்பிரிக்காவின் அடையாளமாக பாவோபாப் மரங்களை காட்டினால் போதும். அந்த அளவுக்கு புகழ் பெற்றது குண்டாக வளர்ச்சி அடையாதது போன்ற தோற்ற கிளைகளுடன் வித்தியாசமான உருவ அமைப்பை உடையது.
இது 30 மீட்டர் உயரம் வரை வளரும். சுற்றளவு 20 மீட்டர் வரை இருக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் உயிர்ப்புடன் இருக்கும். பழங்காலத்தில் மிகப் பெரிய மரங்களாக இருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஒரு மரத்தைக் குடைந்து 40 பேர் வசித்திருக்கின்றனர் அப்படி என்றால் மரத்தின் பருமனை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆண்டில் ஒன்பது மாதங்கள் பாவோபாப் மரங்களில் இலை இருக்காது. அதனால் மரத்தை தலை கீழாக நட்டு வைத்தது போல தோன்றும். மரத்தின் உட்பகுதி 15 மீட்டர் வரை மென்மையான நாரால் நிரம்பியிருக்கும். அதில் 1.2 லட்சம் லிட்டர் தண்ணீர் வரை சேமிக்கப்பட்டிருக்கும். தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் உயிர் வாழ ஏற்ற வகையில் இந்த சிறப்பைப் பெற்றுள்ளன.
வறட்சி காலத்தில் பாவோபாப் மரத்தில் சிறிது துளை போட்டு தண்ணீரை எடுத்து பயன்படுத்துவர் ஆப்ரிக்க பழங்குடியினர். மரம் பட்டுப்போனாலோ விபத்தில் சாய்ந்தாலோ கிளைகளிலிருந்து புதிய மரங்கள் துளிர்க்கும். இதனால் இந்த மரங்களுக்கு மரணமே இல்லை என்று கூறுவர். இதன் பட்டை மாறுபட்டது மற்ற மரங்களை போல இருப்பதில்லிய. சாம்பல் இளஞ்சிவப்பு நிறங்களில் பளபளப்பாக இருக்கும். இந்த மரம் 20 ஆண்டுகளில் பூக்க ஆரம்பிக்கும். நல்ல பருவ நிலை காணப்பட்டால் ஆண்டு முழுவதும் பூக்கும். அவை வெண்மையாக இருக்கும். இரவு நேரங்களில் மட்டுமே மலரும். பூக்களின் நறுமணத்தால் வௌவால்களும் பூச்சிகளும் படையெடுத்து வரும். இவற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும்.
பூவிலிருந்து உருவாகும் காய் ஆறு மாதங்களுக்குப் பின் பழமாக மாறும். இள நீர் அளவுக்கு பெரியதாக இருக்கும். தடித்த ஓட்டின்மீது பச்சை முடிகள் படர்ந்திருக்கும். பழத்துக்குள் விதைகள் இருக்கும். பழத்தில் டார்டாரி அமிலம் மெக்னீஷியம் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம். ஆரஞ்சு பழத்தில் இருப்பதைவிட ஆறு மடங்கு விட்டமின் சி சத்து உள்ளது. பழத்துக்குள் சிறு நீரக வடிவில் கறுப்பு விதைகள் காணப்படும். இவற்றை வறுத்து பொடி செய்து காபி போல தயாரித்து குடிப்பர் பழங்குடியினத்தவர். பாவோபாப் மர இலைகளை வேக வைத்தும் சாப்பிடுவர்.
