ஆச்சரியம் ஆனாலும் உண்மையே

உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் மட்டுமே தனது முழு வாழ்வையும் கழிப்பது ஆச்சரியம்* … *ஆச்சரியம் ஆனாலும் உண்மையே* –

1. *மரணம்*

என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் கட்டாயம் வந்தே தீரும் என்பதைஅறிந்த மனிதர்கள்,எதைப்பற்றியும்கவலைப்படாமல், தன் கடமைகளைச்செய்யாமல்சிரித்துக் கொண்டிருப்பதும் ஆச்சரியம்…

2.ஒரு நாளில் உலகில் காணும் *பொருள்கள்* அனைத்தும்அழிந்து போகும் என்பதை அறிந்த மனிதன்,அந்த பொருள்களின் மீதுமோகம் கொண்டிருப்பது ஆச்சரியம்…

3  எந்த ஒரு *செயலும்*பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்  விதித்தபடியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன்,கைநழுவிச் சென்றவற்றை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பதுஆச்சரியம்…

4. *மறுமை* வாழ்க்கைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை நம்புகின்ற மனிதன்,அதனைப் பற்றி அக்கறையின்றி வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்…

5. *நரகம்* போன்ற வேதனைகளை பற்றி அறிந்த மனிதன்,அது பற்றி சிந்திக்காமல்தொடர்ந்தும் மேலும் மேலும்பாவம், தவறுகளை செய்வது ஆச்சரியம்…

6. *இறைவன் ஒருவனே*என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு எவருக்கோ வணக்கத்தைநிறை வேற்றுவது ஆச்சரியம்…

7. *சுவர்க்கம்* போன்ற மன நிறைவான வாழ்க்கையை பற்றி அறிந்த மனிதன்,புண்ணியங்களைசேர்க்க மறந்துஉலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் மட்டுமே தனது முழு வாழ்வையும் கழிப்பது ஆச்சரியம்…

ஆச்சரியம் ஆனாலும் உண்மையே*

Leave a comment