
.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ பி பி 2 சி கால்சியம் மற்றும் இரும்புசத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளன. தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா/
வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால் உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ரத்த சோகை நீங்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு நல்ல கொழுப்புக்காய் அதிகரித்து இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். செரிமான பிரச்னைகள் நீங்கிவிடும்
.

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால் முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு முடி நன்றாக கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள். சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலைப் பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால் உடலில் தேங்கியிருக்கும் சளி முறிந்து வெளியேறிவிடும்.
தினமும் கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால் கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்க கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு அதை சீராக செயல்படவும் தூண்டும்.
தகவல் நன்றி ஜோ ஜெயக்குமார் சிவகங்கை மங்கையர் மலர்.