இலை பட்டை பழம் விதையிலிருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. மர பட்டையிலிருந்து கயிறு மிதியடி கூடை காகிதம் துணி இசைக்கருவிகள் தண்ணீர் புகாத தொப்பி செய்கின்றனர். உயிரினங்களுக்கு அடைக்கலம் அளித்து பாதுகாப்பதில் பாவோபாப் மரம் தன்னிகரற்றது. இதன் கிளைகளில் பறவைகள் கூடு கட்டி வசிக்கின்றன. யானை இதன் தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கிறது. சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் மனிதர்களின் முறையற்ற நிர்வாகத்தால் பாவோபாப் மரங்கள் அழிந்து வருகின்றன. நீண்ட ஆயுளும் பெரும் பயனும் நிறைந்த இந்த மரங்களை பாதுகாக்க வேண்டியது நம் கடமை
செயற்கையாக மனிதனையே உருவாக்கும் அளவிற்கு இன்று நாம் அறிவியலில் அசுர வளர்ச்சி அடைந்திருந்தாலும் கூட, இயற்கை என்ற மாபெரும் சக்திக்கு முன், அதன் எல்லையில்லா ஆற்றலிடம் மண்டியிட்டு தோற்றுத்தான் போய் விடுகிறோம்.எங்கும் எதிலும் அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சி புரையோடிகிடக்கும் இந்த காலகட்டத்தில் கூட இன்றைய நவீன விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியாத கேள்விகள்நிறைய இருக்கிறது .அப்படிப்பட்ட கேள்விகளில் ஒன்றை பற்றித்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். அந்த கேள்வி ஒளிந்திருக்கும் இடம்தான் சுமார் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமைமிக்க இந்துக்களின் புனிததலமான அமர்நாத் குகைக்கோவில் (Amarnath Cave Temple).விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியாத அந்த கேள்வியை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, முதலில் அந்த கோவில் இருக்கும் இடத்தை பற்றி தெரிந்துகொள்வோம் .
இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து சுமார் 141 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து தோராயமாக 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருப்பதுதான் அமர்நாத் குகைக்கோவில்.இந்துக்களின் புராண இதிகாசங்களின்படி இங்குதான் உயிர்களின் மூல ஆதாரமான சிவன், தனது மனைவியான பார்வதிக்கு வாழ்வியலின் ரகசியங்கள் பற்றி போதித்ததாக கூறப்படுகிறது. இந்துக்களின் சிவ வழிபாட்டு தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் இங்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முன்பே பக்தர்கள் யாத்திரையாகவே வந்து வழிபட்டுசென்றிருக்கிறார்கள் என்று இந்துக்களின் இதிகாசங்களும் புராணங்களும் குறிப்பிடுகின்றன. இக்கோவிலை அடைய நாம் முதலில், ஸ்ரீநகரில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகல்காம் (Pahalgam) என்ற இடத்தை அடைய வேண்டும். பகல்காம் வரை செல்ல சாலை வசதிகள் உண்டு. இந்த பகல்காம் கடல் மட்டத்தில் இருந்து கிட்டதட்ட 7,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இமயமலையின் அடிவாரத்திலிருந்து அதாவது பகல்காமில் இருந்து அமர்நாத் பனிகுகைக்கு செல்ல செங்குத்தான பனிபாறைகளுக்கு நடுவே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். பக்கதர்கள் பெரும்பாலும் பகல்காமில் இருந்து அமர்நாத்திற்கு, மூன்று அல்லது நான்கு நாட்களில் கால்நடையாக நடந்துதான் செல்கிறார்கள். நடக்க முடியாதவர்கள் குதிரை, பல்லக்கு, டோலி போன்றவற்றில் பயணம் செய்கிறார்கள்.சுமார் 150 அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட அமர்நாத் குகைக்குள், மலையின் மேல் பகுதியில் இருந்து வரும் தண்ணீர், குகையின் பின்புறம் உள்ள பாறையின் நடுவில் கொட்டி, அப்படியே உறைந்து பனிக்கட்டியாக மாறி, சிவலிங்கமாக உருப்பெருகிறது. தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாக மாறுவது சாதாரண விஷயம்தான், வியப்பதிற்கில்லை. ஆனால் இங்கே ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலகட்டங்களில் அதுவும் லிங்க வடிவில் தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதுதான் இதுவரை புரியாத அதிசயமாக உள்ளது. இதில் எந்த விஞ்ஞானமோ அல்லது செயற்கையோ கிடையாது.
இங்கே இன்னுமொரு அதிசயம் காத்திருக்கிறது, பனிமலை சூழ்ந்த அமர்நாத்தில் எந்த விலங்கினங்களையும், பறவைகளையும் காண முடியாது. காரணம் அங்கே எந்த உயிரினமும் வாழ முடியாது என்பதுதான். இங்குதான் நம் விஞ்ஞானத்தால் இன்றுவரை பதிலளிக்க இயலாத ஆச்சர்யம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. உயிர்கள் வாழ தகுதியற்ற சூழல் நிலவும் அமர்நாத் குகைக் கோவிலில் இன்றுவரை ஒரு ஜோடி மலைபுறாக்கள் மட்டும் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறது, இவை எப்படி உயிர் வாழ்கிறது என்ற கேள்விக்கு இதுவரை இன்றைய நவீன விஞ்ஞானத்திடம் இருந்து பதில் இல்லை.அதிசய பனிலிங்கத்தை தரிசனம் செய்வதோடு அமர்நாத் யாத்திரை நிறைவு பெறுவதில்லை. அந்தக் குகையில் வசிக்கும் இந்த ஜோடி புறாக்களைப் தரிசித்தால் மட்டுமே அமர்நாத் யாத்திரை நிறைவு பெறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இறைவனும், இறைவியுமே புறாக்கள் வடிவில் காட்சி தருகிறார்கள் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை. விஞ்ஞானம் தோற்றுப்போன வெகு சொற்ப இடங்களில் அமர்நாத்தும் ஒன்று. என்பதே உண்மை.
தெய்வங்களுக்கு ஒரு தலை இரண்டு தலை மூன்று தலை நான்கு தலை ஐந்து தலை ஆறு தலை என தலைகள் எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்கும் ஆனால் பாதங்கள் இரண்டு தான் இருக்கும்.
முருகனுக்கு ஆறு முகம் என்றாலும் அவரது திருவடிகள் இரண்டுதான். ஆனால் மூன்று முகத்துடன் மூன்று பாதங்களும் கொண்ட ஜூரதேவர் வித்தியாசமானவர்.
படைப்பைக் கவனிக்கும் பிரம்மாவின் உதவியாளர்களை பிரஜாபதிகள் என்பர் இவர்களில் ஒருவர் தட்சன் தன் தவ பலத்தால் சிவனின் மனைவி பார்வதி தேவியையே மகளாகப் பெற்றான். அவளுக்கு தாட்சாயணி என பெயர் சூட்டினான். அவளை சிவனுக்கு திருமணம் செய்து வைத்தான். காலப்போக்கில் மாமனார் மருமகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தன் மருமகனை அவமானப்படுத்த தட்சன் யாகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தான். அதற்கு மருமகனையும் மகளையும் அழைக்கவில்லை. இதைத் தட்டிக்கேட்க சென்றாள் தாட்சாயணி. அவளை விரட்டியடித்தான்.
கோபமடைந்த சிவன் வீரபத்திரர் எனும் தன் அம்சத்தை அனுப்பி யாக குண்டத்தை அழிக்க உத்தரவிட்டார். வீரபத்திரருக்கு உதவியாக தன் வெப்பமான உட்லைல் இருந்து தோன்றிய ஜ்வரம் என்ற பூதத்தை அனுப்பினார் அது யாக குண்டத்தை தீக்கிரையாக்கி மீண்டும் சிவனை அடைந்தது. இருப்பினும் அதன் உக்கிரம் தணியவில்லை. இதைத் தாங்க முடியாமல் தேவர்களும் உலக மக்களும் சிரமப்பட்டனர். சிவனை வெப்பத்தை உலகிலுள்ள அத்தனை உயிர்களுக்கும் பகிர்ந்தளித்தார். பிரம்மா ஜெவரத்து ஒரு வடிவத்தையும் கொடுத்த பிரம்மா மற்றவர்களை போல் அல்லாமல் இவருக்கு மூன்று கால்களைக் கொடுத்தார் இவருக்கு ஜூரதேவர் என பெயர் சூட்டப்பட்டது.
ஒருவருக்கு அதிக காய்ச்சல் வந்தால் சக்தியிழந்து கால்கள் தள்ளாடி படுத்துவிடுவார். இவர்கள் ஜூர தேவருக்கு மிளகை அரைத்து பூசினால் மீண்டும் சக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்
சக்தியிழந்த நோயாளிக்கு மூன்றாவது காலாக இருந்து அவரை எழுப்பும் தெய்வம் என்பதால் இவருக்கு மூன்று கால்கள் உள்ளன முக்கிய சிவன் கோயில்களில் தெற்கு பிரகாரத்தில் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும் ஜூர தேவர் சிலைகள். இவர்களில் அதிக சக்திமிக்கதாகக் கருதப்படுபவர் திரு நெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வீரமார்த்தாண்டேஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார்.
இந்தியாவில் பல்வேறு கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்ததாக இருக்கின்றன.அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன. காசிக்கு நிகராக போற்றப்படும் ராமேஸ்வரம் திருக்கோயில் ராமாயணத்துடன் தொடர்புடையது.சீதா தேவி ராவணனிடமிருந்து மீட்கப்பட்ட பின் தன் கற்பை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்தார். அப்போது அக்னியின் சூடு, அக்னி பகவானாலேயே தாங்க முடியாததாக இருந்ததால், அவர் கடலில் மூழ்கி தன் வெப்பத்தை தணித்துக் கொண்டார். அந்த கடல் தான் இராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம்.
ராமேஸ்வரத்தில் இருக்கும் 4 அதிசய லிங்கங்கள்
1.காசிலிங்கம்
ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தை போக்கும், சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட நினைத்தார். ராமபிரானின் ஆணைக்கிணங்க காசியிலிருந்து அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம். இந்த லிங்கம் இன்றும் ராமேஸ்வரம் கோயிலில் உள்ளது.
2.மணல் லிங்கம்
காசி விஸ்வநாதருக்கு நிகராக போற்றப்படக்கூடியதாக சீதா தேவியால் மணலில் உருவாக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமநாதசுவாமி சிவலிங்கம். இது தான் இந்த கோயிலில் மூலவராக இன்றும் உள்ளது.
3.உப்பு லிங்கம்
மற்றொன்று பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் உருவாக்கிய உப்பு லிங்கம்.
ஒருமுறை கோயிலில் உள்ள மணல் லிங்கம், மணலால் செய்யப்பட்டிருக்க முடியாது. மணலால் செய்யப்பட்டிருந்தால் அபிஷேகம் செய்யும் போது அது கரைந்து போயிருக்கும் அல்லவா என்ற தர்க்கம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த அம்பாள் பக்தர் பாஸ்கரராயர் என்பவர், இல்லை மணலால் தான் செய்யப்பட்டது என வாதம் செய்தார்.மற்றவர்கள் நம்ப மறுத்ததால், நான் இப்போது ஒரு உப்பு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்து காண்பிக்கிறேன் என்றார்.அவர் சொன்னதுபோலவே ஒரு உப்பு லிங்க செய்து அபிஷேகம் செய்தார். லிங்கம் கரையவில்லை.
அம்பாள் பக்தனாகவும், சாதாரண மனிதனாகவும் இருக்கக்கூடிய நான் செய்த உப்பு லிங்கமே அபிஷேகம் செய்யும் போது கரையவில்லை என்றால், எம்பெருமான் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமபிரானின் மனைவியான சீதாதேவி செய்த மணல் லிங்க கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது.
இந்த உப்பு லிங்கத்தை வஜ்ராயுத லிங்கம் என்று அழைப்பர். இவரை வழிபட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. ராமேஸ்வரத்தில் சிவராத் திரி அன்று காலை திறக்கும் கோயிலை மறுநாள் பிற்பகலில்தான் மூடுவார்கள். இரவு முழுவதும் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். தேவராரம், திருவாசகம், ருத்ர, சமக பாராயணங்கள் தொடர்ந்து ஒலிக்க நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரத்தில் சுவாமி திருவுலா வந்து அருட்பாலிப்பார்
ஸ்படிக லிங்கம்
ராமேஸ்வரம் கோயில் கர்ப்ப கிரகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை பாலாபிஷேகம் நடைபெறும்.
உலகமே கொரோனா பெருந்தொற்றின் பிடியில் திணறி மெல்ல விடுபட துவங்கியுள்ளது. இந்த நிலையில் அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்திய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி இயல்பு வாழ்க்கை தொடர்கிறது.
இங்கு முக கவசம் கிருமி நாசினி என் எதுவும் பயன்படுத்துவதில்லை. உணவகம் சுற்றுலா தலங்கள் பள்ளி கல்லூரிகல் இயங்குகின்றன. திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்கும் விருந்தினர் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு இல்லை. இங்கு ஒருவர் கூட கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்படவில்லை. இதற்கு யூனியன் பிரதேச நிர்வாகம் கடைப்பிடிக்கும். கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே காரணம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குறித்த தகவல் கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான உடனேயே இங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதல் உள் நாடு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணியர் லட்சத்தீவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. பின் அரசு அதிகாரி பொதுமக்கல் என யாராக இருந்தாலும் லட்சத்தீவுகளுக்குள் வர வேண்டுமானால் கேரள மானிலம் கொச்சி அரசு மருத்துவ மனையில் ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதி கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது.
தொற்று இல்லை என்று உறுதி செய்த பின்னரே லட்சத்தீவுகளின் தலை நகர் கவரட்டிக்கு அழைத்து வரப்படுவர். அங்கு மீண்டும் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப் படுவர் பின் மீண்டும் பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்த பின்பே ஊருக்குள் அனுமதிப்பர். இவ்வளவு முன்னெச்சரிக்கை நடைமுறைகள் இருப்பதால் தான் இங்கு ஒருவருக்குக் கூட இதுவரை தொற்று பாதிப்பு ஏற்படவில்லை நலமிக்க இந்திய தீவு
107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலங்களில் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஜல சயனம்.
2. தல சயனம்:
63 வது திவ்ய தேசமான மாமல்லபுரம் என்னும் மல்லையில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான தல சயனம் . இங்கு திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
3. புஜங்க சயனம் (சேஷசயனம்):
முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான புஜங்க சயனம் (சேஷசயனம்). இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
4. உத்தியோக சயனம் :
12 வது திவ்ய தேசமான திருக்குடந்தை என்னும் கும்பகோணத்தில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான உத்தியோக சயனம் (உத்தான சயனம்). வேறு எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு சாரங்கபாணிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போலான உத்தியோக சயனத்தில் காட்சி தருகிறார்.
5. வீர சயனம் :
59 வது திவ்ய தேசமான திருஎவ்வுள்ளூர் என்னும் திருவள்ளூரில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான வீர சயனம். திருமால், ‘நான் எங்கு உறங்குவது?’ என்று சாலிஹோத்ர முனிவரை கேட்டபோது, அவர் காட்டிய இடம் தான் திருஎவ்வுள்ளூர். இங்கு திருமால் வீரராகவப் பெருமாள் வீர சயனத்தில் காட்சி தருகிறார்.
6. போக சயனம் :
40 வது திவ்ய தேசமான திருசித்திரகூடம் என்னும் சிதம்பரத்தில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான போக சயனம். இங்கு புண்டரீகவல்லி தாயார் சமேதராய் கோவிந்தராஜப் பெருமாள் போக சயனத்தில் காட்சி தருகிறார்.
7. தர்ப்ப சயனம் :
105 வது திவ்ய தேசமான திருப்புல்லாணியில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான தர்ப்ப சயனம். இங்கு ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார்.
8. பத்ர சயனம் :
99 வது திவ்ய தேசமான ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான பத்ர சயனம். இங்கு வடபத்ர சாயி என்னும் வடபெருங்கோவிலுடையானான ஸ்ரீரங்கமன்னார் பெருமாள் வடபத்ர சயனத்தில் காட்சி தருகிறார். பத்ர என்பது ஆலமரத்து இலையை குறிக்கிறது.
9. மாணிக்க சயனம்:
thiruneermalai neervanna perumal temple history in tamil
61 வது திவ்ய தேசமான திருநீர்மலையில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான மாணிக்க சயனம். இங்கு திருமால் அரங்க நாயகி சமேத அரங்கநாதராய் சதுர் புஜங்களுடன் அரவணையில் மாணிக்க சயனத்தில் காட்சி தருகிறார். இத்தலத்தின் சிறப்பாக,இங்கு பெருமாளை நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என நான்கு நிலைகளில் தரிசிக்கலாம்.
10. உத்தான சயனம் :
திருக்குடந்தையில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான உத்தான சயனம். இங்கு திருமால் அரவணையில் உத்தான சயனத்தில் காட்சி தருகிறார்.
1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை அறிவியலை மிஞ்சிய அதிசயம். பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும் படங்களையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் மனிதர்களை போல் மல்லாக்க படுத்துக்கொண்டு 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலை.
நேபால் தலை நகர் காட்மாண்டுவிலிருந்து கிட்டத்தட்ட 9 கிமீ தொலைவில் உள்ளது புத்தானிகந்தா கோவில் இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொடிருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் கிட்டத்தட்ட 14 அடி உயரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை எப்படி இவ்வளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராயச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.
7ம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னர் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது. இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும் இதற்கான அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் தினமும் நடந்த வண்ணமே உள்ளன.